பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 25 )

பற்குணம் ஊரில் இருந்து திரும்பி வந்த சில நாட்களின் பின்பு இராசதுரை மிகவும் மரியாதை கலந்த வாரத்தைகளுடன் அண்ணன் பற்குணம் என விழித்து ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். இராசதுரை பல தடவைகள் ஓ.எல். எடுத்தே ஒருவாறாக சித்தியடைந்தவர்.இப்போது ஏ.எல் பரீட்சை எழுதியிருந்தார்.அதில் அவர் சித்தியடைவாரா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது.பற்குணம் விரிவுரையாளாராக இருந்த காலத்தில் உயர்தர பரீட்சை வினாத்தாள்களை திருத்தியவர். எனவே அதன் அடிப்படையிலேயே தன் பரீட்சை இலக்கம் கொடுத்து தனக்கு உதவுமாறு வேண்டி எழுதியிருந்தார்.அதனைத் தொடர்ந்து நடராசாவும் அந்த உதவியை வேண்டி கடிதம் எழுதினார்.இதைவிட ராசதுரையும் ஊரில் பற்குணன்ணை எப்படியும் தன்னை பாஸ் பண்ண வைப்பார் என தன் நண்பரகளிடம் சொல்லித் திரிந்தார்.அவருக்கு அப்போது வயது 24.

(“பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 25 )” தொடர்ந்து வாசிக்க…)

நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு 4 வாரங்களுள் கடவுச்சீட்டு

இந்தியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கின்ற அகதிகளுக்கு, இரண்டு வார காலத்திலிருந்து நான்கு வாரங்களுக்குள் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை தெரிவித்தார்.

(“நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு 4 வாரங்களுள் கடவுச்சீட்டு” தொடர்ந்து வாசிக்க…)

7 விடயங்களை வைத்துக்கொள்ள வழிப்படுத்தல் குழு தீர்மானம்

அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, முக்கியமான ஏழு விடயங்களை உப-குழுக்கள் வசம் ஒப்படைக்காது தாமே கையாள்வதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிப்படுத்தல் குழு தீர்மானித்துள்ளது. அரசின் தன்மை, இறையாண்மை, மதம், அரசாங்கத்தின் வடிவம், தேர்தல் மறுசீரமைப்பு, அதிகாரப் பகிர்வு நியமங்கள் (கொள்கை) மற்றும் காணி ஆகிய ஏழு விடயங்களையே, வழிப்படுத்தல் குழு தம்வசம் வைத்துக்கொள்ளவுள்ளது.
வழிப்படுத்தல் குழுவின் இரண்டாவது கூட்டத்தின் போதே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று, நாடாளுமன்ற பணியாற்றொகுதியின் தலைமை அதிகாரியும் பிரதி செயலாளர் நாயகமும், வழிபடுத்தல் குழுவின் செயலாளருமான நீல் இத்தவெல விடுத்த அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“7 விடயங்களை வைத்துக்கொள்ள வழிப்படுத்தல் குழு தீர்மானம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் அரசுக் கட்சியின் சுழியோட்டம்: கூட்டமைப்பின் சிதைவுக் காலம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தன்னுடைய சிதைவுக் காலத்தின் முக்கிய கட்டத்தை அடைந்து நிற்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அகற்றத்துக்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியல் களத்தின் பிரதான ‘குறைநிரப்பு’ தரப்பாக மக்களினால் தொடர்ந்தும் முன்மொழியப்பட்டு வந்த த.தே.கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கின்ற இன்றைய குழப்பகரமான நிலையும் அதன் போக்கிலான சிதைவும் சிக்கலானதுதான். இப்படியொரு நிலைமை ஏற்படுமென்று மக்கள் எதிர்பார்த்திருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்வது தொடர்பில் சலிப்படைவார்கள். அது தேவையற்ற நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்தும் வல்லமை பெற்றது.

(“தமிழ் அரசுக் கட்சியின் சுழியோட்டம்: கூட்டமைப்பின் சிதைவுக் காலம்” தொடர்ந்து வாசிக்க…)

இவ்வாறான மே தினக் கூட்டங்கள் தேவை தானா?

இம்முறை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி, மஹிந்த என்ற இரு குழுக்களின் மே தினத்துக்கான ஆர்வத்தைப் பார்த்தால், அது முதலாவது சோசலிச நாடான சோவியத் ஒன்றியத்தின் முதலாவது ஜனாதிபதியும் சர்வதேச கம்யூனிஸ இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான வி.ஐ.லெனினுக்கு, மே தினத்தைப் பற்றி இருந்த ஆர்வத்தை விடவும் அதிகமோ என்று எண்ணத் தோன்றியது.

(“இவ்வாறான மே தினக் கூட்டங்கள் தேவை தானா?” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ ( பகுதி 24)

எமது ஊர் பாடசாலையில் இருந்து ஒரு அழைப்பிதழ் ஒன்று பற்குணத்துக்கு வந்தது.அங்கு கற்பித்த இரண்டு ஆசிரியர்கள் ஓய்வு பெறுகிறார்கள்.அவரகளுக்கு பிரியாவிடை கொடுக்கும் விழா இது.இதில் பேச்சாளரகளாக பற்குணத்தின் பெயரும் போடப்பட்டு அழைக்கப்பட்டார்.இதில் நடராசா,இராசதுரை ஆகியோரின் பெயர்களும் இருந்தன.பொதுவாக நடராசா எங்கள் சமூகத்தில் தன்னைவிட உயர்ந்தவர்கள் படித்தவர்கள் ஆகியோரை விரும்புவதில்லை.இதில் பற்குணத்தின் பெயரை இணைத்தது ஆச்சரியமானது.பற்குணம் நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட பின் சொந்த ஊர் நிகழ்ச்சி அழைப்பு என்பதால் கட்டாயம் போகவேண்டிய சூழ்நிலை.

(“பற்குணம் டி.ஆர்.ஓ ( பகுதி 24)” தொடர்ந்து வாசிக்க…)

“கூட்டமைப்பை பிரிக்க சம்பந்தனும் துணை?”

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுப்படுத்த அல்லது அங்கத்துவக் கட்சியை ஒதுக்குவதற்கு தமிழ் அரசுக் கட்சி எடுக்கும் முயற்சிகளுக்கு, கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கவனத்தில் கொள்ளாமல் இருப்பதைப் பார்க்கும் போது, அவரும் அதற்கு துணை போகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது’ என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

(““கூட்டமைப்பை பிரிக்க சம்பந்தனும் துணை?”” தொடர்ந்து வாசிக்க…)

தோழர்.சி.சண்முகநாதன் அவர்களை நினைவுகூரல்

மார்க்ச்சிச- லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியின் வடபுல செயற்பாட்டாளரும் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளருமான தோழர்.சி.சண்முகநாதன் அவர்களை நினைவுகூரல்

இடம்:- கேட்போர் கூடம்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
58,தர்மாராம வீதி, கொழும்பு – 06
காலம் :- 08 மே 2016, ஞாயிற்றுக்கிழமை
நேரம் :- மாலை 4.30 மணி
தலைமை:
க. இராஜரட்ணம்
உரைகள்:
· நீர்வை பொன்னையன்
· வை.கருணைநாதன்
· இரா. தர்மலிங்கம்
அனைவரும் வருக

ஏற்பாடு:
இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம்

தூக்கம் வராவிடின் வீட்டில் இருக்கவும் – சரத் பொன்சேகாவின் நாகரீகமற்ற பேச்சு

‘அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கே பொலிஸ் பாதுகாப்புத் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு இராணுவம் இன்றித் தூக்கம் வராவிட்டால் அவர், வீட்டிலேயே இருந்து கொள்ளலாம்’ என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (03), ஒன்றிணைந்த எதிரணியினால் எழுப்பப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்து உரையாற்றிய பின்னர், உரையாற்றும் போதே அமைச்சர் பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.

(“தூக்கம் வராவிடின் வீட்டில் இருக்கவும் – சரத் பொன்சேகாவின் நாகரீகமற்ற பேச்சு” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 23 )

நாங்கள் அண்ணனுடன் வந்தபின் நாளாந்தம் சமையலுக்குப் பொருட்கள் வாங்கப் போவோம்.பற்குணமும் நானும் போவோம்.அன்றைய ஆரம்ப நாட்களில் பல பொதுமக்கள் பற்குணத்தை அடையாளம் தெரியாது.அதனால் வெள்ளை சாரம் அணிந்து என்னுடன் வருவார்.காலையில் கடற்கரைக்கு மீன் வாங்கப்போவோம்.அவரகள் பிடித்த மீன்களின் அளவுக்கேற்ப நாங்கள் கொடுக்கும் காசுகளுக்கு மீன் கொடுப்பார்கள்.அதன் மூலம் அவர்கள் வருமானம்,சந்தோசம் துக்கம் எல்லாம் கொடுக்கும் மீனின் அளவைக் கொண்டே பற்குணம் கணித்தார் .அவரகளிடம் பேரம் பேசாமல் வாங்கிவருவோம்.

(“பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 23 )” தொடர்ந்து வாசிக்க…)