இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் அண்மைக்காலமாகக் கொரோனாத் தொற்றானது தீவிரமடைந்து வருகின்றது. இந் நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகளையும், வைத்தியசாலைகளிலுள்ள படுக்கைகளையும் அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சரும், அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளருமான டாக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

பில்கேட்ஸ்-மெலின்டா தம்பதிக்கு மணவாழ்க்கை கசந்தது

அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான பில்கேட்ஸ்-மெலின்டா தம்பதியினர் விவாகரத்து செய்துகொள்ளவுள்ளனர். இதுதொடர்பில் தன்னுடைய டுவிட்டர் கணக்கில், பில் கேட்ஸ் பதிவிட்டுள்ளார்.உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் பில் கேட்ஸின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படும். மிகப்பெரிய பணக்கார தம்பதியினர் மட்டுமன்றி மிகப்பெரிய நன்கொடையாளர்கள் தாங்கள் இருவரும் இனியும் திருமணவாழ்வில் முன்செல்வதற்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து 27 ஆண்டுகால திருமணவாழ்வை முடிவிற்கு கொண்டுவரத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

சிறைக்குள் இருந்தும், மோடியை எதிர்த்து ஒரு தேர்தல் வெற்றி!

சமூக செயற்பாட்டாளரான அகில் கோகாய் பா.ஜ.க அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் மீது 13 வழக்குகளைப் பதிவு செய்தது தேசிய புலனாய்வு முகமை.

தமிழகத் தேர்தல் முடிவுகள்

(சாகரன்)

திராவிடக் கட்சிகளின் தேர்தல் வெற்றியை நிறுவி நிற்கும் முடிவுகளை தமிழகத் தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றது. 1967 ஆரம்பித்த இந்த பணம் இரு வேறு முகாங்களாக எம்ஜிஆர் தி.மு.க இல் இருந்து பிரிந்து அ.தி.மு.க ஆரம்பித்த நாட்களில் இருந்து பயணப்பட்டாலும் அடிப்படையில் இரு திராவிட பாரம்பரிய சித்தாந்த செயற்பாட்டின் பயணப்பாட்டுடன் நகர்ந்த வரலாற்றை இந்த தேர்தல் முடிவும் காட்டி நிற்கின்றது.

தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் கைது

விடுதலைப் புலிகளை மீண்டும் முகநூல் வாயிலாக புதுப்பித்த குற்றச்சாட்டில் தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் க.மோகன் நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டுள்ளார. மட்டக்களப்பு செங்கலடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் முகநூல் வழியாக விடுதலைப் புலிகளை மீண்டும் புதுப்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டின் பேரில் 3 மாத கால பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதியினை பெற்று நேற்று இரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தன

தமிழக மாநில சட்டமன்ற தேர்தல் ஒரு கண்ணோட்டம்!

இந்திய ஒன்றியத்தின் ஒற்றை தேசிய சர்வாதிகாரத்தை நொறுக்கியிருக்கிறது மாநிலக்கட்சிகள் தெளிவான அரசியல்!மாநில சுயாட்சியை எண்ணிப்பார்த்திருக்கிறார்கள்! மக்கள் வெவ்வேறு கோணங்களில்! வெவ்வேறான திசைகளில்!

ஜனாதிபதி பிரேமதாஸ வாழ்க்கையின் கடைசி தருணம்


ஜனாதிபதி பிரேமதாஸ வாழ்க்கையின் கடைசி தருணம் நெருங்கிக்கொண்டிருந்தது. அன்றையதினம், ஐக்கிய தேசிய கட்சியின் மேதினப் பேரணி, இரண்டு வழிகளில் வந்துகொண்டிருந்தது. மெசஞ்சர் வீதி பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். பகல் 12.15யை அண்மித்திருந்தது.

பாகிஸ்தானில் வெடிக்கும் வன்முறைகள்

பாகிஸ்தானில் அண்மைக்காலமாக தெஹ்ரீக்-இ-லாப்பாய்க் கட்சியினரால் (டி.எல்.பி) பிரான்ஸ் அரசுக்கெதிராகப் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.

‘சீனா மேலும் அடக்குகிறது, ஆக்ரோஷமாகவிருக்கிறது’

அதிகரித்து வரும் பலம் வாய்ந்ததாக இருக்கின்ற சீனாவானது, உலக ஒழுங்குக்கு சவால் விடுப்பதாகவும், உள்நாட்டில் மேலும் அடக்குமுறையுடன் செயற்படுவதாகவும், வெளிநாடுகளில் மிகவும் ஆக்ரோஷமாக செயற்படுவதாக, சி.பி.எஸ் தொலைக்காட்சியின் 60 மினிட்ஸுடனான நேர் காணலில், ஐக்கிய அமெரிக்க இராஜங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம் ஒரு ஜனநாயக உரிமை

(என்.கே. அஷோக்பரன்)

இலங்கையில், ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி செய்து கொண்டிருந்த 1992ஆம் ஆண்டு காலப்பகுதி. 1977 இலிருந்தே ஐக்கிய தேசிய கட்சிதான் தொடர்ந்து ஆட்சியிலிருந்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்தது. எப்படியாவது ஆட்சியை மீண்டும் பிடித்துவிட, அவர்கள் பகீரதப் பிரயத்தனத்தை முன்னெடுத்த காலகட்டம் அது.