இலங்கை அகதிகள் தாயகம் திரும்புதல் அதிகரித்தால் கப்பல் பயணம் அவர்ககளுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து 25.10.16 காலை 9.30 மணிக்கு இலங்கை செல்லும் மிஹின்லங்கா விமானத்தில் 15 பெண்கள்,10 ஆண்கள் என 25பேர் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகத்தின் அனுசரனையுடன் தாயகம் திரும்பினர். இவர்களில் தாப்பாத்தி முகாமில் இருந்து 2 ஆண்கள், 2 பெண்கள் இவர்கள் 1990 இல் தமிகத்திற்கு சென்றவர்கள், வவுனியாவைச் சோந்தவர்கள்.திருமுர்த்தி நகர்,உருத்திரபுரம் முகாமில் இருந்து 6 பெண்கள்,4 ஆண்கள இவர்கள் கிறிநொச்சி முறிப்பு,உருத்திரபுரத்தைச்சேர்ந்தவர்கள். திருப்பூர் பெருமாள்புரம் முகாமைச்சேர்ந்த 2 பெண்,2 ஆண் இவர்கள் சம்பூர்,முதூரைச் சேர்ந்தவர்கள. இவர்கள் 1990 அகதிகளாக சென்றுள்ளனர்.வெம்பக்கோட்டை முகாமைச் சோந்த 1 பெண் இவர் மாத்தளைக்குச் செல்கிறார், 1990 இல் அகதியாக சென்றவர்.பெருமாள்புரம் முகாமில் இருந்து 1990 வந்த 3 பெண்கள்,1 ஆண் இவர்கள் கிளிநொச்சி செல்கிறார்கள்,மதுரை திருவாதவூர் முகாமில் இருந்த 1 பெண் , ,ஆண் 1 வட்டக்கச்சி கிளிநொச்சி செல்கிறார்கள் இவர்கள் 1990 இல் தமிகத்திற்கு அகதிகளாச் சென்றவர்கள்.

(“இலங்கை அகதிகள் தாயகம் திரும்புதல் அதிகரித்தால் கப்பல் பயணம் அவர்ககளுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும்.” தொடர்ந்து வாசிக்க…)

மீரியபெத்த இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டமும் மலையக மக்களின் காணி வீட்டு உரிமை ஆய்வரங்கும் 2016.11.06, 9.30 மணிக்கு, நகரசபை மண்டபம், ஹட்டன்.

மலையக சமூக நடவடிக்கை குழுவினால் மீரியபெத்த பேரவலம் இடம்பெற்ற ஒக்டோபர் 29ஆம் திகதியை மலையக மக்களுக்கான காணி வீட்டு உரிமை தினமாக, பேரவலம் இடம்பெற்று ஒரு மாதத்தின் பின்னர் இடம்பெற்ற நினைவஞ்சலிக் கூட்டத்தில் பிரகடனம் செய்திருந்தது. அந்த வகையில் மலையக சமூக நடவடிக்கை குழுவின் ஏற்பாட்டில் மலையக மக்களின் காணி வீட்டுரிமையை வலியுறுத்தி மீரியபெத்த பேரவலத்தில் உயிரிழந்த உறவுகளுக்கான 2வது ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டமும் மலையக மக்களின் காணி வீட்டு உரிமை ஆய்வரங்கும் எதிர்வரும் 2016.11.06ஆம் திகதி (ஞாயிறு) காலை 9.30 மணிக்கு ஹட்டன் நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

(“மீரியபெத்த இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டமும் மலையக மக்களின் காணி வீட்டு உரிமை ஆய்வரங்கும் 2016.11.06, 9.30 மணிக்கு, நகரசபை மண்டபம், ஹட்டன்.” தொடர்ந்து வாசிக்க…)

சங்க காலமும் கீழடி புதை நகரமும்

சங்க இலக்கியங்கள் கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட கால தமிழர் வாழ்வியலையும் அவர் தம் பண்பாட்டு கூறுகளையும், நாகரிக செழுமையயையும் எடுத்தியம்புகின்றன். ஆனால் அவற்றுக்கான தொல்லிதல் சான்றுகள் மிகக் குறைவாகவே கிடைத்தன . உலகின் பல நாகரிகங்களின் செழுமையயை எகிப்தும், மொசப்பட்டோமியாவும், மொகஞ்சதாரோவும், கிரெக்கமும், ஏதன்சும் பறை சாற்றி நிற்கின்றன. தமிழர்களின் பண்டை நாகரிகத்தின் அழிந்து போன பல நகரங்களை நாம் கற்பனையிலேயே காணவேண்டியிருந்தது.

(“சங்க காலமும் கீழடி புதை நகரமும்” தொடர்ந்து வாசிக்க…)

த‌மிழ் ஊட‌க‌ங்க‌ளை “ஆதிக்க‌ சாதியின‌ரின் ஊதுகுழ‌ல்” என்று அழைப்பதில் என்ன‌ த‌வ‌று?

புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌ மார்க்சிய‌ லெனினிச‌க் க‌ட்சி ந‌ட‌த்திய‌, சாதிய‌ தீண்டாமைக்கு எதிரான 50 வ‌து ஆண்டு நிறைவை கொண்டாடும் பொதுக்கூட்ட‌ம், யாழ் ந‌க‌ரில், றிம்ம‌ர் ம‌ண்ட‌ப‌த்தில் ஞாயிற்றுக்கிழ‌மை (23-10-16) ந‌டைபெற்ற‌து. அந்த‌ நிக‌ழ்வில், இளைஞ‌ர் முத‌ல் முதியோர் வ‌ரை நூறுக்கும் குறையாத‌ பார்வையாள‌ர்க‌ள் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். ஆனால், முக‌நூலில் க‌ம்யூனிஸ்டுகளுக்கு எதிராக‌ க‌ம்பு சுழ‌ற்றும் வீர‌ர்க‌ள் யாரையும் அங்கு காண‌வில்லை.

சில‌ தின‌ங்க‌ளுக்கு முன்ன‌ர், “யாழ்ப்பாண‌த்தில் க‌ம்யூனிஸ்டுக‌ளா? ந‌ம்ப‌ முடிய‌வில்லை!” என்று வ‌ர்க்க‌த் திமிருட‌ன் ப‌திவிட்ட‌, ஜெரா த‌ம்பி, யோ. க‌ர்ண‌ன் போன்ற‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளுக்கு முன்கூட்டியே அறிவிக்க‌ப் ப‌ட்டிருந்தும் இருவ‌ரும் அங்கு ச‌மூக‌ம‌ளிக்க‌வில்லை. அவ‌ர்க‌ளுக்கு என்ன‌ நிர்ப்ப‌ந்த‌மோ? ப‌டிய‌ள‌க்கும் முத‌லாளிக்கு விசுவாச‌மாக‌ ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டாமா?

அது ம‌ட்டும‌ல்ல‌, நிக‌ழ்ச்சி தொட‌ர்பாக‌ க‌ட்சி தயாரித்த‌ அறிக்கை, அனைத்து த‌மிழ்ப் ஊட‌க‌ங்க‌ளுக்கும் அனுப்ப‌ப் ப‌ட்டிருந்த‌து. ஆனால், ஒரு ப‌த்திரிகை கூட‌ அதைப் பிர‌சுரிக்க‌வில்லை! ஆகையினால், த‌மிழ் ஊட‌க‌ங்க‌ளை “ஆதிக்க‌ சாதியின‌ரின் ஊதுகுழ‌ல்” என்று அழைப்பதில் என்ன‌ த‌வ‌று?

(Kalai Marx)

கோவில் தேரிழுக்க இராணுவத்தை அழைக்கும்போது வராத இனவாதம்……?

கோவில் தேரிழுக்க இராணுவத்தை அழைக்கும்போது வராத இனவாதம் மாணவர்களை சுட்டதால் எப்படி வந்தது.இப்படி எத்தனை சம்பவங்கள் தமிழ்ப் பொலிசாரினால் கடந்த காலங்களில் மறைக்கப்பட்டன என்பது தெரியாமல் உளறுகிறார்கள்.தமிழன் சுட்டால் இனவாதம் இல்ல.சிங்களம் பேசுபவர் சுட்டால் இனவாதம்.புலிகள் தெருத்தெருவாகச் சுட்டபோது கொந்தளிக்காத சமூகம் இப்போது கொந்தளிப்பது ஏன்.அரசியல் பிழைப்பு.சமூகத்தை சீரழிப்பது,சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது.என்ன மலிவான அரசியல் சிந்தனை.சட்டத்தை மதிக்காத பல்கலைக் கழக மாணவர்கள் நாளை எப்படி சமூகத்தை கட்டி எழுப்புவார்கள். பொலிசாரின் நடவடிக்கை தவறானது.கண்டுக்க வேண்டியது.சட்டம் நிர்வாகத்துக்கு உட்பட்ட தவறு. மன்னிக்க முடியாதது.ஆனால் அதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவது இனவெறியை ஊக்குவிப்பதும் மன்னிக்க முடியாது.

(Vijaya Baskaran)

விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்தார்

லண்டனில் புலம்பெயர் அமைப்பால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் விடுதலைப் புலிகளின் கொடி ஏந்தப்படுவதற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார். கிங்ஸ்டன் நகரம் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் இரட்டை நகர் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக வடக்கு முதலமைச்சர் லண்டன் சென்றிருந்தார். குறித்த உடன்படிக்கை கிங்ஸ்டன் மாநகரத்தில் கடந்த 18ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

(“விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்தார்” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு சிங்கள தலைவனுக்கு சிரம் தாழ்த்துகிறேன்..!

பாராளுமன்றில் அனுர குமார அவர்கள் மலையக மக்கள் தொடர்பாக நிகழ்த்திய உரை என்னை நெகிழச் செய்தது. உணர்ச்சி பூர்வமான, நியாயமான உரைக்காக தனிப்பட்ட ரீதியில் எனது நன்றிகளை பகிர்கிறேன்.

(“ஒரு சிங்கள தலைவனுக்கு சிரம் தாழ்த்துகிறேன்..!” தொடர்ந்து வாசிக்க…)

சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகள் வன்முறையைத் தூண்டுவதாக அமைந்துவிடக்கூடாது.

நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டிப்பதுடன், அச்சம்பவம் தொடர்பான எனது மனவருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று நாடாளுமன்றத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

(“சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகள் வன்முறையைத் தூண்டுவதாக அமைந்துவிடக்கூடாது.” தொடர்ந்து வாசிக்க…)

கொல்லப்பட்ட மாணவர்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் அரசியல் பிழைப்பும் பேரினவாதிகளும்

யாழ்ப்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கற்கும் இரண்டு மாணவர்கள் இலங்கைப் பொலிசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பான அதிர்வலைகள் மக்கள் மத்தியிலும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலும் அதன் எதிர்த் தரப்பிலும் பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இலங்கைப் பொலிஸ் படை இரண்டு மாணவர்களை அதிகாலை வேளையில் கொன்று போட்டுவிட்டு அதற்கான தடயங்களை அழித்துவிட்ட சம்பவம் ஒரு வகையான அச்ச உணர்வைச் சமூக மட்டத்தில் தோற்றுவித்துள்ளது. இரண்டு கொலைகளின் பின்புலத்திலுள்ள அரசியல் காரணங்கள் எதுவாயினும், அவற்றை முன்வைத்து நடத்தப்படும் பிழைப்புவாத அரசியல் ஆபத்தானது. இலங்கையின் இன்றைய அரசியல் சூழலின் குறுக்குவெட்டு முகம் கொலைகளின் பின்னே தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது.

(“கொல்லப்பட்ட மாணவர்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் அரசியல் பிழைப்பும் பேரினவாதிகளும்” தொடர்ந்து வாசிக்க…)