உள்ளுர் அதிகாரசபை தேர்தல் முடிவுகள்

1. தமிழ் மக்களுக்கு – சகல தமிழ்த்தலைமைகளும் ஒன்றுபட வேண்டிய அவசியத்தையும்
2. சிங்கள மக்களுக்கு – அவர்களின் தலைமை மகிந்தவே என்பதையும்
3. சர்வதேசத்துக்கு – இனப்பிரச்சனை என்றும் தீரப்போவதில்லை என்ற சேதியினையும் கூறிநிற்கிறது.

(“உள்ளுர் அதிகாரசபை தேர்தல் முடிவுகள்” தொடர்ந்து வாசிக்க…)

நல்லாட்சியும் மலையக மக்களும்

(கலாநிதி இரா. ரமேஷ்)

1980களின் இறுதிப்பகுதியில் இருந்து, மலையக மக்கள் படிப்படியாக சட்டரீதியாக பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்ட போதும், அதன் உண்மையான பயன்களை, முழுமையாக அனுபவிக்க முடியாதவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். அதற்கு, அம்மக்களின் சமூகப் பொருளாதார நிலை, பெரிதும் சான்றாகக் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய சமூகங்களின் சமூக அபிவிருத்தி மற்றும் பொருளாதார நிலைமைகளுடன் ஒப்பிடும்போது, இது மேலும் புலனாகிறது.

(“நல்லாட்சியும் மலையக மக்களும்” தொடர்ந்து வாசிக்க…)

நிலைக்குமா சங்கரி – சுரேஷ் கூட்டணி

(கே. சஞ்சயன்)
எழுபது வயதைக் கடந்த வயோதிபர்களுக்கு, நகரசபைத் தலைவர் பதவியை வழங்க நாம் தயார் இல்லை”- இது வவுனியா நகரசபைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து,  ஈ.பி.ஆர்.எல்.எப் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் நிகழ்த்திய உரையின் போது கூறிய முக்கியமான ஒரு விடயம்.   வயோதிபர்களுக்குத் தலைவர் பதவியை வழங்க முடியாது என்ற சிவசக்தி ஆனந்தனின் இந்த நிலைப்பாடு, அவர் சார்ந்த கட்சியின் நிலைப்பாடாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். (“நிலைக்குமா சங்கரி – சுரேஷ் கூட்டணி” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையின் பொருளாதரத்தை கிராமிய அடிப்படையில் எவ்வாறு முன்னேற்றலாம்.

கடந்த சில மாதங்களாக முகப்புத்தகத்தில் நீங்கள் கிராமிய பொருளாதாரம் பற்றியும், அதை கிராமிய மட்டத்தில் எவ்வாறு கொண்டு செல்லலாம் என்பது பற்றியும் எழுதி வருகின்றீர்கள். நீங்கள் யார், இது சம்பந்தமான உங்கள் அனுபவங்கள் என்ன ?

நான் அலியார் மவ்சூக் ( ரியால் ), எனது சொந்த ஊர் அக்கரைப்பற்று, கடந்த பதினைந்து வருடத்துக்கு மேலாக இங்கிலாந்தில் வசிக்கின்றேன்.
1979 முதல் 2001 வரை அடிக்கடி எனது சொந்த வியாபாரம் சம்பந்தமாக இந்தியா, பிலிப்பைன், பேங்காக், நைஜீரியா போன்ற நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பிரயாணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. (“இலங்கையின் பொருளாதரத்தை கிராமிய அடிப்படையில் எவ்வாறு முன்னேற்றலாம்.” தொடர்ந்து வாசிக்க…)

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள்: எங்கு சறுக்கியது பலமான எதிர்க்கட்சி…?

(நீரை.மகேந்திரன்)

ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டதும், டெபாசிட் போகும் அளவுக்கு வாக்குகள் குறைந்ததும் பல அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தின் படுதோல்வி என்கிறார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனோ பணநாயகத்தின் பின்னால் செல்லாமல் ஜனநாயகத்தை மதித்ததால் இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி என்கிறார்.

(“ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள்: எங்கு சறுக்கியது பலமான எதிர்க்கட்சி…?” தொடர்ந்து வாசிக்க…)

கேரளாவில் கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் ஹைடெக் மருத்துவமனை

(கா.சு.வேலாயுதன்)

தமிழகத்தில், கூட்டுறவு சங்கங்களை அரசில்வாதிகள் சம்மணம்போட்டு அமர்ந்து சம்பாதிக்கும் மையங்களாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால், பக்கத்து மாநிலமான கேரளத்தில் கூட்டுறவு சங்கத்தின் மூலம், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான வசதிகள் கொண்ட ஒரு மருத்துவமனையை செம்மையாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

(“கேரளாவில் கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் ஹைடெக் மருத்துவமனை” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர்கள் சொந்த நிலங்கள் பறிபோகுதென்று கூக்குரலிடுகையிலெல்லாம்….

தமிழர்கள் சொந்த நிலங்கள் பறிபோகுதென்று கூக்குரலிடுகையிலெல்லாம் சில வேளைகளில் எனக்கேற்படும் சிந்தனையென்னவென்றால்…. அன்று ஈழத்தமிழர்களை எல்லைப்புறங்களில் சென்று குடியேறும்படி அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியினர் அழைப்பு விடுத்தார்கள். எத்தனைபேர் சென்றார்கள்? சென்ற இளைஞர்கள் சிலரும் நுளம்புக்கடி தாங்காமல் ஓடி வந்து விட்டார்கள். பின்னர் வந்தவர்கள் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட மலையகத்தமிழர்கள். அவர்கள் பலிக்கடாக்களாக்கப்பட்டார்கள்.

(“தமிழர்கள் சொந்த நிலங்கள் பறிபோகுதென்று கூக்குரலிடுகையிலெல்லாம்….” தொடர்ந்து வாசிக்க…)

‘சீனாவின் சக்தி வாய்ந்த தலைவர் ஜி ஜின்பிங்’

சீனாவின் சக்தி வாய்ந்த தலைவராக அந்நாட்டின் பிரதமர் ஜி ஜின்பிங் உருவாகியுள்ளார் என்று அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜி ஜின்பிங்கின் சித்தாந்தங்களை அரசியலைமைப்பில் சட்டத்தில் சேர்ப்பதற்கான ஆதரவைப் பெறுவதற்கான வாக்கெடுப்பை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியுள்ளது. இதன் மூலம் மாவோவுக்கு அடுத்து சீனாவின் அரசியலைப்பு சட்டத்தில் ஜி ஜின்பிங்கின் சித்தாந்தங்கள் சேர்க்கப்படவுள்ளன. இதனையடுத்து ஜி ஜின்பிங்கை மாவோக்கு நிகரான சக்தி படைத்தவராக ஜி ஜின்பிங் பார்க்கப்படுகிறார்.

(“‘சீனாவின் சக்தி வாய்ந்த தலைவர் ஜி ஜின்பிங்’” தொடர்ந்து வாசிக்க…)

‘தமிழ்,முஸ்லிம் மக்களின் புரிந்துணர்வை முஸ்லிம் கட்சிகள் பேச தகுதியற்றவர்கள்’ – தீஷான் அஹமட் 

தமிழ், முஸ்லிம் மக்களின் புரிந்துணர்வைப் பற்றி முஸ்லிம் கட்சிகள் இன்று பேசுகின்றார்கள். இவர்கள் பேச வேண்டிய சந்தர்ப்பத்தில் பேசாமல் தற்போது பேசுகின்றார்கள் என, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் பொறியியலாளர் அப்துல் ரஹ்மான் நேற்று (21) தெரிவித்தார். புதிதாக பதிவு செய்யப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக் கட்சியின் பொதுக் கூட்டம் மூதூரில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

(“‘தமிழ்,முஸ்லிம் மக்களின் புரிந்துணர்வை முஸ்லிம் கட்சிகள் பேச தகுதியற்றவர்கள்’ – தீஷான் அஹமட் ” தொடர்ந்து வாசிக்க…)