புலிகளின் திலீபனைப்பற்றி அறிந்து கொள்ளுங்கள்

84ம் ஆண்டு எனது ஊரில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றுக்காக புலி உறுப்பினரன முரளி வந்திருந்தார். அப்போது புலிகள் தலைமறைவாக இருந்த காலம். ஊருக்குள் ஆட்சேர்க்கும் நடவைக்கையில் முரளி ஈடுபட்டிருந்தார். கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் முரளியைத் தாறுமாறாகக் கேள்விகள் கேட்டனர் அங்கு ஒருவர் கேட்ட .கேள்விக்கு முரளியால் பதில் சொல்ல முடியவில்லை.. கேள்வி கேட்டவர் வேறு யாருமல்ல. ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தைச் சேர்ந்த நக்கீரன்.

(“புலிகளின் திலீபனைப்பற்றி அறிந்து கொள்ளுங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

புலி திலீபனின் உண்மை முகம்

 

மாற்று இயக்கங்களை தடை செய்து அழித்தொழித்ததில் முக்கியமானவர் திலீபன்… தலைமறைவாக இருக்கும் புலி உறுப்பினர்கள் திடீரென்று ஊருக்குள் வருவார்கள். இன்றைக்கு இந்த இடத்தில் கூட்டம் ஒன்று வைக்க வேணும் என்பார்கள். திலீபனின் ஊர் ஊரெழு. ஆவரங்காலைச் சேர்ந்த முரளி (கிங்கோ) முன்னர் ஐரோப்பாவில் இருந்தவர். பின்னர் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டார். முரளி உரும்பிராய்க்கு வரும்போது திலீபனையும் அழைத்துக்கொண்டு பிரச்சாரக்கூட்டங்களுக்கு வருவார். முரளி எனது வீட்டுக்கும் வருவதுண்டு. காரணம் எனது ஊருக்குள் இளைஞர்களை இயக்கத்தில் இணைக்கும் முயற்சியில் முரளி ஈடுபட்டிருந்தார். என்னையும் இயக்கத்தில் இணையும்படி கேட்டுக்கொள்வார்.

(“புலி திலீபனின் உண்மை முகம்” தொடர்ந்து வாசிக்க…)

எம்மவர் உண்ணா விரதம் தொடர் கதை தானா?

(மாதவன் சஞ்சயன் )

நல்லாட்சியில் கூட மாறாது தொடரும் மோசமான நிலை இதனை எழுதத் தூண்டுகிறது. சிறைகளில் வாடும் எம் உறவுகள் தம் விடுதலை வேண்டி தொடங்கிய உண்ணா விரதம் சிலருக்கு அரசியல், பலருக்கு வேதனை. இவர்கள் ஒன்றும் கொலையாளிகளோ, பாலியல் வன்புணர்வில், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களோ அல்ல. இனத்துக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் அல்லது, போராளிகள் என்று அவர்கள் நம்பியவர்ளுக்கு உதவி செய்தவர்கள். அவர்களை பிடித்த படையினர் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் பிடித்தோம் என்ற சாட்சியங்களை அன்றே கொடுத்திருந்தால் நீதி மன்றில் அவர்கள் குற்றவாளிகளா இல்லையா என்பது எப்போதோ வெளிவந்திருக்கும். மாறாக அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே ஒரு காரண அடிப்படையில், கொட்டியா (புலி) என்று சந்தேகித்து, விசாரணை கூண்டில் அடைக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்டன.

(“எம்மவர் உண்ணா விரதம் தொடர் கதை தானா?” தொடர்ந்து வாசிக்க…)

டேவிட் ஐயாவின் இறுதி நிகழ்வு கிளிநொச்சியில்

 

டேவிட் ஐயாவின் இறுதி நிகழ்வு கிளிநொச்சியில் நடந்தது. மிகக்குறைந்தளவானவர்களே கலந்து கொண்டனர். ஊடகங்கள் எதுவும் அவரின் இறுதி நிகழ்வு பற்றிய செய்திகளையோ அவரைப்பற்றிய விவரங்களையோ வெளியிடவில்லை. அவர் ஒரு காலங்கடந்த மனிதராகவே ஊடகங்களால் கைவிடப்பட்டிருந்தார். குறைந்த பட்சம் இணையத்தளங்களையும் முகப்புத்தகத்தையும் பார்த்துக்கூட அவரைப்பற்றிய தகவல்களை அறியும் நிலையில் இலங்கைத்தமிழ் ஊடகங்கள் இருக்கவில்லை. அல்லது அவர் புளட்டுடன் அடையாளம் காணப்பட்டவர் என்பதால், தற்போது அவர் எந்தப் பட்டியலில் (துரோகியா தியாகியா ) உள்ளார் என்ற குழப்பத்தில் அவரைப்பற்றி எழுதவும் வெளிப்படுத்தவும் தயங்கியிருக்கலாம். இறுதி நிகழ்வில் பலர் உரையாற்றினார்கள். ஆனால் டேவிட் ஐயா எந்த இடம் பெயர்ந்து வந்த மலையக மக்களின் ஈடேற்றத்துக்காக முன்னின்று உழைத்தாரோ, யாருடைய வாழ்க்கை முன்னேற்றம் காண வேண்டும் என்று விளைந்தாரோ அவர்களில் இருந்து ஒருவர் கூட உரையாற்றவில்லை. அப்படி ஒருவருக்கான இடமும் கிடைக்கவில்லை. அவரைச் சிலர் தமக்கான நிகழ்கால – எதிர்கால அரசியலுக்குத் தத்தெடுக்க முனைந்ததுதான் ஆகப் பெரிய அவலமாக இருந்தது.

(Sivarasa Karunagaran)

புலி உறுப்பினரை நாடுகடத்த உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் கனேடிய அமைப்பை இயக்குவதற்காக டொரோன்டோவுக்குச் சென்ற, தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் எனக் கூறப்படும் மாணிக்கவாசகம் சுரேஷ் என்பவரை நாடு கடத்துமாறு, கனேடிய பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனேடிய குடிவரவு சட்டங்களின் அடிப்படையில் சுரேஷை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என அந்நாட்டு குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

(“புலி உறுப்பினரை நாடுகடத்த உத்தரவு” தொடர்ந்து வாசிக்க…)

வெலே சுதாவுக்கு மரண தண்டனை

கடந்த 2008ஆம் ஆண்டு கல்கிசை பகுதியில் 7.05 கிராம் ஹெரோய்னை தன்வசம் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமன் குமாரவை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு மரண தண்டனை விதித்து சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளார்.

தமிழ் கைதிகளின் உடல் நிலை பாதிப்பு

தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றுத் தொடர்ந்தது. உண்ணாவிரதமிருந்த நான்கு கைதிகளின் உடல்நிலை மோசமடைந்ததால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் கோரிக்கை ஜனாதிபதியின் செயலாளர், சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப் பட்டிருப்பதுடன், சட்டம் ஒழுங்கு அமைச்சர் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவிருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹண புஷ்பகுமார தெரிவித்தார்.

(“தமிழ் கைதிகளின் உடல் நிலை பாதிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு! 5

(மாதவன் சஞ்சயன்)

2007ன் பின் இப்போது தான் கதிர்காமம் வருகிறேன். மக்கள் மனங்கள் உட்பட எந்த ஒரு பெரிய மாற்றமும் இங்கு எனக்கு தெரியவில்லை. அன்று ராணுவத்துக்கு மகன்களை அனுப்பிய தந்தைகள் பற்றி முன்பு எழுதினேன். இன்று அவர்களின் மரண செய்தி வராதது மட்டுமே மாற்றம். மற்றப்படி அதே தங்கும் விடுதிகள், உணவகங்கள், பூஜா வட்டி விற்பனை நிலையங்கள் என ஏற்கனவே பார்த்த காட்சிகள் தான். காப்பற் பாதைகள் உயர்ந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை. அடிக்கடி பயணிக்கும் பேரூந்துகள் தெற்கின் எல்லையை கொழும்புடன் இணைத்தாலும் அதில் தினம் தினம் பயணிக்க ஆட்கள் இன்றி அவை குறுந்தூர ஆட்களை ஏற்றி இறக்கி, தம் டீசல் செலவை ஈடு செய்யும் நிலை தான் காணப்படுகிறது.

(“என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு! 5” தொடர்ந்து வாசிக்க…)

மீரியபெத்தை மண்சரிவு, ஒருவருட பூர்த்தி

பதுளை, மீரியபெத்தை மண் சரிவில் பலியான 37 பேரினது ஆத்ம சாந்திக்காக ஒரு வருட திதி நிகழ்வுகள், பூணாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி இந்து ஆகம விதிப்படி நடைபெறவுள்ளன. பூணாகலை தமிழ் மகா வித்தியாலய வளவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆத்ம சாந்திக்கான பூஜைகள் இடம்பெறவுள்ளதுடன், மலர் அஞ்சலிகளும் இடம்பெறும். அத்துடன், மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு மாக்கத்தை தேயிலைத் தொழிற்சாலை நலன்புரி நிலையத்தில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டிருக்கும் 75 குடும்பங்களைச் சேர்ந்த 320 பேருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

(“மீரியபெத்தை மண்சரிவு, ஒருவருட பூர்த்தி” தொடர்ந்து வாசிக்க…)

மலேஷிய எம்.எச். விமானத்தை தாக்கியது ரஷ்ய தயாரிப்பு

மலேஷிய ஏர்லைன் விமானம் எம்.எச்.17 ரஷ்யா தயாரிப்பு புக் ஏவுகணை தாக்கியே வீழ்த்தப்பட்டிருப்பதாக நெதர்லாந்து பாதுகாப்பு சபை அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேற்படி அனர்த்தம் குறித்து நேற்று வெளியான இறுதி அறிக்கையில், விமானத்தின் முன்பாக இடது புறத்தில் ஏவுகணை தாக்கியதன் விளைவாக அது உடைந்து விழ ஆரம்பித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களே விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு மற்றும் மேற்குலகம் குற் றம்சாட்டுகிறது. எனினும் குறித்த ஏவுகணை உக்ரைன் அரச கட்டுப்பாட்டு பகுதில் இருந்தே ஏவப்பட்டதாக ரஷ்யா குறிப்பிடுகிறது.

(“மலேஷிய எம்.எச். விமானத்தை தாக்கியது ரஷ்ய தயாரிப்பு” தொடர்ந்து வாசிக்க…)