யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில் யாழ்,மட்டக்களப்பு,பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய கவன ஈர்ப்பு போராட்டம்…….

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய கவன ஈர்ப்பு போராட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மகஜர் கையளிப்புடன் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த மகஜரானது யாழ். பல்கலைக்கழக அனைத்துப் பீட மாணவர் ஒன்றியத் தலைவர்களினால் யாழ் அரசாங்க அதிபர் மற்றும் வட மாகாண ஆளுனர் சார்பாக அவரது பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டு அவர்கள் ஊடாக ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் போராட்டம் அமைதியான முறையில் முடிவுற்றது. இதனையடுத்து துண்டிக்கப்பட்டிருந்த ஏ9 வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியதுடன் யாழ் மாவட்ட செயலக பணிகளும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதேவேளை மாணவர்களின் போராட்டத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

(“யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில் யாழ்,மட்டக்களப்பு,பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய கவன ஈர்ப்பு போராட்டம்…….” தொடர்ந்து வாசிக்க…)

அவா குழு உரிமை கோரியுள்ளது போலீசாரை வெட்டியது !!!!!!

அவா குழு உரிமை கோரியுள்ளது போலீசாரை வெட்டியது! காரணம் ,உயிர் நீத்த பல்கலைக்கழக மாணவர்களை சுட்டுக்கொண்டதன் விளைவே போலீசாரை வெட்டியது .. ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை காணிக்கை ஆக்குகின்றோம்.அவா குழு அவசரமாக வளர்கின்றது,
சுன்னாகம் சந்தைப் பகுதியில், முகமூடி அணிந்திருந்த நபர்களினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், இரு பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துக்கு ‘ஆவா’ குழு உரிமை கோரியுள்ளது.

(“அவா குழு உரிமை கோரியுள்ளது போலீசாரை வெட்டியது !!!!!!” தொடர்ந்து வாசிக்க…)

மாணவர்களின் கொலைக்கு நீதி கேட்டு நடாத்தப்படும் போராட்டத்திற்கு யார் தலமை தாங்கவேண்டும் …?

(சாகரன்)

மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்தும் இதற்கு நீதிகோரியும் பிரதேசம் தாண்டி இன மத மொழி வேறுபாடுகள் இன்றி மக்கள் இயல்பாக வீதியில் இறங்கி போராடினார்கள். இந்த ஐக்கியமான போராட்டத்தை ஏனைய விடயங்களிலும் விஸ்தரிப்பதற்குரிய தலமையை… செயற்பாட்டை… நாம் இனம் மொழி சமய வேறுபாடுகளைக் கடந்து உருவாக்கியிருக்கு வேண்டும் அவ்வாறு நாம் செய்வில்லை.

(“மாணவர்களின் கொலைக்கு நீதி கேட்டு நடாத்தப்படும் போராட்டத்திற்கு யார் தலமை தாங்கவேண்டும் …?” தொடர்ந்து வாசிக்க…)

இன்று ஆர்ப்பாட்டம்; நாளை ஹர்த்தால்

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பலியான சம்பவத்தைக் கண்டித்து, வட மாகாணம் முழுவதும், நாளை செவ்வாய்க்கிழமை (25), ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய ஏழு கட்சிகளால் விடுக்கப்பட்டுள்ள இந்த ஹர்த்தால் அழைப்புக்கு, யாழ். மாவட்ட வர்த்தகர் சங்கமும் ஆதரவு வெளியிட்டு, அக்கட்சிகளுடன் இணைந்துள்ளது.

(“இன்று ஆர்ப்பாட்டம்; நாளை ஹர்த்தால்” தொடர்ந்து வாசிக்க…)

பேரவலத்தின் பின்னரும் தொடரும் எம்மவர் அவலம்!?

முள்ளிவாய்க்கால்வரை நீடித்த எமது ஆயுத போராட்டம் அரச பயங்கரவாதத்தால் ஆரம்பித்து, சகோதர படுகொலை வரை தொடந்து பின்னர், ஒரு மொழி பேசும் சகோதர இனத்தின் மீதான வன்மமாக மாறியது மட்டுமன்றி, அப்பாவி சிங்கள பொதுமக்களையும் பலிகொண்டு இறுதியில் தானும் பலியாகிப் போனது. கல்வியில் பண்பாட்டில் விருந்தோம்பலில் ஒழுக்கத்தில் அன்னியரும் மெச்சத்தகு இனமாக இருந்த எம்மவர் வாழ்வில், பதவி அரசியல் எனும் புயல் வீசி அனைத்தையும் கபளீகரம் செய்தது.

(“பேரவலத்தின் பின்னரும் தொடரும் எம்மவர் அவலம்!?” தொடர்ந்து வாசிக்க…)

The Building Storm Against the TPP

The Trans-Pacific Partnership (TPP) is the one of the most recent of the neoliberal trade agreements being proposed. The final proposal was signed off in February 2016 in Auckland, New Zealand by 12 countries – Australia, Brunei, Canada, Chile, Japan, Malaysia, Mexico, New Zealand, Peru, Singapore, the USA, and Vietnam, after 7 years of negotiation. It awaits ratification in each country. It is a companion agreement to the existing NAFTA agreement, and the CETA and TTIP agreements that Canada and the U.S. are respectively negotiating with the EU.

(“The Building Storm Against the TPP” தொடர்ந்து வாசிக்க…)

மாணவர்களின் மரணம் வேதனையையும் விசனத்தையும் ஏற்படுத்துகிறது. தமிழர் சமூக ஜனநாயக கட்சி

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களான சுலக்சன் (24) கஜன் (23) ஆகியோர் பொலிஸ் துப்பாகிச் சூடு மற்றும் அதன்காரணமாக நேர்ந்த விபத்தினால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாய் அமைந்துள்ளது. இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். இலங்கையின் வரலாற்றின் வெவ்வேறு கால கட்டங்களில் பொலிஸ் அத்துமீறல்கள் பல விபரீதங்களுக்கு வழி வகுத்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு ஒரு சமூக பாதுகாப்பு என்பதை விட அது ஒரு வரையறையற்ற அதிகாரம் என்ற தோரணை இலங்கையில் காணப்படுகிறது.

(“மாணவர்களின் மரணம் வேதனையையும் விசனத்தையும் ஏற்படுத்துகிறது. தமிழர் சமூக ஜனநாயக கட்சி” தொடர்ந்து வாசிக்க…)

பல்கலைக்கழக மாணவர் சுட்டுக்கொலை: ஐந்து பொலிஸார் கைது

கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் வெள்ளிக்கிழமை (21) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டு பின்னர் அவர்களில் ஒருவர் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஐவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இவ்வாறு உயிரிழந்த இந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்களுடைய சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

பல்கலைகழக மாணவர் மரணம்? எம்மவர் விதைத்த வினையே!

அண்மையில் கொக்குவில் குளப்பிட்டி சந்தி அருகில் அகால மரணமடைந்த இரண்டு இளையவர் பற்றிய விசாரணை பல கேள்விகளை எழுப்புகிறது. நள்ளிரவை அண்மித்த நேரம் அதேவேகமாக பயனித்தவரை பொலிசார் நிறுத்தமுற்பட்ட வேளை அவர்கள் கட்டளைக்கு பணியாது பயணம் தொடர்ந்ததால், அவர்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணை அறியத்தருகிறது. அதன்படி சில பொலிசார் பணிநீக்கம் செய்யப்பட்டு விசாரணை தொடர்கிறது. அது கூட நல்லாட்சியின் நாயகன் மைத்திரியிடம், எதிர்கட்சி தலைவர் சம்மந்தன் மனம்வருந்தி வைத்த, சுதந்திரமான விசாரணைக்கான கோரிக்கையால் தான் நடந்ததாம்.

(“பல்கலைகழக மாணவர் மரணம்? எம்மவர் விதைத்த வினையே!” தொடர்ந்து வாசிக்க…)