வாவ் கண்ணம்மா

டிசம்பர் 5 ம் தேதி மாலை, முதல்வர் தன் இறுதி மூச்சுகளில் வாழ்ந்து கொண்டிருந்த தருணம், பிரளயத்தை முன்கூட்டியே அறிந்துகொண்ட பறவைகள் போல மொத்த மக்களும் தத்தம் கூடுகளை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். என் கூட்டை நோக்கி விரையும் முன், என் கூட்டு பறவைகளுக்கான அடுத்தநாள் அத்தியாவசிய உணவை வாங்க கே.கே.நகர் அய்யப்பன் கோயில் அருகில் கிரேஸ் பல்பொருள் அங்காடியில் நுழைந்தேன். ஆனால் உள்ளே நிற்கக்கூட இடமில்லாமல் கலவரமும் கவலையும் ஒரு சேர அங்காடியின் ஒவ்வொரு அங்குலமும் மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருந்தது. நானும் சில உணவு பொருட்களை தேடி அதில் நீந்த தொடங்கினேன். தீடிரென ஒரு குரல் அயர்ச்சியும் அன்புமாக என்னை நோக்கி ஒலித்தது.

(“வாவ் கண்ணம்மா” தொடர்ந்து வாசிக்க…)

பயங்கரவாதம் என்ற வீண் பிடிவாதம்

(காரை துர்க்கா)

நாட்டில் புலிப் பயங்கரவாதிகளால் முப்பது வருட காலமாக முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒழிக்கப்பட்டுள்ளன. புலிப்பிரிவினைவாத இயக்கம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. முப்பது வருட இருண்ட யுகத்திலிருந்த வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழ் மக்கள் பெரும் உவகையுடன் வாழ்கின்றனர். தென் பகுதி அரசியல்வாதிகளின் இவ்வாறான சொல்லாடலைத் தமிழ் மக்கள், கடந்த ஏழு எட்டு வருடங்களாகக் சகிப்புத் தன்மையுடன் கடந்து வந்துள்ளனர் என்பது, கடந்த நவம்பர் 27 ஆம் திகதி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அன்றைய தினம் வடக்கு, கிழக்கில் உள்ள துயிலும் இல்லங்களில் நடைபெற்ற சம்பவங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன.

(“பயங்கரவாதம் என்ற வீண் பிடிவாதம்” தொடர்ந்து வாசிக்க…)

ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு சாத்தியமில்லை!

(வானவில் – 72 வந்துவிட்டது)

இலங்கையில் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் வேலைகள் துரிதகதியில்நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக 225 பேர் கொண்ட நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சபை ஆறு குழுக்கள் புதிய அரசியல் யாப்பு சம்பந்தமாக சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்து ஆலோசனைகளைச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறப்போவது புதிய அரசியல் யாப்பு ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வா அல்லது பழைய யாப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ளப போகும் நிகழ்வா என்பதில் இன்னமும் குழப்பம் நிலவுகின்றது.

(மேலும்….)

பெரும்பாலான மக்கள் இனவாதிகள் அல்ல

சாதாரணமான தமிழ் மக்களும், சிங்கள மக்களும் தாங்கள் இனவாதிகள் அல்ல என்பதை அடிக்கடி நிரூபித்துள்ளனர். ஒட்டுமொத்த சமூகத்தையும் இனவெறியூட்டும் இனவாதிகளின் முகத்தில் கரி பூசியுள்ளனர். சிங்களவர்கள் மத்தியில் மட்டுமல்ல, தமிழர்கள் மத்தியிலும் இனவாதிகள் தமது அரசியல் நலன்களுக்காக ஆடும் நாடகங்கள் எடுபடுவதில்லை.

(“பெரும்பாலான மக்கள் இனவாதிகள் அல்ல” தொடர்ந்து வாசிக்க…)

இன்று ஈழத்து புரட்சிப்பாடகர் ஷாந்தன் அவர்களின் பிறந்தநாளாம்…. இந்நாளில் அவரை பற்றி கொஞ்சம் நினைத்து பார்க்கின்றேன்…..

2010 ஆம் ஆண்டு, போர் முடிவுற்று பாதைகள் திறக்கப்பட்டு…. மக்கள் வழமைக்கு திரும்பிக்கொண்டிருந்த காலகட்டத்தில் நல்லூர் திருவிழாவும் வந்தது. DAN TV யாழ் ஒளி தொலைக்காட்சி அப்போதுதான் மெல்ல யாழில் காலூன்ற ஆரம்பித்து இருந்தது…. நல்லூர் திருவிழாவில் ஏதாவது ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தி மக்களிடம் நம் தொலைக்காட்சியை ஜனரஞ்சக படுத்த வேண்டும்…..

(“இன்று ஈழத்து புரட்சிப்பாடகர் ஷாந்தன் அவர்களின் பிறந்தநாளாம்…. இந்நாளில் அவரை பற்றி கொஞ்சம் நினைத்து பார்க்கின்றேன்…..” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு பண்பாட்டுச் சிதைவுக்கு துணைபோகக் கூடாது

(போராளிகளை நினைவு கூர்வதற்கு ஒரு பொதுத் தினம் ஒன்று கண்டறியப்படவேண்டும். இதில் ஈழவிடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்பணித்து மரணித்த அனைவரும் நினைவு கூரப்படவேண்டும் என்பதே சூத்திரம் இணையத்தளத்தின் நிலைப்பாடு ஆகும். இதன் ஆசிரியர் இந்தக்கருத்தை பத்துவருடங்களுக்கு மேலாக பல தளங்களிலும் வலியுறுத்தி வருகின்றார். கருணாகரனின் இக்கட்டுரை புலிகளின் மாவீரர் தினத்தை மட்டும் பேசுவதில் தனது கவனத்தை செலுத்தியிருக்கின்றது ஒரு பன்முகப்படுதப்பட்ட தன்மை வணக்கம் செலுத்துவதிலிருந்தாவது ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை சூத்திரம் மீண்டும் வலியுறுத்துகின்றது – ஆர்)

(கருணாகரன் )

விடுதலைப்புலிகள் இல்லாத சூழலில், போர் முடிந்து ஏழு ஆண்டுகளின் பின்னர், கடந்த மாதம் 27 ஆம் திகதி நிகழ்ந்திருக்கும் மாவீரர் நாள் நிகழ்வு, அது முடிந்து ஒரு மாதம் கடந்துவிட்டபோதிலும், அந்த நிகழ்வின் அரசியல் பரிமாணம் மிகவும் விசாலமாகக் காணப்படுகின்றது. அந்த நிகழ்வையொட்டி, தமிழ் மக்களிடத்தில், குறிப்பாக மாவீரர் குடும்பங்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் உணர்நிலைகளும் அபிப்பிராயங்களும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் உண்டாக்கியுள்ளது. இந்தக் கட்டுரை அவற்றைப் பற்றிய கவனத்தையே ஈர்க்கிறது.

(“ஒரு பண்பாட்டுச் சிதைவுக்கு துணைபோகக் கூடாது” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் தீர்வு பற்றி : ‘சம்பந்தன் உறுதிப்படுத்திவிட்டார்’

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், அதிகாரப் பகிர்வு தொடர்பில் தெரிவித்த கருத்தானது, அவர் ஒரு ஜனநாயகவாதி என்பதை உறுதிபடுத்திவிட்டார்” என, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைமை அலுவலகத்தில், நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அதிகாரப்பகிர்வு மற்றும் ஆளுநர் நீக்கம் தொடர்பான கூட்டமைப்பின் கருத்து தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“அரசியல் தீர்வு பற்றி : ‘சம்பந்தன் உறுதிப்படுத்திவிட்டார்’” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.நா தீர்மானம் நிறைவேற்றம்; சிரியாவுக்குள் ஐ.நா கண்காணிப்பாளர்கள்

சிரியாவில் முற்றுகைக்குள்ளாகியுள்ள பொதுமக்கள் வெளியேறுவதைக் கண்காணிக்கவும் நகரங்களில் எஞ்சியுள்ள மக்களின் நலன்களைக் கண்காணிக்கவும், ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்களை அனுப்புவதற்கான தீர்மானத்தை, ஐ.நா பாதுகாப்புச் சபை நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பான தீர்மானத்தை, ஐக்கிய அமெரிக்கா கொண்டுவரவிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு வெளியிட்ட ரஷ்யா, தன் சார்பில் புதிய தீர்மானமொன்றைச் சமர்ப்பிக்க முடிவு செய்திருந்தது. எனினும், பிரான்ஸும் ரஷ்யாவும் இணைந்து தயாரித்த தீர்மானம், திங்கட்கிழமையன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, அலெப்போவில் ஏற்கெனவே காணப்படும் 100க்கும் அதிகமாக ஐ.நா மனிதாபிமானப் பணியாளர்கள், இதற்காகப் பயன்படுத்தப்பட முடியுமென, ஐ.நா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

(“ஐ.நா தீர்மானம் நிறைவேற்றம்; சிரியாவுக்குள் ஐ.நா கண்காணிப்பாளர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

‘மைத்திரி மரணிப்பார்: கோட்டா ஜனாதிபதியாவார்’

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனவரி மாதத்துக்குள் இயற்கையாக மரணமடைவார் என்றும், அதன் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். அத்தேர்தலில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ வெல்வார் என்றும் ஜோதிடரினால் கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளமையாது, சாஸ்திர சதியாகும் என்று ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பாக வெளியாகியுள்ள ஜோதிடரின், ஜாதகக் கணிப்பின் பின்னணியைக் கண்டறிவதற்காக அது தொடர்பான காணொளி, பொலிஸ்மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.

(“‘மைத்திரி மரணிப்பார்: கோட்டா ஜனாதிபதியாவார்’” தொடர்ந்து வாசிக்க…)

நீர்மூழ்கியை அமெரிக்காவிடம் ஒப்படைத்தது சீனா

தென்சீனக் கடல் பகுதி முழு வதையும் சீனா சொந்தம் கொண் டாடி வருகிறது. ஆனால் அந்தப் பகுதி சர்வதேச கடல் எல்லை என்று அமெரிக்கா வாதிட்டு வருகி றது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் அருகே தென்சீனக் கடலில் மிதந்த அமெரிக்க கடற் படையின் ஆளில்லா நீர்மூழ்கியை சீன கடற்படை கைப்பற்றியது. சீன கடல் பகுதியில் அமெரிக்கா உளவு பணியில் ஈடுபட்டதாக அந்த நாடு குற்றம் சாட்டியது.

(“நீர்மூழ்கியை அமெரிக்காவிடம் ஒப்படைத்தது சீனா” தொடர்ந்து வாசிக்க…)