யோஷித்த ராஜபக்ஷ கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசாரணைகளுக்காக கடற்படை தலைமையகத்துக்கு இன்று காலை 10.30 மணியளவில் அவர் சென்றிருந்தார். விசாரணைகளை அடுத்து, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்ஷ, கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.மஹிந்த சற்று முன்னர் வந்தடைந்தார். அவர் ஆஜர்படுத்தப்பட்டு ஒரு மணித்தியாலம் ஆகிறது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, கடுவலை நீதவான் நீதிமன்றத்துக்கு சற்று முன்னர் வந்தடைந்தார்.

தோற்றுப்போன தமிழர் தரப்பு

தீர்வை வழங்க கூடாது என்ற சிங்கள தரப்பின் ஒற்றுமைக்கு முன்னால் தோற்றுப்போன தமிழர் தரப்பு!

1972ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் யாப்பு அதன் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவில் 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட யாப்பு, அதன் பின்னர் செய்யப்பட்ட 19 யாப்பு திருத்தங்களுக்கு பதிலாக புதிய அரசியல் யாப்பை மக்கள் ஆலோசனைகளை பெற்று முன்வைக்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து தமிழர் தரப்பும் யாப்பு திருத்தத்தில் தமது கோரிக்கைகளை முன்வைக்க தயாராகி வருகின்றன. தமிழர்களுக்கான நியாயமான தீர்வு தொடர்பாக ஒற்றுமையாக தமது கோரிக்கையை முன்வைக்க முடியாத நிலையில் தனித்தனியாக தமது யோசனைகளை தமிழர் தரப்பு முன்வைக்க உள்ளன. தமிழர்களின் கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்பதில் சிங்கள தரப்பு ஒன்றுமையாக இருக்கிறது. ஆனால் தமக்கு என்ன தீர்வு என்பதை முன்வைப்பதில் தமிழர் தரப்பிடம் ஒற்றுமை இல்லை.

(“தோற்றுப்போன தமிழர் தரப்பு” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் ஒருங்கிணைப்பு குழு கட்டத்தை ஈ.பி.டி.பி புறக்கணிப்பா ?

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த 13 மாதங்களுக்கு பின்னர் இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகி வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்று வருகின்றது.

(“யாழ் ஒருங்கிணைப்பு குழு கட்டத்தை ஈ.பி.டி.பி புறக்கணிப்பா ?” தொடர்ந்து வாசிக்க…)

முதல்வருக்கு உறுப்பினர்களின் ஆட்சேபனை கடிதம்!

இன்று [30-01-2016] அவசரமாக கூடிய வடமாகாண தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், முதல்வருக்கு தமது ஆட்சேபனை கடிதத்தை அனுப்பிவைத்துள்ளனர். அக்கடிதம் பின்வருமாறு.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே!

“அரசியல் தீர்வு திட்டம்” தொடர்பிலான வடக்கு மாகாணசபை ஆளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் கூட்டான நிலைப்பாடு:

கடந்த 20-01-2016 அன்று மாண்பிமிகு முதலமைச்சர், கௌரவ பேரவைத்தலைவர், கௌரவ அமைச்சர்கள், கௌரவ உறுப்பினர்கள் [வடக்கு மாகாணசபை ஆளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு] உடனான விசேட சந்திப்பின்போது மூன்றுவிடயங்கள் குறித்து பேசப்பட்டது.

(“முதல்வருக்கு உறுப்பினர்களின் ஆட்சேபனை கடிதம்!” தொடர்ந்து வாசிக்க…)

ஈழவிடுதலைப் போராட்டமும்….. பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும்…..

(இது ஒரு முகப்பு புத்தகத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு)

ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு சர்தேச அளவில் ஆயுதப் பயிற்சி(லெபனான் பயிற்சி எனக் கூறுவர்) வழங்கியதில் பாலஸ்தீன மக்களிடையே உள்ள விடுதலை அமைப்பின் இடதுசாரிச் செயற்பாடாளர்கள் PFLP அமைப்பினரே முதன்மை பெறுகின்றனர். பாலஸ்தீன விடுதலை அமைப்பின் ஒரு குடை அமைப்பின் கீழ் இவ் அமைப்பு இருந்திருந்தாலும் தனது சித்தாத்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணிக்குள் தமது கருத்துக்களுக்கான உள்ளக அமைப்புப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தியே வந்திருக்கின்றனர். சகோதரப் படுகொலை பாரியளவில் நடைபெறாத விடுதலைப் போராட்டத்தை கொண்டிருந்த இந்த மக்களின் போரட்டப்பாதையில் ஹமாஸ் சில தடவைகள் சகோதரப் படுகொலையில் ஈடுபட்ட காலங்களிலும் இதனைத் தவிர்ப்பதில் இந்தPFLP கணிசமான வெற்றிகளை கண்டே வந்திருக்கின்றது.

(“ஈழவிடுதலைப் போராட்டமும்….. பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும்…..” தொடர்ந்து வாசிக்க…)

கேள்வி செவியர் ஊரை கெடுப்பார்! வினை விதைப்பார்!

அண்ணனுக்காக போர்க்களம் பலகண்டு எட்டுத்திக்கும்வென்று, தேவலோக தலைவன் இந்திரனை கூட இராவணன் காலடியில், மண்டியிட வைத்தவன் கும்பகர்ணன். இனி வெல்வதற்கு எவரும் இல்லை என எண்ணியபோது தான் அவனுக்கு அசதி ஏற்ப்பட்டது. பல காலம் தான் தூங்கவில்லை என்ற நிலை புரிந்தது. அரக்கர் முதல் தேவர் வரை அனைவரையும் வென்ற பின், இனி போருக்கு தேவை இருக்காது என அவன் தூக்கத்தை அரவணைத்த போதுதான், இராவணன் சீதையை கவர்ந்து வந்தான்.

(“கேள்வி செவியர் ஊரை கெடுப்பார்! வினை விதைப்பார்!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர்கள் இருவரே கருத்துக் கூறியுள்ளனர்

புதிய அரசியலமைப்புக்கு, மக்களின் கருத்துகளை அறிவதற்காகக் கொழும்பில் இடம்பெற்ற முதற்கட்ட அமர்வில், தமிழர்கள் இருவர் மாத்திரமே கருத்துரைத்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு, பெரும்பான்மையின மக்களே அதிக ஆர்வத்துடன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர் என்றும், கொழும்பில் இடம்பெற்ற அமர்வில், தமிழ்மொழி பேசுவோர், ஆர்வம் காட்டவில்லை என்றும் அத்தகவல்கள் தெரிவித்தன. வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய இருவருமே கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர் என்று அறியமுடிகின்றது.

தமிழிலும் தேசிய கீதம் – மைத்திரி, ரணிலே முடிவு

பெப்ரவரி 4ஆம் திகதி இடம்பெறவுள்ள பிரதான சுதந்திரதின வைபவத்தில், தமிழிலும் சிங்களத்திலும் தேசிய கீதத்தைப் பாடுவது குறித்த முடிவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எடுப்பர் என, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, தெரிவித்தார். தேசியக் கீதத்தை தமிழிலும் இசைக்க வேண்டும் என நானும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயகாரவும் மஹிந்தவின் ஆட்சிகாலத்திலிலேயே வலியுறுத்தி வந்தோம். இந்த ஆட்சியின் போதும் நான், வலியுறுத்தினேன்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் தேசிய கீதம், விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பல ஆலோசனைகளை முன்வைத்தோம். அதில் முதலாவதாக, இலங்கையின் 68ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, தேசிய கீதத்தை தமிழிலும் சிங்களத்திலும் இசைக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தோம்.

இதனை, ஜனாதிபதியும் பிரதமரும் பரிசீலித்து அதற்கான அனுமதியை வழங்கினர். அதற்கு அமைச்சரவையும் அங்கிகாரம் வழங்கியுள்ளது என்றார். முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயகாரவும் மஹிந்தவின் ஆட்சிகாலத்திலிலேயே வலியுறுத்தி வந்தோம். இந்த ஆட்சியின் போதும் நான், வலியுறுத்தினேன்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர், தேசிய கீத விவகாரம் தொடர்பில், நாடாளுமன்றத்தில் பல ஆலோசனைகளை முன்வைத்தோம். அதில் முதலாவதாக, இலங்கையின் 68ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, தேசிய கீதத்தைத் தமிழிலும் சிங்களத்திலும் இசைக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தோம்.

இதனை, ஜனாதிபதியும் பிரதமரும் பரிசீலித்து அதற்கான அனுமதியை வழங்கவுள்ளனர். இது தொடர்பில், அமைச்சரவையில், கருத்தொற்றுமை கிடைத்திருக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

தனிநபர், பிரதேச, மத, இன வாதம் எழுப்பும் – சங்கொலி!

வடமாகாண முதல்வரை வாராதுவந்த மாமணி, எங்கள் பிரம்மா என்றெல்லாம் எழுதி அவரை பேரவைக்கு இணைத்தலைவராக்கி, தமக்கு பெருமை சேர்த்தவர் தரும் வஞ்சக புகழ்ச்சியால் ஏற்பட்ட மயக்கமா? இல்லை சங்கூதுபவர் சொல்வது கீதை என்ற தடுமாற்றமா? என எண்ணும் அளவிற்கு அண்மையில் வரும் ஆசிரியர் தலையங்கங்கள், சமூகங்களிடையே ஏற்படுத்த கூடிய வேண்டத்தகாத நிகழ்வுகளை தவிர்க்கும்படி, புருசொத்தமனுக்கு புத்திசொல்ல முதல்வர் காட்டும் “அருவருக்கத்தக்க மௌனம்” என்னை விசனப்பட வைக்கிறது. முதலில் தனி நபர்களை தாக்க தொடங்கியவர், தன் பிரதேச வாதத்தை கொழும்பில் ஆரம்பித்தார். விலை போன கொழும்பு தலைமை என சுமந்திரனை சாடினார். பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உட்பட ஜனாதிபதியுடன் சந்திப்பை நடத்தினால், விருந்துகளில் கலந்து கொண்டால் அவர்களை விலை போனவர்கள் என்று வரையறுத்தால், இன்று இருக்கும் எந்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல, உறுப்பினர்களும் விலை போனவர்கள் என்று தான் தலையங்கம் எழுதவேண்டும். ஏனென்றால் புலிகள் காலத்தில் அனைவரும் இருந்தது தெற்கில், அரச வசதி மற்றும் பாதுகாப்பில்.

(“தனிநபர், பிரதேச, மத, இன வாதம் எழுப்பும் – சங்கொலி!” தொடர்ந்து வாசிக்க…)

சகல தமிழ் பேசும் மக்களையும் ஒன்றிணையுமாறு த.வி.கூ அழைக்கிறது

முழு நாடும் ஒரு குழப்பநிலையில் உள்ளது. இல்லாவிடின் சகல இனக்குழுக்களும் அவ்வாறே. ஆண் பெண் ஆகிய நாமனைவரும் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்N;றாம். குழப்ப நிலையில் உள்ள எமது பிள்ளைகள் தமது எதிர்காலத்தைப் பற்றி ஏதும் அறியாமல் கிரிக்கெட்டும், உதைப்பந்தாட்டமும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எம்முள் உள்ள தேசப்பற்று படிப்படியாக குறைந்து செல்கின்றது. அனைவரும் இன்று பதவியை தேடியே அலைகின்றனர் எனக் கூறுவதற்கு என்னை மன்னிக்கவும். சிலருக்கு நாட்டின் மீதான அக்கறை கடைசியாகவும் அதிகாரத்தை கைப்பற்றுவது முன்னிலையிலும் காணப்படுகிறது.

(“சகல தமிழ் பேசும் மக்களையும் ஒன்றிணையுமாறு த.வி.கூ அழைக்கிறது” தொடர்ந்து வாசிக்க…)