வரும் தேர்தலில் விஜயகாந்த் ஜெயலலிதாவை பழிக்கு பழி வாங்க கூடும்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்டது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழக முதல்வராகிவிட எல்லாவிதமாக முயற்சியிலும் ஈடுபடுவார்கள். ஆனால் சென்னை பெருவெள்ளத்துக்கு முன்பு வரை தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவே மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிந்தது. ஆனால் பெரு வெள்ளம் ஏற்படுத்திய மாற்றம் ஆட்சி மாற்றத்திற்கு மாற்றத்துக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

(“வரும் தேர்தலில் விஜயகாந்த் ஜெயலலிதாவை பழிக்கு பழி வாங்க கூடும்!” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே பதவியேற்றார்!

வடமாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். வடமாகாணத்தின் ஆளுநராகவிருந்த எச்.எம்.ஜி.எஸ். பளிஹக்கார, ஓய்வு பெறுவதற்கான கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியதையடுத்து, ரெஜினோல்ட் குரே ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.வடமாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். வடமாகாணத்தின் ஆளுநராகவிருந்த எச்.எம்.ஜி.எஸ். பளிஹக்கார, ஓய்வு பெறுவதற்கான கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியதையடுத்து, ரெஜினோல்ட் குரே ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

(“வடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே பதவியேற்றார்!” தொடர்ந்து வாசிக்க…)

சர்வதேசத்திடம் அடிபணியும் அரசு! மகிந்த ஆதங்கம்!

வீண்வம்பை விலைக்கு வாங்கிவிட்டு புலம்புவதில் பயன் இல்லை. வெற்றிகள் மகிழ்ச்சியை, மனநிம்மதியை தரலாம். ஆனால் நான் என்ற இறுமாப்பில் எவருக்கும் அடிபணியேன் என்ற பிடிவாதம் எதிர்ப்பாளர்களை ஒன்றிணையச் செய்து அவர்களின் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டிவரும். முன்னாள் ஜனாதிபதியின் இன்றைய நிலையும் அதுதான். 2005ல் பதவி ஏற்றபோது, மகிந்த புலிகளுடன் சமரசம் பேசவே விரும்பினார். தன்வெற்றிக்காக புலிகளுடன் பணப்பரிமாற்றம் செய்ததால் தான் அந்த முடிவை அவர் எடுத்தார் என கூறப்படுவது மட்டும் காரணம் அல்ல. உண்மையில் அப்போது புலிகள் மிகவும் பலம் பொருந்தியவர்களாகவும், ராணுவம் சோர்வு நிலையிலும் இருந்ததுமே கள நிலவரமாகும். சகோதரர் கோத்தபாய பாதுகாப்பு செயலாளராக செயல்பட தொடங்கியதும், அவரே சரத் பொன்சேகாவை ராணுவ தளபதியாக நியமிக்கும்படி சிபாரிசு செய்ததும் மகிந்தவுக்கு சற்று தெம்பை கொடுத்தபோதும் அவர் யுத்தத்துக்கு தயாராகவில்லை.

(“சர்வதேசத்திடம் அடிபணியும் அரசு! மகிந்த ஆதங்கம்!” தொடர்ந்து வாசிக்க…)

அனைவரையும் முட்டாள்கள் என எண்ணும் கோத்தபாய!

அனைவரையும் முட்டாள்கள் போலக் கருதி, காணாமற்போனோர் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கருத்துக்களை வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். “போரின் இறுதி தருணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டவர்களில் பலர் காணாமற்போயுள்ளனர். கடந்த ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவில் அதுதொடர்பாக சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

(“அனைவரையும் முட்டாள்கள் என எண்ணும் கோத்தபாய!” தொடர்ந்து வாசிக்க…)

பழிவாங்கல்கள் தொடர்கிறது!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பலரை ஒழுக்காற்று நடவடிக்கை எனக் கூறி கட்சியிலிருந்து வெளியேற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கான கூட்டத்திற்கு உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த உறுப்பினர்களில் 95 சதவீதத்தினர் வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை என்று கூறி, இவர்களையும் கட்சியிலிருந்து வெளியேற்றினால், இவர்கள் செல்வதற்கு ஒரு இடம் வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

(“பழிவாங்கல்கள் தொடர்கிறது!” தொடர்ந்து வாசிக்க…)

ஆங்கிலேயர் சிங்களவரிடம் கையளித்த தமிழரின் நாட்டைத் தாருங்கள்!

ஆங்கிலேயரினால் சிங்களவரிடம் கையளிக்கப்பட்ட தமிழரின் நாட்டை மீண்டும் தமிழர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என்று ஆர். சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் இன்றைய திவயின வார இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்நாடு கடந்த ஒரு தசாப்த காலமாக சர்வதேச மட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, ஒதுக்கப்பட்டிருந்தது. போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜெனீவா இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்போது இலங்கை மீண்டும் சர்வதேச கௌரவத்தை பெற்றுள்ளது.

(“ஆங்கிலேயர் சிங்களவரிடம் கையளித்த தமிழரின் நாட்டைத் தாருங்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவின் புதிய ஆட்டம்!

மஹிந்த ராஜபக்க்ஷவின் அரசியல் விவகாரம் மற்றும் மக்கள் தொடர்புக் காரியாலயம் என்ற போர்வையில் மஹிந்த கட்சி காரியாலயம் பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு நிகழ்வு மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக் கொடுக்கும் அரசாங்கத்திற்கு எதிராக போராட அனைவரையும் தம்முடன் ஒன்றிணைய வேண்டும் என்று மகிந்தர் அறைகூவல் விடுத்து அழைப்பு விடுத்துள்ளார். இன்றைய இந்நிகழ்வில் ஆனந்த தேரர் உட்பட மஹிந்த கம்பனி சகாக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

(“மஹிந்தவின் புதிய ஆட்டம்!” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்த புதிய கட்சி ஆரம்பிக்கட்டும்! நான் வேலையை காட்டுகிறேன்!

மஹிந்த ராஜபக்ச புதிய கட்சியை ஆரம்பிக்கட்டும், வேலையை நான் காட்டுகின்றேன். அவர் பாற்சோறு சமைக்கட்டும், காரமான உறைப்பை நான் வழங்குகின்றேன். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் உதயமாகவிருக்கும் புதிய கட்சி தொடர்பில் செயற்குழுவிலுள்ள மஹிந்த ஆதரவு உறுப்பினர்களுக்கும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் பெரும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்வாறு தெரிவித்ததாக மத்திய செயற்குழுவிலுள்ள உறுப்பினர் ஒருவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார்.

(“மஹிந்த புதிய கட்சி ஆரம்பிக்கட்டும்! நான் வேலையை காட்டுகிறேன்!” தொடர்ந்து வாசிக்க…)

நீங்கள் செய்த பாவத்தினையே நாங்கள் கழுவுகின்றோம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கைக்கு எந்தவொரு அழுத்தங்களோ அல்லது உத்தரவுகளோ பிறப்பிக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிலர் ஊடகங்களுக்கு பலவாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அவர்கள் செய்த பாவங்களையே தற்போது கழுவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பலாங்கொடையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சயிட் அல் ஹூசெய்ன் வடக்கு கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி அடைந்துள்ளார்.

(“நீங்கள் செய்த பாவத்தினையே நாங்கள் கழுவுகின்றோம்!” தொடர்ந்து வாசிக்க…)

புதிய கட்சி அமைக்கும் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவர்!

புதிய கட்சியை அமைக்கும் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய கட்சியில் இணைந்து கொள்ளும் தரப்பினர் தராதரம் பாராது கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு நாங்கள் தான் உண்மையான சுதந்திரக் கட்சிக்காரர்கள் என கூறிக்கொண்டு கட்சியை பலவீனப்படுத்த தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

(“புதிய கட்சி அமைக்கும் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவர்!” தொடர்ந்து வாசிக்க…)