விசாரணைகளில் நம்பகத்தன்மையையே ஐ.நா விரும்புகிறது?

போர்க்குற்றங்கள் தொடர்பான உண்மையான விசாரணைகளின் மூலம், சிறிலங்கா அரசாங்கம் நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவதையே ஐ.நா விரும்புவதாக ஐ.நா. பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நேற்றுமுன்தினம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ”சிறிலங்காவில் முறையான விசாரணைகளின் மூலம் நல்லிணக்கம் மற்றும் இருதரப்பு பொறுப்புக்கூறலின் ஊடாக உண்மையான மறுசீரமைப்பிற்கு சிறந்த சந்தர்ப்பமாக தற்போதைய சூழல் அமைந்துள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் விசாரணைப் பொறிமுறையை முன்னெடுக்கவுள்ள நிலையானது சிறிலங்கா அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை முந்தியது சீனா!

சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டவர்கள் வரிசையில் முன்னிலையில் இருந்த இந்தியாவை வீழ்த்தி சீனா அந்த இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில், சீனாவில் இருந்தே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் சிறிலங்கா வந்துள்ளனர் என்று அதிகாரபூர்வ தரவுகளின் மூலம் அறியமுடிந்துள்ளது. பெப்ரவரி மாதத்தில், 32,186 சீனர்கள் சிறிலங்கா வந்துள்ளனர். இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17.4 வீத அதிகரிப்பாகும். அதேவேளை பெப்ரவரியில், 26,559 இந்தியர்கள் சிறிலங்காவில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியை விட 33 வீத அதிகரிப்பாகும். கடந்த ஜனவரியில் 28,895 இந்தியர்களும், 26,083 சீனர்களும் சிறிலங்காவில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டனர். இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களின் அடிப்படையில், சீனர்களே அதிகளவில் சிறிலங்கா வந்துள்ளனர்.

(“இந்தியாவை முந்தியது சீனா!” தொடர்ந்து வாசிக்க…)

மகிந்தவின் கோட்டைக்குள் நுழைகிறார் மைத்திரி

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் கோட்டையாக கடந்த ஒரு ஆண்டு காலமாக விளங்கி வந்த நாரஹேன்பிட்டிய அபயராமய விகாரைக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன செல்லவுள்ளார்.  நாளை சிறிலங்கா அதிபர் அபயராமய விகாரைக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மைத்திரிபால சிறிசேன அபயராமய விகாரைக்குச் செல்வதில் அரசியல் முக்கியத்துவம் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அபயராமய விகாரையின் ஞாயிறு பாடசாலை மாணவர்களுக்குப் பரிசளிக்கவே அவர் அங்கு செல்லவுள்ளார்.

(“மகிந்தவின் கோட்டைக்குள் நுழைகிறார் மைத்திரி” தொடர்ந்து வாசிக்க…)

மன நோய் [2] உள்ளமும் உடம்பும்!

றுதிமிக்க மனம்தான் மனிதனின் உண்மைப் பலம். யானையின் பலம் தும்பிக்கையிலே, மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்று, அடுக்கு வசனமாய்ப் பலர் மேடையில் பேசக் கேட்டிருக்கிறேன். பேசுவது சுலபம், செயல்படுத்துவதுதான் கடினம். ஆனாலும், மனம் மட்டும் உறுதியாகிவிட்டால், நாம் நினைத்ததைச் சாதிக்கலாம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மனதை ‘அகம்’ என்றும் உடம்பைப் ‘புறம்’ என்றும், நம் இலக்கியங்கள் பேசுகின்றன. அத்திவாரத்தின் பலம் தான் கட்டிடத்தின் பலம். அகம்தான் புறத்தின் வலிமையை உறுதி செய்கிறது. அதனாற்றான், உள்ளத்தனைய உயர்வு என்கிறார் வள்ளுவர். இன்று பலரும் உடம்பைப் பற்றிக் கவலைப் படுகின்றனரே தவிர, உள்ளத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை ஆண்கள் உடலை உறுதிசெய்ய நினைந்து, ‘ஜிம்’களில் குவிகின்றனர்.

(“மன நோய் [2] உள்ளமும் உடம்பும்!” தொடர்ந்து வாசிக்க…)

வீடியோ கான்பரன்சிங் மூலம் கொலை வழக்கு விசாரணை!

கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை முன்னாள் மந்திரி டக்ளஸ் தேவானந்தாவிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னை செசன்சு கோர்ட்டு இன்று விசாரணை நடத்தியது. தமிழக நீதித்துறை வரலாற்றில் வெளிநாட்டில் உள்ள நபரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தியது இதுவே முதல் முறையாகும். ஈழ மக்கள் புரட்சிக்கர விடுதலை முன்னணி இயக்கத்தின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா. இவர், 1986ம் ஆண்டு சென்னை சூளை மேட்டில் தன் இயக்கத்தை சேர்ந்தவர்களுடன் தங்கியிருந்தார். அந்த ஆண்டு நவம்பர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அப்பகுதி மக்கள் வெடி வெடித்தனர்.

(“வீடியோ கான்பரன்சிங் மூலம் கொலை வழக்கு விசாரணை!” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 17)

1965 பொதுத் தேர்தலின் பின் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சன்னியர் செல்லையாவுக்கு எதிராக வெள்ளையன் சின்னதம்பி என்பவர் எமது வட்டாரத்தில் களத்தில் இறக்கப்பட்டார்.இவர் மிகவும் சரச்சைக்குரியவர்.சின்னதுரையின் தங்கையின் கணவர்.நடராசாவின் மைத்துனரின் மாமனார் .இத்தேர்தலில் செல்லையா தோற்கடிக்கப்பட்டார் .அவரால் இயக்கப்பட்ட வெல்ல தொழிற்சாலை செயலிழந்தது.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 17)” தொடர்ந்து வாசிக்க…)

விமான நிலைய விஸ்தரிப்பு? மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது!

வலிகாமம் வடக்கு பலாலி விமான நிலையம், மயிலிட்டி துறைமுகம் ஆகியவற்றின் விஸ்தரிப்பு பணகளுக்காக பொதுமக்களின் நிலங்களை சுவீகரிக்கும் எண்ணம் இல்லை என மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார். கோப்பாய்- செல்வபுரம் பகுதியில் இடம் பெயர்ந்த மக்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சினால் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டப் பணிகளை இன்றைய தினம் அமைச்சர் பார்வையிட்டார்.

(“விமான நிலைய விஸ்தரிப்பு? மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது!” தொடர்ந்து வாசிக்க…)

நளினியின் தண்டனையை குறைப்பதை எதிர்த்த ஜெயலலிதா இன்று நாடகம் ஆடுவது ஏன்?

நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க சோனியா மனிதநேய உணர்வோடு பரிந்துரைத்ததை தேசவிரோதச் செயல் என்று விமர்சனம் செய்த ஜெயலலிதா இன்று 7 பேருக்காக நாடகம் ஆடுவது ஏன்? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

(“நளினியின் தண்டனையை குறைப்பதை எதிர்த்த ஜெயலலிதா இன்று நாடகம் ஆடுவது ஏன்?” தொடர்ந்து வாசிக்க…)

தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமைக்காக பிரபாகரன் வருந்தினார்?

தாம் வழங்கிய அரசியல் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருந்தினார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். தாம் ஜனாதிபதியாக ஆட்சி வகித்த காலத்தில் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்ததாகவும் அதனை பிரபாகரன் நிராகத்திருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், அரசியல் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமைக்காக பிரபாகரன் பின்னர் வருந்தியுள்ளார் என சந்திரிக்கா தெரிவித்துள்ளார். லண்டனில் பணியாற்றிய அடிக்கடி யாழ்ப்பாணம் சென்று வரும் நபர் ஒருவரிடம் ‘பிரபாகரன், இவ்வாறு அரசியல் தீர்வுத் திட்த்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என வருந்தியுள்ளார் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

(“தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமைக்காக பிரபாகரன் வருந்தினார்?” தொடர்ந்து வாசிக்க…)

முகாம் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்!

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள 38 நலன்புரிமுகாம்களில் வசித்து வருகின்ற பொதுமக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை (04) முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு முகாமிலும் ஒரு கிழமை என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டமானது, முதலில் சுன்னாகம் கண்ணகி முகாமில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. தாங்கள் முன்னெடுக்கும் போராட்டத்தின் முடிவிலும், தங்கள் சொந்த நிலங்களுக்கு போக முடியாமல் போனால், தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெள்ளைக் கொடிகளுடன் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கும் தங்கள் காணிகளுக்குச் செல்வோம் என முகாம் மக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதற்கு முன்னர் தங்கள் குடும்ப அட்டைகளை மாவட்டச் செயலகத்திடம் ஒப்படைத்து விட்டு செல்வோம் என்றனர்.