‘மெல்ல’ வரும் கபளீகரம்

(Menaka Mookandi)

நிகழ்காலத்தில், நாம் வாழும் இந்த நொடி, பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார மாற்றங்களைக் கண்டுவருகிறது. காலமும் இடைவெளியும், நகரம், கிராமம் என்றில்லாமல், மாற்றங்கள் பலவற்றை உருவாக்கி வருகின்றது. இவ்வாறான மாற்றங்களால், எமது நாட்டுக்குள்ளேயே இரண்டு உலகங்களைக் காணும் பாக்கியம் கிட்டியுள்ளது எனலாம். ஆனால் துரதி​ர்ஷ்டவசமாக, அவ்விரு உலகங்களில் ஒன்றை, மகிழ்வுடன் கண்ணோக்க முடியாது. காரணம், அந்த உலகத்தில், வறுமை, வேதனை, பசி, பட்டினியென, பல்வேறு பிரச்சினைகளுடன் வாழும் மக்களைத் தான் காணக்கிட்டும். மறுபுறம், வானுயர்ந்த கட்டடங்கள், எண்ணிலடங்காத வாகனங்கள், கஷ்டமென்பதே தெரியாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களைக் காணலாம். இவ்விரு உலகங்களுக்கும் இடையிலான இடைவெளியை, எவராலும் அடைக்க முடியாதளவுக்குப் பரந்து காணப்படுகிறது.

(“‘மெல்ல’ வரும் கபளீகரம்” தொடர்ந்து வாசிக்க…)

புத்திசாலியான பிரான்ஸ் காகம்

(Amirthapriya)

சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருப்போம்: சுத்தம் சுகம் தரும் என்ற வாசகங்கள், நாம் நமது சிறு பராயம் முதலிருந்தே அறிந்தவையாகும். உடல், உள சுத்தங்களைத் தாண்டி, நமது சுற்றுப்புறச் சூழலின் பாதுகாப்பு குறித்தும் அவதானம் செலுத்துவது மிக முக்கியமானதாகும். நாம் நடமாடித் திரியும் சுற்றாடலின் தூய்மையைச் சரிவரப் பேணும்போது தான், நம்முடைய உடல் மற்றும் உள தூய்மைகளும் சீராகப் பேணப்படுமென்பதே நிதர்சனமாகும்.

(“புத்திசாலியான பிரான்ஸ் காகம்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு முதலமைச்சர்: உள்ளூர் தீர்மானிக்கும் வியடமல்ல

(க. அகரன்)

உலக அரங்கில், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அதன் தாக்கங்கள் அதிகமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரை, அதன் அரசியல் நிலைப்பாடுகள், உள்ளூரில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்ற கருத்தியல் பரவலாகவே உள்ளது. ஏனெனில், அதன் இயங்கு நிலை தொடர்பிலும் அதன் ஸ்திரத்தின் பெறுமதி தொடர்பிலும், அதைத் தீர்மானிப்பது வல்லரசு நாடுகளின் அல்லது அயலில் உள்ள பலம் பொருந்திய நாடுகளின் கைகளிலேயே உள்ளது என்பதே உண்மை.

(“வடக்கு முதலமைச்சர்: உள்ளூர் தீர்மானிக்கும் வியடமல்ல” தொடர்ந்து வாசிக்க…)

பேராசிரியர் ஹஸ்புல்லா

பேராசிரியர் ஹஸ்புல்லா இலங்கையில் சமூகங்களிடையே நல்லுறவு “எல்லாரும் இன்புற்றிருக்கவே இவ்வுலகு” என வழ்ந்தவர். மெல்லிதயம் கொண்ட மனிதர். வன்மம் பகை உணர்வுகளுக்கு இடமளியாமல் வடக்கு முஸ்லீம்களின் பாடுகளை தொடர்ச்சியாக வெளிபடுத்திவந்ததோடல்லாமல் அவர்களுக்கு கண்ணியமான இருப்பை ஏற்படுத்த பாடுபட்டவர். வடக்கில் இருந்து துரத்தப்பட்ட முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றத்திற்காகவும் சமூகங்களிடையே புரிதலுக்காகவும் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை அர்ப்பணித்தவர்.

(“பேராசிரியர் ஹஸ்புல்லா” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 04)

(Thiruchchelvam Kathiravelippillai)

கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் எண்பதுகளின் முன்னர் குறிப்பாக 1984 ஆம் ஆண்டின் முன்னர் மிகவும் அன்னியோன்னிய உறவுடன் வாழ்ந்து வந்தனர். தமிழ் மக்களின் திருமண வீடுகளில் முஸ்லிம் மக்கள் கலந்துகொள்வதும் முஸ்லிம் மக்களின் திருமண வீடுகளில் தமிழ் மக்கள் கலந்து கொள்வதும சாதாரண விடயங்கள். அனேகமான நல்லது கெட்டதான நிகழ்வுகள் இரு சமூக மக்களும் கலந்தே நடத்தினர். பிட்டும் தேங்காய்ப் பூவும் போல என எடுத்துக்காட்டுகள் கூறப்பட்டன.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 04)” தொடர்ந்து வாசிக்க…)

நண்பர் நுஃமான் தான் ஹஸ்புல்லாஹ்வை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்……

7 நாட்களாக முகநூலுக்குள் வரவில்லை. நான் வரவில்லை என்பதற்காக சூரியன் உதிக்காமலுமில்லை. ஆனாலும் கடந்த 25ம் திகதி பகல் 10 மணியளவில் நண்பர் சிராஜ்மஸூர் சொன்ன செய்தியும் நண்பர் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் தொலைபேசியில் அழைத்த நிகழ்வும் என்னைக்கலங்கவைத்து…

(“நண்பர் நுஃமான் தான் ஹஸ்புல்லாஹ்வை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்……” தொடர்ந்து வாசிக்க…)

நீரை வெறுக்க வைத்த…? மழை வெள்ளம்…..! (பகுதி 2)

ஈரலிப்பான குளிர்மையான மேற்குத் தொடர்ச்சி மலையை தனது கிழக்கு எல்லையாகவும் வறட்சியான வெப்பமான கரிபியன் கடலை தனது மேற்கு எல்லையாகவும் கொண்ட மாநிலம் தான் கேரளா. தெற்கு வடக்கு எல்லைகள் இல்லையா என்று சொல்லும் அளவிற்கு ஒடுக்கம்மான பகுதிகளை உடையது. ஊரெங்கும் கடற்கரை உல்லாசப் பயணத்திற்குரிய சூழல் கோவளம் கடற்கரையை மறக்க முடியாத அழகு பூமி. ஏன் எமது யாழ்ப்பாணத்து வேலிகள், இலுமிச்சைகள், கொய்யா. முருங்கை, வாழை தென்னைகள் இன்னபிற வீட்டுப்பயிர்களை தன்னகத்தே கொண்ட கிராமத்து பூமி.

(“நீரை வெறுக்க வைத்த…? மழை வெள்ளம்…..! (பகுதி 2)” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் சிங்கள மகா வித்தியாலயத்தை மீண்டும் திறக்க முயற்சி

யாழ் சிங்கள மகா வித்தியாலயத்தை மீண்டும் திறப்பதற்கான முக்கியப் பேச்சுவார்த்தை ஒன்று, யாழ் பழைய பூங்காவில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 53 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் நகரப் பகுதியில் அமைக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயமானது, 1985 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகளால் மூடப்பட்டது. இந்நிலையில், தற்போது அதனை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, யாழ் பழைய பூங்காவில் குறித்த பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள், யாழ் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாழும் சிங்களவர்கள் உள்ளிட்ட பலரும் நேற்று கூடி, இது தொடர்பில் கலந்துரையாடியிருப்பதாக தெரியவந்துள்ளது. எனினும் தற்போது இராணுவத்தினரின், ஆக்கிரமிப்பிலேயே யாழ் சிங்கள மகா வித்தியாலயம் இருக்கின்றது.

‘தீர்வை ஒத்திவைத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’

நாட்டில் தற்போது யுத்தம் இல்லை. ஆனால், யுத்தம் ஏற்பட்டதற்கான காரணங்கள் அப்படியே இருந்துகொண்டுதான் இருக்கின்றன என்று தெரிவித்த, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், அரசியல் தீர்வைப் பெறும் வரை பொருளாதார தீர்வை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்திவைத்துள்ளது என்றும் கிளிநொச்சி மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில், இளைஞர் யுவதிகளுடனான சந்திப்பு, கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் நேற்று (26) இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

(“‘தீர்வை ஒத்திவைத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’” தொடர்ந்து வாசிக்க…)

இராணுவ அதிகாரியிடமிருந்து தமிழ்த் தலைமைகள் கற்றுக்கொள்ள வேண்டும்

இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் வரதராஜப்பெருமாள்
(வாசுகி சிவகுமார்)

தன்னைப் போன்றவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் எனக் கூறும் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள், அதனை அறிந்துகொண்டே தேர்தல் சகதிக்குள் குதிக்கும் எண்ணம் தமக்கில்லை என்கின்றார்.
வட மாகாண சபையின் வினைத்திறமின்மை பற்றியும், சமகால அரசியல் நிலவரம் பற்றியும் அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு மனந் திறக்கின்றார்……

(“இராணுவ அதிகாரியிடமிருந்து தமிழ்த் தலைமைகள் கற்றுக்கொள்ள வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)