யார் இந்த பறையர்கள்? ‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு’

பறையர்
இலங்கையின் மலையகத்தை பொறுத்தமட்டில் அதிகபடியான மக்கள் தென்னிந்தியாவில் இருந்து வந்த “ஆதிப்பறையர்கள்”
ஆரம்ப காலங்களில் “பறையர்” என்றால் தமிழ் இனத்தின் மூத்த குடிகள் என அர்த்தம் இருந்தது பிற்காலத்தில் அது திட்டமிட்டே இல்லாமல் ஆக்கப்பட்டு “பறையர்” என்றால் வெறுமனே பறை அடிப்பவர் என்ற அர்த்தத்தோடு மட்டுப் படுத்திவிட்டனர்.
அதிலும் பறை அடிப்பது என்பதை ஒரு சாதிய அடையாளமாக்கி அதை கீழ்மைப் படுத்தி ஆதிகால பறையர்களின் வறுமை நிலையை பயன்படுத்தி அவர்களை திட்டமிட்டே கீழ்நிலை தொழில்கள் என தரம் பிரித்த தொழிலை செய்ய வைத்து அது அவர்களுக்கான குலத் தொழில் என ஆக்கிவிட்டனர்.

போராட்டம் தொடர வேண்டும்

தமிழ்மக்களின் நிலங்கள் சமயதலங்கள் அபகரிக்கபட்டுள்ளன, என்று நில மீட்பு, சமயதலங்கள், மீட்பு என அண்மையில் போராட ஆரம்பித்த சிவில் அமைப்புகளும், சமயபீடங்களும் , சமரசம்பேச புறப்பட்டுள்ளன, போராட நினைத்தால் சமரசம் தேவையில்லை, திருகோணமலையில் இனங்களுக்குள் எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது ,எல்லோரும் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள், சமய தலைவர்களுக்கு‌ம் மதிப்பும், மரியாதையும்உண்டு , தமிழ்மக்களுக்கு பிரச்சினை அரசு நிறுவனமான தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம், வனஇலக்கா இப்படியான அரச நிறுவனங்கள், தமிழ்மக்களின் நிலங்கள் சமயதலங்கள் என்பவற்றை ஆக்கிரமிப்புசெய்துள்ளனர்,இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக நீதிமன்றத்தின் மூலம் அல்லது வேறு போராட்டம் மூலம் தமிழ் மக்களின் பூர்வீகநிலங்களையும், சமயதலங்களையும், மீட்கும்வரை போராட்டம் தொடர வேண்டும், இதற்காக போராடுவதற்கு எல்லா தமிழ்மக்களுக்கும், சிவில்அமைப்புகளுக்கு‌ம் மக்கள்பிரதிநிதிகளுக்கு‌ம், உரிமைஉண்டு என்பதை வலியுறுத்துகிறேன்.

(Sathiyan)

36வது வெலிக்கடை படுகொலை நினைவுநாள் 25-27- யூலை .

1983 யூலை கலவரத்தின்போது வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 53 பேர் இனவெறியர்களினால் படுகொலை செய்ப்பட்டனர். யூலை 25ம் திகதி 35 கைதிகளும்,யூலை 27ம் திகதி 18 கைதிகளும் பலியாகினர். EPRLF இன் மத்திய குழு உறுப்பினரான தோழர் பாஸ்கரன் ,தோழர் தேவகுமார் ஆகிய இருவரும் 27.07.1983 அன்று படுகொலை செய்யப்பட்டனர்.இவர்கள் இருவரும் மட்டு-அம்பாறை பிராந்தியத்திலுள்ள நற்பிட்டிமுனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.படுகொலை செய்யப்பட்ட ஏனையோரின் விபரங்களும் பதிவிடப்பட்டுள்ளன.

ஸ்ரீ லங்கன் நிறுவன அலுவலகங்கள் இடமாற்றம்

ஸ்ரீ லங்கன் நிறுவனத்தின் அலுவலகங்கள் அனைத்தும் கட்டுநாயக்க ஸ்ரீ லங்கன் விமான சேவை மத்திய நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதற்கமைய, இதன் முகவரி விமான சேவை மத்திய நிலையம் பண்டாரநாயக்க மத்திய நிலையம் கட்டுநாயக்க என மாற்றப்பட்டுள்ளது.

அந்த சமுதாயம் அழியப் போகிறது என்று அர்த்தம்…..?

எந்த ஒரு சமுதாயம் கேளிக்கைக்காக அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறதோ அந்த சமுதாயம் அழியப் போகிறது என்று அர்த்தம். உலகையே ஆண்ட மிகப்பெரிய ரோம சாம்ராஜ்ஜியம் கேளிக்கையை பிரதானமாக நினைத்து, அதற்காக ஆட்களைக் கொண்டுவந்து, பெரிய ஸ்டேடியங்கள் அமைத்துக் கொண்டாடியதால் அழிவை நோக்கிச் சென்றது. மங்கோலியர்கள், மாயங்கள், பாரசீகர்கள் எல்லோருக்கும் மிகுந்த சொகுசு வந்த பிறகு கேளிக்கையில் கவனம் செலுத்தியதால் அழிந்தார்கள். அந்த அழிவை நோக்கி நாமும் செல்லவேண்டாம் என்று நினைக்கிறேன். பிக் பாஸ் உட்பட எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதற்காக அதிக நேரம் செலவிடுவது, அதைப் பற்றியே எப்போதும் பேசிக்கொண்டிருப்பது, முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் அதையே விவாதிப்பது எல்லாம், மக்கள் அதற்கு அடிமையாகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. மனநல மருத்துவராக எச்சரிக்கவேண்டியது எங்கள் கடமை. மக்கள் எதற்காகவும் அந்த நிகழ்ச்சிகளைப் பார்க்காமல் புறக்கணிப்பதுதான் நல்லது.

  • மனநல மருத்துவர் ஷாலினி

தவணை பரீட்சையின் போது காலி மாவட்டப் பாடசாலையில் நடந்தேறிய நெகிழ்ச்சியான சம்பவம்!

தென்னிலங்கையின் காலி மாவட்டம் உடலமத்த எனும் இடத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 23.07.2019 அன்று மாணவி ஒருவரின் செயற்பாடு சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

உலகளாவிய கோப்பி நெருக்கடி: எனது குருதியே, உனது கோப்பி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள், எவ்வாறு எம்மை வந்தடைகின்றன என்பதை, பெரும்பாலும் நாம் அறிந்திருப்பதில்லை. பெட்டிக்கடைகள் இருந்த காலம் போய், இன்று மாபெரும் பல்பொருள் அங்காடிகளில், பொருள்களை வகைவகையாகப் பிரித்து, அடுக்கி வைத்திருப்பவற்றில் இருந்து, தெரிந்து வாங்குவது வழக்கமாகிவிட்ட நிலையில், பொருள்கள் குறித்த சிந்தனைகளும் அது பற்றிய சிந்தனை முறைகளும் எம்மிடம் மாற்றமடைந்து விட்டன.

தளர்ந்து வரும் மஹிந்தவின் ‘பிடி’

(கே. சஞ்சயன்)
‘ஆடி போய் ஆவணி பிறந்தால், நல்லது நடக்கும்’ என்று சோதிடர்கள் கூறுவது வழக்கம். அதுபோல, ஆடி மாதம் முடிந்து, ஆவணி மாதம் எப்போது பிறக்கும் என்று, பிரதான அரசியல் கட்சிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில், ஐ.தே.க வரும் ஓகஸ்ட் ஐந்தாம் திகதி, தனது புதிய கூட்டணியை அறிவிக்கப் போகிறது. அதை ஒட்டியதாக, ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

மலர்ந்தது மொட்டின் புதுக்கூட்டு

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும், மேலும் சில கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், இன்று முற்பகல் கையெழுத்திடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றில் அங்கத்துவம் வகிக்காக 10 கட்சிகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, 29 அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியதுடன், அவற்றில் 10 கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது”?

(-புஷ்பராணி சிதம்பரி)

ஈழத்தின் வடபுலத்தில் மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும் புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TELO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப் போராட்ட வரலாறில் முதன் முதலாகச் சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில் பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப் போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் இவர் ஆயுதப் போராட்டத்தினாலேயே எமக்குத் தீர்வு உண்டு என்று அப்பொழுதே எண்ணத்தொடங்கியவர். அண்மையில் இவரால் தமிழ் எழுத்துப் பரப்புக்கு “அகாலம் ” என்ற நூல் எமக்கு கிடைத்துள்ளது.