மரண தண்டனை கூடாது

இந்தியக் கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற குல்பூஷண் ஜாதவ் என்ற இந்தியருக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. குல்பூஷணை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விசாரித்தது, தண்டனை வழங்கியது என்று எல்லோமே பரம ரகசியமாக வைக்கப்பட்டது. ஜாதவ் மீதான குற்றச்சாட்டுகளை சிவில் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும், அத்துடன் அவருக்கு மேல்முறையீடு செய்யும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். மேலும், ஜாதவ் தொடர்பான புலன் விசாரணையிலும் வழக்கு விசாரணையிலும் அப்பட்டமாக வெளியே தெரியும் வகையில் பல குறைபாடுகள் இருக்கின்றன. 2016 மார்ச்சில் அவரைக் கைது செய்த உடனேயே அவருடைய ஒப்புதல் வாக்குமூலம் என்ற அறிவுப்புடன் பத்திரிகை நிருபர்கள் சந்திப்பில் ஒலிபரப்பப்பட்ட தகவல்கள் முரண்பட்டி ருந்தன. அந்த ஒப்புதல் வாக்குமூலம் சட்டப்படி நீதிமன்றத் தால் ஏற்கப்படக் கூடியது என்று ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும், அதை நிரூபிக்கும் வகையில் எந்தவொரு சாட்சியத்தையும் பாகிஸ்தானால் முன்வைக்க முடியவில்லை.

(“மரண தண்டனை கூடாது” தொடர்ந்து வாசிக்க…)

நைஜீரிய பள்ளியிலிருந்து 300 பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு மூன்றாண்டு நிறைவு: நீதி கோரி பேரணிக்கு ஏற்பாடு

2014 ஏப்ரல் 14-ம் தேதி நள்ளிரவில் நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் சிபோக்கில் 300 பள்ளி மாணவிகள் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டனர்.இச்சம்பவம் நடந்து இன்றுடன் மூன்றாண்டு நிறைவடைந்துவிட்டது.மாணவிகளை மீட்கக் கோரி தலைநகர் அபுஜாவில் சமூக ஆர்வலர்கள் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். தலைநகர் அபுஜாவில் போராட்டமும் நடைபெற்றது.

(“நைஜீரிய பள்ளியிலிருந்து 300 பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு மூன்றாண்டு நிறைவு: நீதி கோரி பேரணிக்கு ஏற்பாடு” தொடர்ந்து வாசிக்க…)

முதலமைச்சர் எவ்வாறு ஏழு மாடி ஹோட்டல் கட்டுகிறார்?

”வடை விற்ற முதலமைச்சர் எவ்வாறு ஏழு மாடி ஹோட்டல் கட்டுகிறார்?”-கேள்வி.
”ஏழு மாடியல்ல பத்து மாடிகள் கட்டுகிறேன்.”-பதில்!

(எஸ். ஹமீத்)

”ஓடும் ரயில்களில் வடை விற்றுப் பிழைப்பு நடத்திய ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் எவ்வாறு ஏழு மாடிகள் கொண்ட ஹோட்டலொன்றைக் கட்டுகிறார்?” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கொழும்பு ஊடகம் ஒன்றிடம் எழுப்பிய கேள்விக்கு ” நான் ஏழு மாடிகள் கொண்ட ஹோட்டலையல்ல, பத்து மாடிகள் கொண்ட ஹோட்டலையே கட்டுகிறேன்!” என்று முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.

(“முதலமைச்சர் எவ்வாறு ஏழு மாடி ஹோட்டல் கட்டுகிறார்?” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்காவின் முதலாவது முஸ்லிம் பெண் நீதிபதி சடலமாக மீட்பு

அமெரிக்காவின் முதலாவது முஸ்லிம் பெண் நீதிபதியான ஷீலா அப்துஸ் சலாமின் சடலத்தை அமெரிக்காவின் ஹட்சன் ஆற்றிலிருந்து பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். நியூயோர்க்கின், ட்ரெயில்பேளசிங் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த ஷீலா அப்துஸ் சலாம், கடந்த வாரத்தில் காணாமல் போனார். இந்நிலையில், புதன்கிழமை மதியம் 1.45 மணியளவில் அவரது உடல் ஹட்சன் ஆற்றில் கரை ஒதுங்கியது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார், சலாமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 65 வயதாகும் சலாம், அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதி மற்றும் கருப்பின நீதிபதி என்ற பெருமைக்கு சொந்தக்காரர். மேலும் இவர் அமெரிக்காவின் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து நியூயோர்க் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

His Worship the Mayor of Toronto

By Email:

84 Tambrook Drive
Agincourt, ON M1W 3L9
Tel. (416) 498-0783
April 14, 2017
The Editor
Toronto Star
Toronto, Ontario
Copy to: His Worship the Mayor of Toronto

Dear Editor,
Mayor John Tory’s Opinion Column published on April 4, 2017 on
‘The quest for healing and Justice in Sri Lanka’
I find Mayor Tory’s opinion arrived at after a short visit to the country having spent just a day or two in the north is inaccurate, misleading and obviously based on whatever he heard from a few pre-selected individuals who were given the opportunity to meet with him. He being the Mayor of a city which has a multiplicity of ethnic groups that have made it their home, should avoid taking up the cause of a single ethnic group which has been engaged in a three decade long armed conflict including suicide terrorism in Sri Lanka to form a break away state with an eye to harness the votes of the expat Tamil community who are mainly residing in Toronto. Such comments could hinder the ongoing reconciliation process in that country, as he has ignored the views of other ethnic groups from Sri Lanka such as the Sinhalese, Moors, Malays, Burghers, etc. , who also live in his city.

(“His Worship the Mayor of Toronto” தொடர்ந்து வாசிக்க…)

Response to Commentary by Mayor Tory – April 4th 2017, Toronto Star

Dear Mayor Tory,

I am writing in regards to your commentary of your trip to the Northern Province of Sri Lanka, published on the Toronto Star dated April 4th 2017.

I was born and raised in Sri Lanka and lived in the country until I migrated to Canada with my family in 2008.  Being a Tamil citizen myself, I had been exposed to hardships of the 30-year civil war. Since migrating to Canada, I have visited Sri Lanka several times and in turn have made multiple trips to Jaffna, amongst other cities in the Northern Province.

(“Response to Commentary by Mayor Tory – April 4th 2017, Toronto Star” தொடர்ந்து வாசிக்க…)

எனக்கு வேண்டாம் இந்த புத்தாண்டு….?

தொலைத்த உறவுகளைத் தேடும் இடையறாத போராட்டம்… தமது வாழ்விடங்களை விடுவிக்க மழை வெயில் பாராது போராட்டம்…. கற்ற படிப்பிற்கும், பெற்ற பட்டத்திற்கு வேலை வேண்டிப் போராட்டம்….. தனியார் கல்விநிறுவனங்களை உருவாக்காதே என்ற கோரிக்கைப் போராட்டம்…. மலையகத்தில் வாழ்வாதாரத்தை வேண்டி மௌனப் போராட்டம்….. வரட்சிக்கு நிவாரணம் கோரி டெல்லி வரை சென்று இடுப்பின் உடைகளை களைந்து போராட்டம்….. இதில் எதிலும் ஆளும் வர்க்கங்கள் அதிகம் அக்கறை காட்டியதாக தெரியவில்லை. போர் முரசு கொட்டும் வளைகுடாவும் போர் ஒத்திகை பார்க்கும் கிழக்கு கடலோரமும்….. சர்வதேச போர் நகர்வுகள்…. மனிதம் செத்துப் போகின்றதா..? என்ற அச்சநிலை ஆனால் இன்று பிறக்கும் தமிழ் சிங்கள வருடப் பிறப்பிற்கு மட்டும் மொழி மதம் இனம் கடந்து வாழ்த்துகளும் மகிழ்ச்சியும் தெரிவிக்கும் ஆட்சியாளர்களின் ஆரவாரத்திற்கு குறைவுகள் இருக்காது…? இந்த வாழ்த்துக்களிலும் உண்மை இல்லை…. வாழ்த்தை ஏற்கும் மகிழ்வு நிலையிலும் மக்கள் இல்லை யாருக்கு வேண்டும் இந்த புதுவருடம்…? எனக்கும் வேண்டாம் இந்தக் கொண்டாட்டம்…? இது விரக்தியின் வெளிப்பாடு அல்ல விழிப்புணர்விற்கான அறைகூவல். போராடும் சக்திகளுக்கு ஆதரவழிப்போம் போராடுவதற்கான நிர்பந்தம் நாளை எங்கள் வீட்டுக்கதவையும் தட்டும் அதுவரை காத்திருந்தால் எமக்காகவும் போராட அன்று யாரும் வரப்போவது இல்லை.

மனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 40வருட நினைவுகள்

(என்.சரவணன்)

(இன்று ஜே.வி.பி. ஏப்ரல் கிளர்ச்சியின் 40வது வருட நினைவுநாள்…)

இக்கட்டுரை ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியான 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் 40 வது வருட நினைவு கூரல் நாடெங்கிலும் நடந்து கொண்டிருகின்ற இந்த வேளை அதன்போது கொல்லப்பட்ட மனம்பேரியை நினைவு கூருகிறது. 1996ஆம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்சியின் 25வது வருட நிகழ்வை நினைவை முன்னிட்டு சரிநிகரில் எழுதிய சிறப்புக் கட்டுரைகளில் இதுவும் ஒன்று. இக்கட்டுரை எழுதுவதற்காக கதிர்காமத்திலுள்ள மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று வீட்டாருடனும் பெற்றோருடனும் உரையாடினேன். கதிர்காமத்தில் மனம்பேரி கொல்லப்பட்ட இடத்தையும் சென்று பார்வையிட்டேன். ஜே.வி.பி தோழர்கள் என்னுடைய இந்த பயணத்தில் உதவினார்கள். குறிப்பாக முற்றிலும் சிங்களப் பிரதேசமான அங்கு அன்றைய சமயத்தில் தமிழர்கள் அச்சமின்றி போய் வரும் நிலை இருக்கவில்லை. என்னோடு வந்த என் சக ஜே.வி.பி. தோழர்கள் என்னுடைய பாதுகாப்பில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டனர்.

மனம்பேரி வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான எலடினையும் போய் சந்தித்தேன். அது தவிர 71 கிளர்ச்சி பற்றி விசாரணை செய்த விசேட நீதிமன்ற நீதிபதி ஏ.சி.அலஸ் (*1) எழுதிய நூலில் இருந்த தகவல்கள் சில இக்கட்டுரைக்கு உதவிற்று. மேலும் மனம்பேரி வழக்கு இடம்பெற்ற (1973 – மே) காலப்பகுதியில் வெளியான பத்திரிகைகளை தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் இருந்து சில நாட்களாக திரட்டிய தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இக்கட்டுரை தயாரிக்கப்பட்டது.
(“மனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 40வருட நினைவுகள்” தொடர்ந்து வாசிக்க…)

மட்டக்களப்பில் கறுப்பு, வெள்ளை நிறத்தில் சுவரொட்டிகள்

பிறக்கவிருக்கின்ற புத்தாண்டுக்கு வாழ்த்துக்கூறும் முகமாக, வெள்ளைத்தாளில் கறுப்பு எழுத்தில் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள் என எழுதப்பட்டும் அதன் கீழே, நாங்கள் தெருவோரப் பட்டதாரிகள் என குறிப்பிட்டும், மட்டக்களப்பு நகர் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டிகள், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இருமொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், தமக்கான நியமனத்தினை வழங்ககோரி, மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று (12), 51ஆவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

(“மட்டக்களப்பில் கறுப்பு, வெள்ளை நிறத்தில் சுவரொட்டிகள்” தொடர்ந்து வாசிக்க…)

‘ஆத்திரமூட்டப்பட்டால் அணுத் தாக்குதல்’

எந்தவகையான ஐக்கிய அமெரிக்க ஆக்கிரமிப்புக்கும் ஐக்கிய அமெரிக்கா மீது அணுத் தாக்குதலொன்று நடைபெறும் என வடகொரிய அரச ஊடகம், நேற்று (11) எச்சரித்துள்ளது. இதேவேளை, “போர்க்கப்பல்களின் கூட்டம்” என ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வர்ணித்த ஐக்கிய அமெரிக்க கடற்படையின் தாக்குதல் குழுவொன்று மேற்கு பசுபிக்கை நோக்கிச் செல்கையிலேயே, வடகொரியாவின் மேற்படி எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

(“‘ஆத்திரமூட்டப்பட்டால் அணுத் தாக்குதல்’” தொடர்ந்து வாசிக்க…)