மைத்திரி-மஹிந்த சந்தித்தனர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று வியாழக்கிழமை சந்தித்துக்கொண்டனர். அமரபுர மகாநாயக்க அதி.வண தவுல்தென ஞானிதிஸ்ஸரவின் 100 ஆவது பிறந்தநாள் வைபவம், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. வைபவத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முதலில் வருகைதந்தார். அதன்பின்னரே மஹிந்த ராஜபக்ஷ வருகைதந்தார். முதல் வரிசையில் அவ்விருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர்.