விக்கியின் வியாக்கியானங்கள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், திருகோணமலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், “…சம்பந்தன் எந்தவொரு பிரச்சினையையும் உடனடியாகத் தீர்ப்பதில்லை. ‘பேசுவோம், பார்ப்போம்’ என்று கூறி, விடயத்தைத் தட்டிக்கழிப்பார். அதனாலேயே, பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கின்றன…” என்று, தெரிவித்திருக்கிறார்.

‘சமூக சேவகியான எனக்கு மக்களின் மனங்களில் தனி இடம் உண்டு’

எனக்குப் போட்டியாக, எனது தம்பி வாக்குக் கேட்டாலோ அல்லது வேறு ஒருவர் வாக்குக் கேட்டாலோ, எனது இடம் மக்கள் மத்தியில் நிச்சயம் இருக்குமென, ஐக்கிய தேசிய கட்சியின் ‘யானை’ சின்னத்தில், திருகோணமலை மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக, 7ஆம் இலக்கத்தில் போட்டியிடும் ரோஹினா மகரூப் தெரிவித்தார்.

ஜோர்தான் தாக்குதலுக்கு ஜே.வி.பி கண்டனம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜோர்தானில் தொழில்களை இழந்த இலங்கை பணியாளர்கள் மீது, அந்நாட்டு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில், முறையாக விசாரணைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அபிவிருத்தியை அரசியலும் அரசியலை உரிமையும் நகர்த்த வேண்டும்’

(அதிரதன்)

தமிழர் விடுதலைக் கூட்டணி, மாற்று அரசியலை முன்வைக்கிறது. தமிழர் விடுதலைக் கூட்டணி தகுந்தவர்களை, தகுதியுள்ளவர்களை இந்தத் தேர்தலில் போட்டியிட வைத்திருக்கிறது. எந்த அணியுடனும் போட்டியிடும் வல்லமை, எமது அணிக்கு இருக்கின்றது. நிச்சயமாக, ஓர் ஆசனத்தை மட்டக்களப்பில் கைப்பற்றும் என, மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் முன்னேற்றக் கட்சி சார்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

போலி ஆவணங்களுடன் கோப்பாய் இளைஞன் கைது

போலியாக தயாரித்த ஆவணங்களை ஒப்படைத்து, வர்த்தக கப்பலொன்றில் சேவையாற்றுபவரைப் போன்று, ஐரோப்பியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர், இன்று (28) அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கருணா செய்ததையே இன்று விக்னேஸ்வரன் செய்கிறார்

(என்.ராஜ்)

“கருணா செய்த வேலையை தான் இன்று விக்னேஸ்வரன் செய்திருக்கிறார்” என, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். யாழில், இன்று நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘கொழும்பை புறக்கணித்து சர்வதேசம் தீர்வு வழங்காது’

அரசியலில், நாம் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளோம். சர்வதேச சமூகத்தை, முற்று முழுதாக நாம் நம்பிக் கொண்டிருக்க முடியாது. கொழும்பை முற்றாகப் புறக்கணித்துக்கொண்டு, தமிழ் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு, எந்த நாடும் இன்று தயாரில்லை. அவர்களுக்கு சில எல்லைகள் உண்டு; சில சாத்தியங்களும் உண்டு. ஆகவே, இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் புரிந்துகொண்டு, எமது அரசியலை முன்னெடுக்க வேண்டும். மக்களைப் பொய்யான வழிகளில் அலைக்கழித்துக் கொண்டிருக்க முடியாது. அது அவர்களுக்குச் செய்கின்ற அநீதியாகும், துரோகமாகும்” என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

‘ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கே எமது ஆதரவு’

(க. அகரன்)

ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு தமது ஆதரவைத் தெரிவிப்பதாக அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கத்தின் வடமாகாண இணைத்தலைவர் ஆறுமுகம் புண்ணியமூர்த்தி தெரிவித்தார். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தளம் – 04 – ஈழத் தமிழ் அரசியல் நேற்று, இன்று, நாளை

(தமிழ் விவாதிகள் கழகம்)

ஈழத்தமிழ் அரசியலை நோக்குகின்ற போது மூன்று போக்குகளை அவதானிக்கலாம்.

முதலாவது கோட்பாட்டு ரீதியான சிந்தனைப்போக்கு, இது தமிழரின் விடுதலை அடைவது பற்றிய கோட்பாட்டுருவாக்கம், தமிழ்த்தேசியம்,சுயநிர்ணயம், தனிநாடு போன்றவற்றை உள்ளடக்கியது. இரண்டாவது கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுசார் சிந்தனைப்போக்கு, இது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வை எட்டுவதற்கான செயன்முறை சார்ந்தது.

செங்டு துணைத்தூதரகத்தை மூடுமாறு ஐ. அமெரிக்காவுக்கு சீனா உத்தரவு

சீனாவின் செங்டு நகரத்தில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் துணைத் தூதரகத்தை மூடுமாறு ஐக்கிய அமெரிக்காவுக்கு இன்று சீனா உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில், ஐக்கிய அமெரிக்காவின் ஹூஸ்டனிலுள்ள சீனாவின் துணைத் தூதரகத்தை சீனா மூடுமாறான ஐக்கிய அமெரிக்காவின் இவ்வார வலியுறுத்தலொன்றுக்கு சீனா பதிலளித்துள்ளது.