அஞ்சலி: கலாபவன் மணி – “அங்கீகாரம் கிடைக்க மரணம் அவசியம்!”

(பனிமலரோன் )

பணம், செல்வாக்கு இருந்தாலும் இங்கிதமாகப் பழகுபவர்களை டவுன் டு எர்த் பெர்சனாலிட்டி என்பார்கள். அதற்கு ஒரு நல்ல உதாரணம் நடிகர் கலாபவன் மணி. பழசை மறக்காத பக்குவம் அவரிடம் கடைசிவரையில் இருந்தது என்பதற்கு அவர் இறந்ததும் சாலக்குடியில் திரண்ட மக்கள் கூட்டமே சான்று.  கலாபவன் மணி இருநூறு தென்னிந்தியப் படங்களில் நடித்திருக்கிறார். கேரள மாநிலம் தாண்டி, மதுரையில், கலாபவன் மணி ரசிகர்கள் மன்றம் இருக்கிறது. மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல் போன்ற நகரங்களிலிருந்து ரசிகர்கள் கலாபவன் மணிக்கு இறுதி மரியாதை செய்வதற்காக சாலக்குடி வந்திருந்தது சாலக்குடி மக்களையும் மலையாளப் பட உலகையும் ஒருசேர நெகிழச் செய்தது.

(“அஞ்சலி: கலாபவன் மணி – “அங்கீகாரம் கிடைக்க மரணம் அவசியம்!”” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பதிவு 6)

அண்ணன் பற்குணம் இறுதியாக படிக்க சம்மதித்தார்.ஆனால் பாடசாலையில் வகுப்புகள் தொடங்கிய சில மாதங்களின் பின்பே சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் சேர்ந்தார்.
படிக்க சேரும் முன்பு கஷ்டம் என்ற வார்த்தை எனக்கு சொல்ல வேண்டாம் என்பதையும் முன்னெச்சரிக்கையாக சொன்னார்.ஆனாலும் அவருக்கு வீட்டின் சூழல் தெரியும்.

(“பற்குணம் (பதிவு 6)” தொடர்ந்து வாசிக்க…)

அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே அரசின் இலக்கு

அதிகாரங்களைப் பற்றிக்கொள்ளாது அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே தமது நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சர்வதேச ரீதியில் அரசியல் நிபுணர்கள் மற்றும் அரசியல் யாப்புக்கள் மூலம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது பற்றியே பேசப்படுகிறது. இது போன்று தானும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவே பதவிக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

(“அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே அரசின் இலக்கு” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அரசியலமைப்பு பணிகள் மேயில் ஆரம்பம்

அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக, அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள், மே மாதத்தில் ஆரம்பிக்கப்படுமெனத் தெரிய வருகிறது. நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களையும் அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கும் குறித்த பிரேரணை, அண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள், மே மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பிக்குமெனத் தெரியவருகிறது.

(“புதிய அரசியலமைப்பு பணிகள் மேயில் ஆரம்பம்” தொடர்ந்து வாசிக்க…)

பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார். மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

(“பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவு வல்லன், வீராமலை மாணவ, மாணவியருக்கான பிரயாண ஒழுங்குகள்..!

சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களே!

கடந்த வருடம் புங்குடுதீவின் வல்லன் பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு துர்ப்பாக்கிய சம்பவத்தினைத் தொடர்ந்து வல்லன், வீராமலை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மிகவும் தொலைவிலுள்ள புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்பதற்குச் செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

(“சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவு வல்லன், வீராமலை மாணவ, மாணவியருக்கான பிரயாண ஒழுங்குகள்..!” தொடர்ந்து வாசிக்க…)

கியூபாவுக்கு ஒபாமா வரலாற்று விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கியூபாவுக்கு வரலாற்று முக்கியம் வாய்ந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். பல தசாப்த எதிரி நாடான கியூபாவின் கொம்மியுனிஸ தலைவருடனும் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். 1959 கியூப புரட்சிக்குப் பின்னர் பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் கியூபாவுக்கு விஜயம் செய்வது இது முதல் முறையாக அமைந்தது. இரு நாடுகளும் முன்னாள் பனிப்போர் எதிரி நாடுகளாகும்.

(“கியூபாவுக்கு ஒபாமா வரலாற்று விஜயம்” தொடர்ந்து வாசிக்க…)

பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்

பிரபல மக்கள் தொடர்பாளரும், தமிழ் சினிமாவின் நடமாடும் என்சைக்ளோபீடியாவாக திகழ்ந்த பிலிம் நியூஸ் ஆனந்தன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88 அவரின் மரணம் திரைத்துறையினர் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த பிலிம் நியூஸ் ஆனந்தன், 1928ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது இயர் பெயர் மணி. பள்ளி நாட்களில் நாடகங்களில் நடிப்பது, கதை வசனம் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதுவே அவரது கலை ஆர்வத்திற்கு வித்தாக அமைந்தது.

(“பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்” தொடர்ந்து வாசிக்க…)

பிரான்சில் தமிழர் நாசகார சக்திகளால் வன்முறை

பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் மாவீரர் உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாக இருந்த வேளையில் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அவரது வீட்டிற்கு முன்னால் வன்முறையாளர்களின் கடும் தாக்குதலுக்கு இலக்காகி மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(“பிரான்சில் தமிழர் நாசகார சக்திகளால் வன்முறை” தொடர்ந்து வாசிக்க…)

வரலாற்றை பொய்யாக்கும் பொன்காந்தன்.

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் வரை பயணித்தவர்கள் வரலாற்றின் புதல்வர்கள்!- பொன்காந்தன்
2009ம் ஆண்டு கொடூரமான இனப்படுகொலை நடந்த முள்ளிவாய்க்கால் பிரதேசம் வரை பயணித்த அனைத்து தமிழ் மக்களும் வரலாற்றின் புதல்வர்கள் என கவிஞர் பொன்கந்தன் குறிப்பிட்டுள்ளார்.

(“வரலாற்றை பொய்யாக்கும் பொன்காந்தன்.” தொடர்ந்து வாசிக்க…)