பற்குணம் A.F.C (பகுதி 89 )

இந்திய செஞ்சிலுவை சங்க வரவைத் தொடர்ந்து இந்திய இராணுவமும் வந்திறங்கியது.உணவு விநியோகத்துக்கு பொறுப்பான அதிகாரி என்பதால் இந்திய செஞ்சிலுவை சங்கதிகாரிகள்,இந்திய இராணுவ தளபதிகள் ஆகியோரின் தொடர்புகள் மூலமாக அறிமுகங்களும் கிடைத்தன.

(“பற்குணம் A.F.C (பகுதி 89 )” தொடர்ந்து வாசிக்க…)

ருமேனியாவில் சோஷலிச அரசைக் கவிழ்த்த அமெரிக்க சதிப்புரட்சி

ருமேனியா நாட்டின் கடைசி கம்யூனிஸ்ட் தலைவர் நிகோலா ஸௌசெஸ்கு, ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று (25 december 1989) அவரது துணைவியார் எலேனாவுடன் படுகொலை செய்யப் பட்டார். சில தினங்களுக்கு முன்னர், அந்த நாட்டில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியின் விளைவாகவே அது இடம்பெற்றது. அமெரிக்காவினால் ஆதரிக்கப் பட்ட சதிப்புரட்சியாளர்கள், வெளிப்படையான நீதி விசாரணை எதுவுமின்றி சுட்டுக் கொன்றனர்.

(“ருமேனியாவில் சோஷலிச அரசைக் கவிழ்த்த அமெரிக்க சதிப்புரட்சி” தொடர்ந்து வாசிக்க…)

‘3 மாதத்துக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்படும்’

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை, எதிர்வரும் ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல் 3 மாதத்துக்கு, புனரமைப்பு பணிகளுக்காக மூடப்படும் என்று, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார். இந்தப் பிரதான ஓடுபாதையானது, எதிர்வரும் 3 மாதங்களுக்கு, காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 வரையான 8 மணிநேரம் வரையான காலப்பகுதிக்கு மூடப்பட்டிருக்கும் என்று அவர் அறிவித்தார்.

(“‘3 மாதத்துக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்படும்’” தொடர்ந்து வாசிக்க…)

ரவிராஜ் கொலை வழக்கு: சகலரும் விடுதலை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்பை, எழுவர் அடங்கிய விசேட ஜூரிகள் சபை சற்று முன்னர் அறிவித்தது. தொகுப்புரைகள், நேற்று முதல் எழுவர் அடங்கிய விசேட ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து ஆற்றுப்படுத்தப்பட்டன கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மணிலால் வைத்திய திலக்க, ஜூரிகளுக்கு தெளிவுரையளித்தார். அதன் பின்னர் எழுவர் அடங்கிய விசேட ஜூரிகள் தீர்ப்பை நள்ளிரவு 12.20க்கு அறிவித்தனர். அதன் பிரகாரம், குற்றஞ்சாட்டப்பட்ட சகலரும் விடுதலை செய்யப்பட்டனர். அதாவது, 3ஆம், 4ஆம், 5ஆம்,6ஆம் பிரதிவாதிகளை விடுவிக்குமாறு ஜூரிகள் தீர்ப்பு வழங்கியதோடு, பிரசன்னமாயிருக்காத 1ஆம், 2ஆம் பிரதிவாதிகளையும் விடுவித்துள்ளது.

அடுத்த பொதுச்செயலாளர் யார்?- அதிமுக பொதுக்குழு 29-ம் தேதி கூடுகிறது

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.  அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு டிசம்பர் 29-ம் தேதி காலை 9.30 மணிக்கு வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத் தில் நடக்கிறது. இதில், அதிமுக பொதுச் செயலாளர் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்.

(“அடுத்த பொதுச்செயலாளர் யார்?- அதிமுக பொதுக்குழு 29-ம் தேதி கூடுகிறது” தொடர்ந்து வாசிக்க…)

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கருணாநிதி

கடந்த ஒரு வாரமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார். கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். காரில் இருந்து சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்த கருணாநிதியை, கோபாலபுரம் இல்லத்தில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் வரவேற்றனர். சிகிச்சை நிறைவடைந்து உடல்நிலை தேறியுள்ள நிலையில், கருணாநிதி முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், பார்வையாளர்களைச் சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

(“மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கருணாநிதி” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம்களை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கூறியது சரியே – டொனால்டு ட்ரம்ப்

ஜெர்மனி, துருக்கியில் நடந்துள்ள தீவிரவாத தாக்குதல்களின் மூலம், முஸ்லிம்களை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற தனது திட்டம் மிகச் சரியானது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப், முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு சர்ச்சைக்குரிய யோசனைகளை முன்வைத்தார். முஸ்லிம்களுக்கு தனி பதிவேடு, அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் குடியேறத் தடை விதிப்பது போன்ற அவரின் பல திட்டங்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின.

(“முஸ்லிம்களை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கூறியது சரியே – டொனால்டு ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)

ரவிராஜ் கொலை வழக்கு: தொகுப்புரைகள் நிறைவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தொகுப்புரைகள் சற்று முன்னர் நிறைவடைந்தன. தொகுப்புரைகள், இன்று காலை முதல் எழுவர் அடங்கிய விசேட சிங்கள ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து ஆற்றுப்படுத்தப்பட்டன. கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மணிலால் வைத்திய திலக்க, இன்னும் சொற்ப நேரத்தில், ஜூரிகளுக்கு தெளிவுரையளிப்பார். விசேட சிங்கள ஜூரிகள், 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி நியமிக்கப்பட்டனர். 23 ஆம் திகதியிலிருந்து 22 நாட்கள் சாட்சியமளிப்புகள் இடம்பெற்றன. சாட்சியமளிப்பு நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.

(“ரவிராஜ் கொலை வழக்கு: தொகுப்புரைகள் நிறைவு” தொடர்ந்து வாசிக்க…)

த.மு.கூவின் இணை பேச்சாளர்கள் நியமனம்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை பேச்சாளர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வேலுகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பதுளை மாவட்ட எம்.பி அரவிந்தகுமார், கூட்டணியின் நாடாளுமன்ற குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இம்முடிவுகளை கொழும்பில் கூடிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் மத்தியக்குழு எடுத்துள்ளது. கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பிரதி தலைவர்களான பழனி திகாம்பரம், வி.இராதாகிருஷ்ணன், செயலாளர் அன்டன் லோரன்ஸ், தவிசாளர் புத்திர சிகாமணி, உப செயலாளர் சண் பிரபாகரன், சரத் அத்துகோரள ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

சுவாதி கொலையில் நம்பகமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன:

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலையாளி குறித்த நம்பகமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஏறக்குறைய கொலையாளியை நெருங்கிவிட்டோம். கொலையாளி விரைவில் பிடிபடுவார் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் கூறினார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி (24) கடந்த 24-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான நபரின் புகைப்படத்தை சூளைமேடு மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளில் வீடு வீடாகக் காட்டி போலீஸார் துப்பு துலக்கி வருகின்றனர்.

(“சுவாதி கொலையில் நம்பகமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன:” தொடர்ந்து வாசிக்க…)