குழப்பங்களை வழங்குகிறார் ட்ரம்ப்

ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு, இன்னமும் 3 வாரங்களுக்குக் குறைவான நாட்களே உள்ள நிலையில், சர்ச்சைக்குரியவரான ட்ரம்ப்பின் சர்ச்சைகள், குறைந்தபாடாக இல்லை. ட்ரம்ப் தெரிவான ஜனாதிபதித் தேர்தலில், ட்ரம்ப்புக்கு ஆதரவாக, ரஷ்யாவின் அரசாங்கம் செயற்பட்டது எனவும் ஐ.அமெரிக்க இணையத்தளங்களை ஹக் செய்தது எனவும், ஐ.அமெரிக்க புலனாய்வுத்துறையினர் வழங்கிய அறிக்கையையடுத்து, ரஷ்யாவைச் சேர்ந்த 35 பேரை, உளவுபார்த்தார்கள் என்ற குற்றச்சாட்டில், ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியேற்றினார். இரண்டு சொத்துகளும் முடக்கப்பட்டன.

(“குழப்பங்களை வழங்குகிறார் ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)

விலை போனார் விளையாட்டு துறை பிரதி அமைச்சர் ஹரீஸ்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த விளையாட்டு துறை பிரதி அமைச்சர் எச். எம். எம். ஹரீஸ் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மீள் இணைப்புக்கு உதவி, ஒத்தாசை வழங்குவார் என்று புலம்பெயர் தமிழ் சமூக பிரதிநிதிகளுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகவியலாளருமான தமிழ் பிரபலம் ஒருவர் இவ்விடயத்தில் இடை தரகராக செயற்பட்டு உள்ளார்.

(“விலை போனார் விளையாட்டு துறை பிரதி அமைச்சர் ஹரீஸ்!” தொடர்ந்து வாசிக்க…)

மோடி முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு தன் – பதவியை ராஜினாமா செய்த ஐ ஏ எஸ் அதிகாரி

இப்படியும் ஒரு IAS அதிகாரி …!!! இந்தியனே மோடியின் நர பலி முகத்தை மறந்துவிடாதே மோடி முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு தன் – பதவியை ராஜினாமா செய்த ஐ ஏ எஸ் அதிகாரி.

மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன வேதனையோடும் வெட்கத்துடனும் இதை பகிர்கின்றேன – ஹர்ஷ் மந்தேர் IAS

(“மோடி முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு தன் – பதவியை ராஜினாமா செய்த ஐ ஏ எஸ் அதிகாரி” தொடர்ந்து வாசிக்க…)

சிவில் பாதுகாப்புப் பிரிவு என்ற படைமுகாமுக்கு முன்னே நூற்றுக்கணக்கான பெண், ஆண் போராளிகள்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மிகக் கடினமான வாழ்க்கைச் சூழலுக்குள்ளாகியிருக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன். போர் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தப் போராளிகள் தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகி வந்து அல்லது அரசாங்கம் பெருமிதமாகச் சொல்வதைப்போல புனர்வாழ்வு பெற்று வந்து ஐந்து ஆண்டுகளாகி விட்டன. ஆனால், வேலை வாய்ப்பில்லாமல் தங்களுடைய வாழ்க்கையை ஒழுங்கு படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மாகாணசபையோ தமிழ்த்தேசிய அரசியலாளர்களோ அரசாங்கமோ இவர்களுக்கு உதவவில்லை என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தேன்.

(“சிவில் பாதுகாப்புப் பிரிவு என்ற படைமுகாமுக்கு முன்னே நூற்றுக்கணக்கான பெண், ஆண் போராளிகள்” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் சுந்தரம் 35வது நினைவுதினம்!

“புதியபாதை “ஊடாக புதிய சிந்தனையை தந்த சிந்தனை சிற்பி தோழர் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்) 35வது நினைவுதினம் இன்றாகும். 1982ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி சித்திரா பதிப்பகத்தில் வைத்து விடுதலை புலிகளினால் அரங்கேற்றப்பட்ட முதல் சகோதரப்படுகொலை கட்டவிள்த்து விடப்பட்ட நாளும் இதுவாகும். தோழர் சுந்தரம் அவர்கள் தமிழீழ விடுதலையை மக்கள் விடுதலை மூலமே அடைய முடியும் என்ற கோட்பாட்டுடன் “புதியபாதை” ஊடாக பொதுவுடமை கொள்கைளையும், புரட்சிகர சிந்தனையையும் ஊட்டிய சிறந்த சிந்தனை சிற்பி.

(“தோழர் சுந்தரம் 35வது நினைவுதினம்!” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அரசியலமைப்பு தொடர்பில் 3 நாட்களுக்கு த.தே.கூ ஆராயும்

“எதிர்வரும் 9, 10, 11ஆம் திகதிகளில், நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதற்கு முன்னதாக புதிய அரசியலமைப்புத் தொடர்பாக ஆராயவுள்ளோம். இதற்கமைய, 6ஆம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூடி கலந்தாலோசிக்கவுள்ளோம்” என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலுக்கு, சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் சுட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், சுட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.

 

புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஆராய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 6ஆம் திகதி கொழும்பில் கூடவுள்ளனர்.  தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் கூடவுள்ள இக்கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் அமைப்புத் திட்டம், உப குழு அறிக்கை தொடர்பான மூன்று நாட்கள் விவாதம், கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. இது தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், “புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஆராய்வதற்கு கூடவுள்ள கலந்துரையாடலுக்கு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இக்கலந்துரையாடலில் நாம் நிச்சயம் கலந்துகொள்வோம்” என்றார்.

(“புதிய அரசியலமைப்பு தொடர்பில் 3 நாட்களுக்கு த.தே.கூ ஆராயும்” தொடர்ந்து வாசிக்க…)

நிலாவெளி கிராமிய தொழிலாளர் முன்னேற்ற சம்மேளனம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

(தமிழர் சமூக ஜனநாயக கட்சி, திருகோணமலை செய்தியாளர்)

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் கீழ் நிறுவப்பட்ட தொழிலாளர் சங்கமானது 31/12/2016 நிலாவெளியில் கட்சியின் தலைவர் தி.ஸ்ரீதரன்(சுகு), மாவட்ட செயலாளர் சத்தியன், நிதி பொறுப்பாளர் கிருபா மற்றும் திருகோணமலை கட்சியின் முக்கியஸ்தர்கள் பவியன், ஓங்காரம் முன்னிலையில் தொழில் சங்கமான நிலாவெளி கிராமிய தொழிலாளர் முன்னேற்ற சம்மேளனம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதில் அதிகளவான உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

நம்பிக்கைகளுடன் புதிய வருடத்தை வரவேற்போம்!

(சாகரன்)

மதம், இனம், மொழி, தேசங்களைக் கடந்து உள்ளத்தால் இணையும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மனிதனுக்கு இருக்கும் சிறப்பியல்பான கடந்தகால நினைவுகளை மீட்டுப்பார்பதும், எதிர்காலம் பற்றி நம்பிக்கையும் தொடர்ந்தும் நடைபெறட்டும். நம்பிக்கையும், திட்டமிடலும், சகேதரத்துவமும், மனித நேயமும், சமூக நலன்சார்ச்த செயற்பாடும் எம்மை சமூகத்தில் நல்ல மனிதர்களாக தொடர்ந்தும் நிலைநிறுத்தும் . எமது வாழ்க்கை அனுபவங்களை பாடமாக எடுத்துக்கொண்டு இதனை மேலும் செழுமைப்படுத்தி செயற்பட முற்படுவோம் இதுவே எம்மை முன்னேற்றகரமா பாதையில் பயணிக்க ஆவன செய்யும். ஒரு நிறைவான வாழ்வை எமக்கு பெற்றுத் தரும்.

(“நம்பிக்கைகளுடன் புதிய வருடத்தை வரவேற்போம்!” தொடர்ந்து வாசிக்க…)

மறைக்கப்பட்ட வரலாறுகள்

சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்….நாக வம்சத்தினர் காலத்தில் தான் ஹரப்பா, சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு..செழிப்பாக இருந்தது…அப்போது வந்த வெளிறிய ஆரியர்கள் …இங்கு நிரந்தரமாக குடியேற வேண்டும் என ஆசைப்பட்டு…
நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கி…வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்து…சில ராஜ்யங்களை கைப்பற்றினர்..

(“மறைக்கப்பட்ட வரலாறுகள்” தொடர்ந்து வாசிக்க…)

சிரிய யுத்தநிறுத்தத்தை வரவேற்கிறது ஐ.நா பாதுகாப்புச் சபை

சிரிய சிவில் யுத்தத்திலுள்ள யுத்தநிறுத்தமொன்றை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை நேற்று (31) வரவேற்றுள்ளது. எனினும், யுத்தநிறுத்த மீறல்கள் தொடருமானால், யுத்தநிறுத்தத்தை கைவிடவுள்ளதாக போராளிக் குழுக்கள் எச்சரித்துள்ளன. ஏறத்தாழ ஆறு ஆண்டுகளாகத் தொடரும் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், கடந்தாண்டில் கொண்டுவரப்பட்ட மூன்றாவது யுத்தநிறுத்தத்தை வரவேற்கும் தீர்மானத்தை, 15 அங்கத்தவர்களைக் கொண்ட பாதுகாப்புச் சபை, ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் இடம்பெற்ற கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

(“சிரிய யுத்தநிறுத்தத்தை வரவேற்கிறது ஐ.நா பாதுகாப்புச் சபை” தொடர்ந்து வாசிக்க…)