ஈழத்தில் தமிழர் வரலாறு பல்லாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்தது லெமூரியாவிலிருந்து பிரிந்த துண்டம் எனும் கதையாடல்களும் ஏழாயிரம் வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கடல் கோளினால் தமிழகத்திலிருந்து பிய்ந்த தொங்கு தசை எனும் நம்பிக்கைகளும் பழங்குடிகள் பற்றிய வரலாற்று செய்திகளும் பின்னர் எல்லாளன் , சேனகன் , குட்டன் தொடர்ந்து வந்த சேர சோழ பாண்டிய தொடர்புகளும் , குளக்கோட்டன், ஆடகசெளந்தரி, வன்னிபங்கள், மாகோன் சங்கிலியன், பண்டார வன்னியன் என நீண்ட அரசுரிமை வரலாறும்.ஈழம் முழுவதும் கண்டெடுக்கப் பட்ட தொல்லியல் சான்றுகளும் கல்வெட்டுக்களாயும் வாழ்விட அழிபாடுகளாயும்,தாழி மற்றும் மட்பாண்ட சுடு மண் சிற்பங்களும் குளங்களை அண்டி கட்டமைக்கப் பட்ட ஊர் குடியிருப்புகளும் ஆற்றோர படுக்கைகளின் வழி நீண்ட தொன்மைக் கால வாழ்விடங்களும் உதாரணமாக மாவலிக் கரையில் செழித்திருந்த திருக்கரசை நாகரிக மரபு என நம் வரலாற்று சுவடுகள் .
(“ஈழத் தமிழர் அரசியல்” தொடர்ந்து வாசிக்க…)