அழிப்புகளை பற்றி அறியாதவரால் நடத்தப்படும் எழுகதமிழ்?.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான உன்னிச்சை குளம் உடைப்பெடுத்த ஆண்டு 1958. அப்போது எனக்கு இரண்டு வயதானாலும், பத்து வயதில் அந்த குளக்கட்டில் நடந்து போன போது அந்தக் குளம் உடைப்பெடுத்த வேளை நடந்த அனர்த்தங்களை, என் மாமா கூறியது இன்று என் அறுபது வயதிலும் பசுமரத்து ஆணியாய் நினைவில் உள்ளது. அன்று நடந்தது இயற்கையின் சீற்றம் மட்டும் அல்ல, பொறுப்பான அதிகாரியின் கவலையீனமுமே.

(“அழிப்புகளை பற்றி அறியாதவரால் நடத்தப்படும் எழுகதமிழ்?.” தொடர்ந்து வாசிக்க…)

பறிபோகும் மட்டு மாநகர தமிழ் கிராமங்கள் ?

மட்டக்களப்பு என்றதும் வெளிமாவட்ட மக்களுக்கு கல்லடி பாலமும், அதனை அடுத்துள்ள இராமகிருஷ்ண மிசனும், விபுலாந்தர் சிலையும் தான் நினைவுக்கு வரும். கல்லடி உப்போடை, மஞ்சந்தொடுவாய், நாவற்குடா, நொச்சிமுனை என நீண்டு செல்லும் தமிழ் பாரம்பரிய கிராமங்கள் தமிழர்களின் கைகளை விட்டு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது

(“பறிபோகும் மட்டு மாநகர தமிழ் கிராமங்கள் ?” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளுள்ளபுதர்களின் மத்தியில்……..(அத்தியாயம் 7)

(அக்கினி ஞானாஸ்ஞானம்)

முல்லைத்தீவு இராணுவமுகாம் தாக்கி அழிக்கப்பட்டதன் கழிப்பு அடங்குவதற்கு முன்னரே கிளிநொச்சி இடம்பெயரவேண்டிய நிலை ஏற்படுமோ என்ற பீதி மக்களை ஆட்கொள்ளத்தொடங்கிவிட்டது. குண்டுச்சத்தங்களும் துப்பாக்கி வேட்டுகளும் உரத்து ஒலிக்கத் தொடங்கிவிட்டன. கிளிநொச்சி வைத்தியசாலை நோயாளர்களால் நிரம்பிவழிந்து கொண்டிருந்தது. மாலை வேளைகளில் மக்கள் வெளியில் வரத்தயங்கினர். ஒருசில வியாபாரிகள் தங்கள் பொருட்கனை லொறிகளிலும் ரைக்டர்களிலும் ஏற்றிக்கொண்டு ஏ9 வீதிக்கு கிழக்காகவும் மேற்காகவும் கொண்டு சென்றனர்.

(“முள்ளுள்ளபுதர்களின் மத்தியில்……..(அத்தியாயம் 7)” தொடர்ந்து வாசிக்க…)

இந்து மதத்தில் சமத்துவத்துக்கு இடமில்லை.

ஒரு சமயம் நான் திரு. காந்தியிடம் சென்றிருந்தேன். அப்போது அவர், ‘நான் சதுர்வருண அமைப்பில் நம்பிக்கை வைத்திருக்கிறேன்’’என்று சொன்னார். நான் கேட்டேன்: ‘’உங்களைப் போன்ற மகாத்மாக்கள் ‘சதுர்வருணத்தை’நம்புகிறீர்களா? அது சரி இந்த சதுர்வருணம் என்பது என்ன? அது எவ்வாறு அமைந்திருக்கிறது?

(“இந்து மதத்தில் சமத்துவத்துக்கு இடமில்லை.” தொடர்ந்து வாசிக்க…)

தோட்டத் தொழிற்துறை கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரான வழக்கில் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை

கடந்த ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி தோட்டக் கம்பனிகள் சார்பில் இலங்கை முதலாளிமார் சம்மேளனமும் தோட்ட தொழிலாளர்களின் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டு நிலையம் என்பனவும் கைச்சாத்திட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள கூட்டு ஒப்பந்தத்தை தொழில் ஆணையாளர் கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்தமை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான கூட்டு ஒப்பந்த தொழிற்சட்டங்களுக்கு முரணாகவும், தொழிலாளர்கள் ஏற்கனவே அனுபவித்து வந்த உரிமைகளை பறிப்பதாகவும், இயற்கை நீதிக்கு எதிராகவும், 2003ஆம் ஆண்டு அடிப்படை கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராகவும் இருப்பதனால் அதனை இரத்து செய்யும்படி பதிவு செய்யப்பட்ட ரிட் மனு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(“தோட்டத் தொழிற்துறை கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரான வழக்கில் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை” தொடர்ந்து வாசிக்க…)

எழுக தமிழுக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க முடியாது.

கிழக்கில் நடைபெறவுள்ள எழுக தமிழ் என்பது கிழக்கு மாகாண தமிழ் மக்களின் எழுச்சிக்காக அல்லாமல் கிழக்கு தமிழர்களையும் முஸ்லிம்களையும் வடக்குக்கு அடிமையாக்க முணையும் முயற்சியாக இருப்பதால் இதற்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க முடியாது என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது.இது பற்றி உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரித்துள்ளதாவது,

(“எழுக தமிழுக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க முடியாது.” தொடர்ந்து வாசிக்க…)

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெரினாவில் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர். ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும். இதற்காக முதல்வரும், தமிழக எம்பிக்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

(“ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெரினாவில் போராட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

விண்வெளியிலிருந்து உயிரினம்: உண்மையா?

(என்.ராமதுரை)

உயிரினம் என்பது நுண்ணுயிர் வடிவில் மொத்தப் பிரபஞ்சத்திலும் பரவி நிற்கின்ற ஒன்று சூரிய மண்டலத்துக்கு அப்பால் அண்டவெளியில் பூமி மாதிரியில் கோடானுகோடி கிரகங்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால், அவற்றில் நம்மைப் போன்ற மனிதர்கள் இருக்கிறார்களா? இதைக் கண்டறிய விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாகப் பல வழிகளிலும் முயன்றுவருகின்றனர்.

(“விண்வெளியிலிருந்து உயிரினம்: உண்மையா?” தொடர்ந்து வாசிக்க…)

பராக் ஒபாமா: காலம் கலைத்த கனவு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

காலங்கடந்து நிகாலங்கடந்து நிலைத்தல் எளிதல்ல. காலம் தன்னளவில் நிலைக்க வேண்டியவையையும் மறக்க வேண்டியவையையும் தீர்மானிக்கிறது. ஒரு நபரின் காலங்கடந்த இருப்பு அவர் எதைச் செய்தார் என்பதை மட்டும் கருத்திற் கொண்டு முடிவாவதில்லை. மாறாக, எதைச் செய்யாமல் விட்டார் என்பதையும் கருத்திலெடுக்கிறது. காலங்கடந்து நிலைத்தலை விட, மக்கள் மனதில் நிலைத்தல் கடினமானது. காலம் மன்னிக்கத் தயாராகவுள்ள விடயங்கள் பலவற்றை, மக்கள் மன்னிக்கத் தயாராகவில்லை. மக்கள் மனங்களில் நிலைக்கின்றவர்கள் நல்ல மனிதர்கள், அவர்கள் வரலாற்றின் பக்கங்களால் மறைக்கப்பட்ட போதும், மக்கள் மனங்களில் வாழ்பவர்கள்.

(“பராக் ஒபாமா: காலம் கலைத்த கனவு” தொடர்ந்து வாசிக்க…)

சல்லிக்கட்டும் பீட்டாவும் போராட்டங்களும்

(கனகலிங்கம் கோபிகிருஷ்ணா)

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இலங்கையின் தமிழ்ப்பகுதிகளோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டது. இலங்கையில் யுத்தம் இடம்பெறும் போது, அங்கு மாபெரும் போராட்டங்கள் எல்லாம் இடம்பெற்றன. அதேபோல், அங்கு தற்போது இடம்பெற்றுவரும் போராட்டங்கள் தொடர்பாக, இங்கும் ஏராளமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. சல்லிக்கட்டு அல்லது ஜல்லிக்கட்டு என்றழைக்கப்படும் ஏறுதழுவுதல் போட்டிகளை, இந்தியா முழுவதும் நடத்துவதற்கு, இந்திய உச்சநீதிமன்றத்தால் 2014ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

(“சல்லிக்கட்டும் பீட்டாவும் போராட்டங்களும்” தொடர்ந்து வாசிக்க…)