யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்ற கடிதத் தலைப்பில் இரு முரண்பட்ட அறிக்கைகள் நேற்று பெப்ரவரி 8 இல் வெளியிடப்பட்டு உள்ளது. முதலாவதாக வந்த அறிக்கை யாழ் பல்கலைக்கழகங்களில் உள்ள துறைசார்ந்த பீடங்களின் மாணர் ஒன்றியங்கள் இணைந்து உடன்பட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறிக்கையாக அப்பீடங்களின் தலைவர்கள் செயலாளர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது. இதுவே உத்தியோக பூர்வ அறிக்கையாக வெளியிடப்பட்டது.
Author: ஆசிரியர்
இது அஞ்சலி அல்ல
சம்பளத்தில் 90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர்! யார் இவர்?
“தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்…! “இவை ஏதோ சினிமா டயலாக் அல்ல! இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள்! நடைமுறையில் நிறைய விவசாயிகளின் தற்கொலை முடிவை மாற்றி வாழ்வதற்கான நம்பிக்கை தந்த உயிரோட்டமுள்ள வார்த்தைகள்! அந்த சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல! இந்தி நடிகர் நானா படேகர் தான்! (தமிழில் இவர் நடித்த படம் : பொம்மலாட்டம்) தனது சம்பாத்தியத்தில் 90 சதவீதத்தை நன்கொடையாக வழங்கிய சூப்பர் ஹீரோ!
(“சம்பளத்தில் 90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர்! யார் இவர்?” தொடர்ந்து வாசிக்க…)
மரண அறிவித்தல்
திரு பாலச்சந்திரன் சண்முகராஜா
பிறப்பு : 29 சனவரி 1956 — இறப்பு : 6 பெப்ரவரி 2018
யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் சண்முகராஜா அவர்கள் 06-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
உள்ளுராட்சித் தேர்தலும் அரசியல் கட்சிகள் எதிர்கொள்ளும் சவால்களும்!
(த ஜெயபாலன்)
உள்ளுராட்சித் தேர்தல்கள் மகிந்த ராஜபக்ச, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இன்றியமையாததொரு தேர்தலாககும். இத்தேர்தலானது நாடு முழவதும் ஒரே நாளில் நடைபெறவுள்ளது. மேலும் என்றுமில்லாத வகையில் கூட்டாட்சியில் இணைந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் இந்தத் தேர்தலில் மீண்டும் தனித் தனியாகப் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலின் பின் இக்கூட்டாட்சியைத் தொடர முடியுமா என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டு உள்ளது. மேலும் இத்தேர்தலில் சுதந்திரக் கட்சி மைத்திரிபால சிறிசேன தலைமையிலும் மகிந்த ராஜபக்ச தலைமையிலும் பிளவுபட்டு ஐக்கிய தேசியக் கட்சியுமாக தெற்கில் மும்முனை போட்டிக் களமாக இந்த உள்ளுராட்சித் தேர்தல் மாறியுள்ளது.
(“உள்ளுராட்சித் தேர்தலும் அரசியல் கட்சிகள் எதிர்கொள்ளும் சவால்களும்!” தொடர்ந்து வாசிக்க…)
உள்ளுராட்சித் தேர்தல் களத்தில் சமூக விரோதிகள்
இத்தேர்தல் களத்தில் பல்வேறு சமூக விரோத சக்திகள் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டு உள்ளனர். திருடர்கள், சண்டியர்கள், காடைத்தனங்களில் ஈடுபடுவோர், குற்றவாளிகள், பெண்களை இழிவுபடுத்தியோர் என பலதரப்பட்டவர்களும் இத்தேர்தலில் களமிறக்கப்பட்டு உள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் கட்சிகளின் சார்பில் பல சமூகவிரோத சக்திகளை தேர்தலில் நிறுத்தி உள்ளனர்.
(“உள்ளுராட்சித் தேர்தல் களத்தில் சமூக விரோதிகள்” தொடர்ந்து வாசிக்க…)
மூத்த ஊடகவியலாளர் கமலா தம்பிராஜா இயற்கை எய்தினார்
அக்கால இலங்கை வானொலி/ தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகப் பரிச்சயமான மூத்த ஊடகவியலாளர் கமலா தம்பிராஜா அவர்கள் தாம் புலம்பெயர்ந்து வாழ்ந்த கனடா, Torontoவில் 2018.02 07 மறைந்த தகவலை அறிய முடிகிறது! கமலா தம்பிராஜா அவர்கள் இலங்கையில் தொலைக்காட்சியில் முதன்முதலில் தமிழில் செய்திவாசித்தவர் என்ற பெருமைக்குரியவர்! பேராதனைப்பல்கலைக்கழகப் பட்டதாரியான அவர் “வீரகேசரி ” பத்திரிகையில் தமது ஊடகப் பணியை ஆரம்பித்துப் பிற்காலத்தில் இலங்கை வானொலியில் சிறிது காலம் தயாரிப்பாளராகவும்,செய்திவா
நாளை மறுதினம் (10.02.2018) நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைகளின் தேர்தல் நிலவரம் பற்றிய கண்ணோட்டம்…
யாழ் மாநகர சபை
—————————-
தமிழ்த்தேசியப் பேரவை, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கிடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. எந்தத் தரப்பும் பெரும் பெரும்பான்மையைப் பெறக் கூடிய நிலைமை காணப்படவில்லை. ஆகவே, இதுவரையான வரலாற்றுக்கு மாறான முறையில் இந்த முறை புதியதொரு மாநகராட்சி அமையக் கூடிய வாய்ப்புகளே உள்ளன.
ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்
(சமரன்)
புதிய பதிவுக்காகவும்
புதிய தலைமுறைக்காகவும்
இவற்றைச் சொல்லியே ஆகவேண்டும்.
கால் நூற்றாண்டுகளுக்கு முந்திய நிகழ்வுகளின் நினைவுகள்.
(“ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்” தொடர்ந்து வாசிக்க…)
இலங்கையின் இடதுசாரிகளும் பிரதிபலிப்புகளும்
(Ahilan Kadirgamar)
சிவப்புக் குறிப்புகள்
சுதந்திர இலங்கையின் வயது, 70 ஆண்டுகளை அடைந்துள்ள நிலையில், சுய விமர்சனங்களின்றி, தன்னைத் தானே அது மீளக்கட்டியெழுப்ப முடியாது. சிங்கள – பௌத்த தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம் என, இரண்டு சக்திகளுக்கு நடுவில் நாம் வாழும் நிலையில், அவ்வாறான சுய விமர்சனத்துக்கான தூண்டல், எங்கிருந்து வரும்? தமிழ் இடதுசாரிகளின் பிரதிபலிப்பான எழுத்துகள் எழுச்சியடைவதைக் கண்டு நான், சிறிய நம்பிக்கையொன்றைக் காண்கிறேன்.
(“இலங்கையின் இடதுசாரிகளும் பிரதிபலிப்புகளும்” தொடர்ந்து வாசிக்க…)