ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு சாத்தியமில்லை!

(வானவில் – 72 வந்துவிட்டது)

இலங்கையில் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் வேலைகள் துரிதகதியில்நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக 225 பேர் கொண்ட நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சபை ஆறு குழுக்கள் புதிய அரசியல் யாப்பு சம்பந்தமாக சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்து ஆலோசனைகளைச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறப்போவது புதிய அரசியல் யாப்பு ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வா அல்லது பழைய யாப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ளப போகும் நிகழ்வா என்பதில் இன்னமும் குழப்பம் நிலவுகின்றது.

(மேலும்….)