நீராதாரங்களையும் விவசாயத்தையும் நோக்கி பார்வையைத் திருப்புவோம்!

தமிழகம் வரலாற்று வறட்சியை எதிர்கொண்டுவருகிறது. பருவ மழை பொய்த்ததன் விளைவாகக் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி ஏற்பட்டிருக்கிறது. மாநிலத்தின் முக்கியமான நீர்நிலைகள் வறண்டதால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. வயல்கள் வறண்டதன் விளைவாக ஏற்பட்ட தொழில் பாதிப்பு, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் மரணத்துக்கு வழி வகுத்தது. தங்கள் துயரங்களைப் பேச ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்ட வடிவத்தைக் கையில் ஏந்திக் களத்தில் நிற்கிறார்கள் அவர்கள்.

(“நீராதாரங்களையும் விவசாயத்தையும் நோக்கி பார்வையைத் திருப்புவோம்!” தொடர்ந்து வாசிக்க…)

ஹொம்ஸ் மாவட்டத்திலிருந்து பொதுமக்கள், போராளிகள் வெளியேற ஆரம்பித்தனர்

சிரிய அரசாங்கத்துடனான, ரஷ்யாவினால் ஆதரவளிக்கப்பட்ட ஒப்பந்தமொன்றின் கீழ், ஹொம்ஸிலிலுள்ள இறுதி நிலையிலிருந்து, எதிரணியினரும் அவர்களின் குடும்பத்தினரும், நேற்று முன்தினம் (18) வெளியேற ஆரம்பித்துள்ளதாக அரச ஊடகமும் வெளியேறுதலைக் கண்ட ஒருவரும் தெரிவித்துள்ளனர். இவ்வாறான வெளியேறுதல்களில், பாரியதொன்றாக இது காணப்படும் என நம்பப்படுகிறது.

(“ஹொம்ஸ் மாவட்டத்திலிருந்து பொதுமக்கள், போராளிகள் வெளியேற ஆரம்பித்தனர்” தொடர்ந்து வாசிக்க…)

ஹெலித் தாக்குதலில் 42 அகதிகள் கொல்லப்பட்டனர்

யேமன் கரையோரத்தில், ஹெலிகொப்டர் ஒன்று, கடந்த வியாழக்கிழமை (16) படகொன்றைத் தாக்கியதில், 42 சோமாலிய அகதிகள் கொல்லப்பட்டதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மேற்படி சம்பவம் குறித்து விசாரணையை மேற்கொள்ளுமாறு, யேமனில் போரில் ஈடுபடும் சவூதி தலைமையிலான கூட்டணியை, சோமாலியா கோரியுள்ளது.

(“ஹெலித் தாக்குதலில் 42 அகதிகள் கொல்லப்பட்டனர்” தொடர்ந்து வாசிக்க…)

‘முல்லைத்தீவில் அதிவேக சிங்கள குடியேற்றம்’

“வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டமானது, மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், படையினருக்கான நில சுவீகரிப்புக்கள், கடல்வள சுறண்டல்கள், பௌத்த மயமாக்கல் மற்றும் இராணுவ மயமாக்கல் போன்றவற்றினால் விழுங்கப்பட்டு வருகின்றது. முழுமையாக விழுங்கப்படுவதற்கு முன்னர், மாவட்டத்தையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(“‘முல்லைத்தீவில் அதிவேக சிங்கள குடியேற்றம்’” தொடர்ந்து வாசிக்க…)

கால அவகாசம் கேட்பது வெட்கக்கேடு’

“பிரச்சினைகளை நாட்டுக்குள் தீர்க்காது, வெளிநாடுகளிடம் சென்று கால அவகாசம் கேட்பது வெட்கக்கேடானது. வெளிநாடுகளால், உள்நாட்டுப் பிரச்சினைகள் அதிகரிக்குமே தவிர, ஒருபோதும் தீர்வை ஏற்படுத்த முடியாது” எனச் சுட்டிக்காட்டியுள்ள ஜே.வி.பி., “இன்றைய ஆட்சியாளர்கள் வெளிநாடுகளின் தாளத்துக்கு ஆட்டம் போடுகின்றனர்” எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

(“கால அவகாசம் கேட்பது வெட்கக்கேடு’” தொடர்ந்து வாசிக்க…)

அதிகாரிகள் முன்னிலையில் பரஸ்பர குற்றச்சாட்டு

“கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்குரிய காணியை, இராணுவத்துக்கு தன்னிச்சையாக, முன்னாள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளரும், தற்போதைய முல்லைத்தீவு மாவட்டச் செயலருமான ரூபவதி கேதீஸ்வரன், வழங்கினார்” என, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம்சாட்டினார். ஆனால், “இராணுவத்திடம் இருந்த கிளிநொச்சி மாவட்டச் செயலக காணியை அன்றைய சூழலில் மீளப்பெற்று, புதிய மாவட்டச் செயலகத்தை அமைத்தது நான்தான். இக்குற்றச்சாட்டு உண்மைக்கு புறமானது” என, நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு அதே மேடையில் வைத்து கடும் தொனியில் கேதீஸ்வரன் பதிலளித்தார்.

(“அதிகாரிகள் முன்னிலையில் பரஸ்பர குற்றச்சாட்டு” தொடர்ந்து வாசிக்க…)

காலில் விழுந்து கதறிய உறவினர்கள்

கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் காலில் விழுந்து, தங்களின் உறவினர்களை மீட்டுத்தருமாறு கதறி அழுதனர். இன்றுடன் 28 நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, இன்று காலை 7.45 மணியளவில், முதலமைச்சர் சந்தித்தார்.

(“காலில் விழுந்து கதறிய உறவினர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

என்றும் காந்தி!- 30: கருத்துச் சுதந்திரமில்லாக் காலத்துக்கு காந்தி!

சுதந்திரம் பெற்றதற்குப் பிந்தைய இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்துக்கு மோசமான காலகட்டங்களாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று, நெருக்கடி நிலை காலகட்டம், இன்னொன்று தற்போதைய காலகட்டம். கடந்த 70 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், பாஜக உள்ளிட்ட வலதுசாரிக் கட்சிகள் என்று எதுவுமே கருத்து சுதந்திரப் பரிசோதனையில் மிஞ்சாது. சல்மான் ருஷ்தியின் ‘சாத்தானின் பாடல்கள்’ (Satanian Verses) நாவலை காங்கிரஸ் அரசு தடைசெய்தது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ அரசு ஆண்டபோது தஸ்லிமா நஸ்ரினின் நாவலைத் தடைசெய்தது. பாஜக கட்சியும் சரி அரசுகளும் சரி அந்தக் கட்சி சார்பான அமைப்புகளும்சரி பல்வேறு புத்தகங்களுக்கும் பல்வேறு கலைஞர்களுக்கும் முட்டுக்கட்டை போட்டிருக்கின்றன. எம்.எஃப். ஹுசைன், சிவாஜியைப் பற்றிய ஜேம்ஸ் லைனின் புத்தகம் தொடங்கி பெருமாள் முருகன் வரை ஏராளமான உதாரணங்களைக் காட்டலாம்.

(“என்றும் காந்தி!- 30: கருத்துச் சுதந்திரமில்லாக் காலத்துக்கு காந்தி!” தொடர்ந்து வாசிக்க…)

இளையராஜாவின் இசை காப்புரிமை!!!!!? முழு தவறு எஸ்பிபி பக்கம்?????

இந்த காப்பிரைட் நோட்டீஸ் விவகாரத்தில் முழு தவறு எஸ்பிபி பக்கம் இருக்கிறது. இளையராஜாவின் இசை காப்புரிமையை கவனித்துக் கொள்ள இப்போது தனி குழு இருக்கிறது. அவர்கள் அனுப்பியதுதான் இந்த நோட்டீஸ் (நிச்சயம் ராஜாவுக்குத் தெரியாமல் அனுப்பப்பட்டிருக்காது). அதுகூட எஸ்பிபிக்கு அனுப்பப்பட்டதல்ல. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் ஈவன்ட் கம்பெனிக்கு அனுப்பப்பட்டது. இப்படி ஒரு நோட்டீஸ் வந்ததும் அதைப் பற்றி ராஜாவிடமே தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கலாம் எஸ்பிபி. அல்லது அந்த கம்பெனி நிர்வாகிகளை அனுப்பி பேச வைத்திருக்கலாம். காப்புரிமை சட்டப்படி ராஜாவுக்கு சேர வேண்டியதைத் தரச்சொல்லி இருக்கலாம்.

(“இளையராஜாவின் இசை காப்புரிமை!!!!!? முழு தவறு எஸ்பிபி பக்கம்?????” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீடிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு முன்வைத்த கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களின் பின்னர் இந்த நிராகரிப்பு தீர்ப்பு வழங்கப்பட்டமையின் மூலம், அந்த அமைப்பின் மீதான தடை நீடிக்கப்படுவதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
தாம் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் செயற்பட்ட அமைப்பு எனவும், புலிகள் அமைப்பின் சட்டதரணி விக்டர் கோபேயினால் வெளியிடப்பட்ட கருத்தை ஐரோப்பிய நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. லக்சம்பர்க் நகரத்தில் ஐரோப்பிய நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினால் புலிகள் அமைப்பு மீதான தடை தொடர்ந்து நீடிக்கும் என குறிப்பிடப்படுகின்றது. புலிகள் அமைப்பு தீவிரவாத செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என புலிகள் அமைப்பின் சட்டதரணி நீதிமன்றத்தின் முன் கருத்து வெளியிட்டிருந்தார் என திவயின தகவல் வெளியிட்டுள்ளது.