அரசியல் தஞ்சத்துக்காக இலங்கை நேரப்படி இன்று காலையில் மெக்ஸிக்கோவுக்கு அந்நாட்டு இராணுவ விமானத்தில், மத்திய பொலிவிய நகரான சிமோரேயிலிருந்து பொலிவிய ஜனாதிபதி இவா மொராலெஸ் பயணமாகியிருந்தார்.
Month: November 2019
விடுதலைப் புலிகள் மீதான தடை 5 வருடங்களுக்கு நீட்டிப்பு
ஜனாதிபதிதேர்தல் களம் தொலைந்துபோகும் தேசிய இனப் பிரச்சனையும்,தேசியநல்லிணக்கமும்.
(வி.சிவலிங்கம்)
எதிர்வரும் 16 -11- 2019 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தேசிய இனப் பிரச்சனைஎன்பதுகாவுகொள்ளப்பட்டுள்ளது. தேசியசிறுபான்மை இனங்களின் வாக்குகள் இல்லாமலேயே ஜனாதிபதிபதவியைக் கைப்பற்றமுடியும் என்றநம்பிக்கைகள் வளர்ந்துள்ளன. பல்லினங்கள் வாழும் பன்மைத்துவசமூகத்தில் இன அடிப்படையிலானபெரும்பான்மையினரின் வாக்குகளைமட்டும் பெற்றுஅதிகாரத்தைக் கைப்பற்றுவது ஜனநாயகஅரசியலைக் கேள்விக்குட்படுத்துகிறது. ஒருகாலத்தில் தேர்தல்களில் தேசிய இனப் பிரச்சனைக்கானதீர்வுகள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் இன்றியமையாதஅம்சமாக இருக்கும். போர்க்காலத்தில்கூடதேர்தல் வாக்குறுதிகளின் நிகழ்ச்சிநிரலில் தேசிய இனப் பிரச்சனைமுதலாவது இடத்தைப் பிடித்திருந்தது. தற்போதுமுற்றாகவேகாணாமல் போயுள்ளது.
மரம் நடுகை மாதம் பகுதி 5
(வடகோவை வரதராஜன்)
நேற்றைய தொடர்ச்சி
36 வீட்டில் நடக்கூடிய மரங்கள்
மா , பலா , ஈரப்பலா , தோடை ,எலும்பிச்சை , அரிநெல்லி , கொய்யா , யம்பு , மாதுளை , அவகோடா , சீமைஇலுப்பை , தென்னை , மரமுந்திரி , அன்னமுன்னா —
37 இப்போ அநேகமானோர் உயிர் வேலிகளை அகற்றி தகர வேலிகளை அமைத்து வருகிறார்கள் . இதில் பட்டுத்தெறிக்கும் வெயில் , வளவையும் வீட்டையும் மிகுந்த உஷ்ணமாக்கிறது.
சீமெந்து மதில்கள் , தகரவேலிகள் என்பனவற்றை விட உயிர்வேலிகளே நமது வீடுகளை மிகவும் பாதுகாக்கிறது .
உயிர்வேலிகளை ஏறிக்குதித்து நமது வளவுக்குள் திருடர்கள் நுழைய முடியாது .
நீங்கள் தகர வேலிகள் அமைந்திருந்தாலும் கீழ்வரும் மரங்களை தகரவேலிக்கிடையில் நட்டால் சூழல் குளிர்ச்சியாவதோடு வீடும் பாதுகாக்கப்படுகிறது.உகந்த மரங்கள்
கிளிசீரிடியா , பூவரசு , அகத்தி , இப்பில் இப்பில் , வாதநாராயணி.
38 பொது வெளிகளில் புளி, வேம்பு இலுப்பை புன்னை ஆகியவற்றை அதிகம் நாட்டுவது சிறப்பானது .
இன்று வளவுகளில் உள்ள அநேக புளிய மரங்கள் மூடக்கொள்கை காரணமாக தறிக்கப்பட்ட காரணத்தால் இன்று புளி உச்சவிலையைத் தொட்டு நிற்கிறது.
நெடும் சாலைகளிலும் பொது இடங்களிலும் புளியை நாட்டினால் சட்டத்துக்கு பயந்து யாரும் தறிக்க மாட்டார்கள் .
தமிழகத்தில் ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது , நெடும்சாலையோரம் எல்லாம் புளியை நட்டாராம் . அப்போது அநேகர் அவரை கேலி செய்தார்களாம் .
இன்று தமிழ்நாட்டுக்கு அதிக வருமானம் பெற்றுத்தருபவை அந்த சாலையோர புளியமரங்களே .
39 ஏன் எண்ணெய்வித்துப் பயிர்கள் அதிகம் நடவேண்டும் ?
இன்று பாம்ஒயிலின் பாவனை குறைந்து உலகளாவிய ரீதியில் தேங்காய் எண்ணெயின் பாவனை அதிகரித்து வருகிறது .
சவர்க்காரம் செய்யப்பயன்படும் மூலப்பொருள்களில் முக்கியமானது தேங்காய் எண்ணையும் விலங்கு கொழுப்புமாகும் . தேங்காய் எண்ணெயின் உச்சவிலை சவர்க்கார உற்பத்தியாளர்களை வேறு தாவரஎண்ணைகளை நாடவைக்கும் . இதனால் வேப்பெண்ணெய் , இலுப்பெண்ணை, புன்னைஎண்ணெய் , ரப்பர்வித்து எண்ணெய் என்பவற்றிற்கு அதிக சந்தைமானம் கிடைக்கும் . இப்பொழுதே வேப்பெண்ணெய் போத்தல் 1000 ரூபாய் அளவில் விற்கப்படுகிறது . சுவிஸில் இலுப்பெண்ணை இங்கத்தைய பெறுமதியில் அங்கு 9000 ரூபாவிற்கு விற்கப்படுவதாக Inuvaijur Mayuran குறிப்பிடுகிறார் . எனவே நெடும் சாலை ஓரங்களிலும் பொது இடங்களிலும் அதிகளவு புளி ,வேம்பு , இலுப்பை ,புன்னை ஆகிய மரங்களை அதிகளவில் நடுவோம் .
40 கீழுள்ள படம் எனது மகள் பிறந்தபோது எமது ஆலய வீதியில் என்னால் நடப்ட்டட இலுப்பைமரம் .இன்று இதன் விதைகளில் இருந்து பெறப்படட இலுப்பெண்ணையில் இருந்தே கோவில் விளக்குகள் எரிக்கப்படுகின்றன .
இம்மரம் மகளை , இம்முறை ஊவாவெல்ல பல்கலைக்கழகத்திற்கு Mineral resource and management கற்கை நெறிக்கு அனுப்பிவைக்கிறது.
‘போர்குற்றம் பற்றி பேசுவதற்கு த.தே.கூவுக்கு தகுதியில்லை’
மரம் நடுகை மாதம் பகுதி 4
(வடகோவை வரதராஜன்)
முன்னைய தொடர்ச்சி
நான் முன்பு கூறிய மாதிரி ;
நாம் நடும் மரங்கள் மனிதனுக்கு , விலங்குகளுக்கு பறவைகளுக்கு , தேனீக்களுக்கு பயன்படுவையாக இருக்கவேண்டும் . ஒரு மண்ணுக்கு சம்மந்தம் இல்லாத மரத்தை நாம் நடும் போது அது வளராது அல்லது வீரிய வளர்ச்சியைக் காட்டாது . உங்கள் சூழலில் இயற்கையாக என்ன மரங்கள் வளர்ந்திருக்கின்றன என அவதானியுங்கள் . அவற்றை நடுகை செய்யுங்கள்