ஜனாதிபதித் தேர்தலா? சர்வஜன வாக்கெடுப்பா?

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

கடந்த வாரம் நாம் ஆராய்ந்த விடயத்தின் தொடரச்சியாகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கபப்டவிருக்கும் நிலையில், அரசாங்கம் அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதியினதோ அல்லது பாராளுமன்றத்தினதோ பதவிக் காலத்தை நீடிப்பதோடு மட்டுமே சம்பந்தப்பட்ட ஒரு விடயத்துக்காக அரசாங்கம் அரசியலமைப்பை திருத்த அவசரப்படுவது ஏன்?

மற்றுமொரு படியெடுப்பாக தமிழ்த் தேசியப் பேரவை

 (லக்ஸ்மன்)

ஜனாதிபதி தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்துக்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் சிவில் அமைப்புகளினால் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்காகச் செயற்படுவதற்கான அமைப்பினை ஏற்படுத்திக்கொள்வதில் கடந்த மாதத்தில் மக்கள் அமைப்பாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் பொதுச் சபை மீண்டும் ஒரு பெயர் மாற்றத்திற்கு உட்பட்டு தமிழ்த் தேசியப் பேரவையாக இறுதிப் படியாக அறிவிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் மாற்றம் ஏற்படாமலிருக்கும் என்று சொல்ல முடியாது.

இலங்கை இந்திய ஒப்பந்தம்: 13 வது திருத்தச் சட்டம்… மாகாண சபைச் சட்டம்

1987ம் ஆண்டின் இந்திய இலங்கை சமாதான உடன்பாட்டின்படிதான் 13வது திருத்தம் உருவாக்கப்பட்டது என்பது பலரதும் அபிப்பிராயம்.

பொதுவாக அவ்வாறு கருதப்பட்டாலும், அது தொடர்பாக உள்ள நுட்பமான வேறுபாட்டைத் தெரிந்து கொள்வதுவும் அவசியமாகும்.

இந்திய இலங்கை உடன்பாட்டில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சுருக்கமாக பின்வருமாறு:

புதுப்புது அரசியல் குழப்பங்கள்

(மொஹமட் பாதுஷா)

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகக் கூறி, நாட்டைப் புதிய இயல்பு நிலைக்குத் திருப்பிய பிறகு, அதைவிடப் பெரிய அரசியல் குழப்பங்கள், நாட்டைத் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளன. அரசாங்கம் இவற்றை மறைக்க, என்னதான் பகிரதப் பிரயத்தனங்களை எடுத்தாலும், ‘ஒரு சோற்றுப் பீங்கானுக்குள் முழுப் பூசணிக்காய் போல’, அவையெல்லாம் வெளியில் துருத்திக் கொண்டு தெரிகின்றன.

ஜெனீவாவில் இருப்பதா, வீற்றோவால் தொலைப்பதா?

(புருஜோத்தமன் தங்கமயில்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவர பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் முயற்சிக்கின்றன. 

மறக்கமுடியுமா?

எத்தனை வருடம்? எத்தனை மரணங்கள்? ஒரு அழகான தேசத்தின் அமைதியைக் கெடுத்த கொடியவர்கள். மறக்கமுடியுமா? திருநெல்வேலி சந்தியில் தொடங்கிய வெறியாட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது. முடிக்கப்பட்டது. முப்பது வருடங்களாக எவராலும் எங்கேயும் நிம்மதியாக உறங்கவிடாமல் கெடுத்தவர்களை எப்படி மறப்பது? நாங்கள் மரணிக்கும்வரை அவர்களின் பயங்கர வெறியாட்டங்கள் மறக்கமுடியாது.

(“மறக்கமுடியுமா?” தொடர்ந்து வாசிக்க…)

என்னை நல் ஆசான் ஆக்கிய ஆசான்களை வணங்கி நிற்கின்றேன்

என்னை நல் மாணாக்கனாக்கிய ஆசிரியர் அனைவருக்கும் ஆசிரியர் தினத்தில் மீண்டும் எனது மரியாதை கலந்த வணக்கங்கள். அருவரியில் ஆரம்பித்து பல்கலைக் கழகம் வரையும் மரத்தடி விளையாட்டுத்திடலில் ஆரம்பித்து மக்களின் விடுதலைக்காகான பொதுவாழ்வில் பயணத்தை மேற்கொள்வதற்கு எனக்கு பல்வேறு ஆசிரியர்களின் வழிகாட்டல் பேருதவியாக இருந்தது. என்னைப் பெற்றெடுத்த என் தந்தையர் எனது இன்று வரையிலானான மாசீக குரு. அவர் தனது காலத்தில் கல்வி கற்றது வெறும் 3ம் வகுப்பு என்றாலும் இன்று சபையில் நான் தலை நிமிர்ந்து நடப்பதற்கான நேர்மை, நீதி, ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்து இவர் வகுத்துக் கொடுத்த வாழ்கைப் பாதை தான் முதல் காரணமாக அமைகின்றது. இதனைத் தொடர்ந்து அவையத்து முன்னிருக்க எனது குஞ்சியப்பு மாமா போன்றவர்கள் பேருதவியாக செயற்பட்டனர். இதில் தான் ஈற்றெடுக்காவிட்டாலும் தனது இரத்தம் என்று எனக்கு வழிகாட்டியாக நின்ற அந்த குஞ்சப்புவையும் மாமாவையும் நான் அடிக்கடி நினைவில் நிறுத்துவதுண்டு.

(“என்னை நல் ஆசான் ஆக்கிய ஆசான்களை வணங்கி நிற்கின்றேன்” தொடர்ந்து வாசிக்க…)

ஓமந்தையும் தாண்டிக்குளமும்

வவுனியா மாவட்டத்துக்கான பொருளாதார மையத்தை ஓமந்தையிலா? தாண்டிக்குளத்திலா? அமைப்பது என்பது தொடர்பிலான சர்ச்சை கடந்த சில வாரங்களாக மேலெழுந்திருந்தது. சர்ச்சைகள் இன்றி உள்ளக பேச்சுக்களினூடாக இறுதி முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டிய விடயமொன்றினை வடக்கு மாகாணத்தை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் சர்ச்சையாக மாற்றிவிட்டிருக்கின்றார்கள். அது, மக்களிடையே குறிப்பிட்டளவான குழப்பங்களையும் குரோதங்களையும் ஏற்படுத்தக் காரணமாகி விட்டது.

(“ஓமந்தையும் தாண்டிக்குளமும்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை: ஆட்சியாளர்களினால் தீர்க்க முடியாத வர்க்கப் பிரச்சனைகள், இனவாத்தினால் மழுங்கடிக்கப் படுகின்றது.

இலங்கையை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று பலர் கூறிக் கொள்வதுண்டு. அரசியலமைப்புச் சட்டத்திலும் அவற்றிற்கான முன்னுரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் அதி பெரும்பான்மையானவர்கள் அவர்களே. அப்படியென்றால் சிங்கள மக்களுக்கு ஒப்பீட்டளவில் அதிக வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டிருக்கவல்லவா வேண்டும் ? சிங்கள மக்கள் பொருளாதார ரீதியில் அதிகப்படியாக உயர்வாகவும், ஏனையோர் தாழ்வாகவுமல்லவா இருக்க வேண்டும் ? உண்மையாக, இவ்விடயத்தினை ஆராய்ந்து பார்த்தால், இங்கு மேலோங்கிக் காணப்படுவது வர்க்க ரீதியான பிரச்சனையே தவிர, இனப் பிரச்சனையல்ல. எனினும், ஆட்சியாளர்களினால் தீர்க்க முடியாத வர்க்கப் பிரச்சனைகள், இனவாத்தினால் மழுங்கடிக்கப் படுகின்றது. ஆகவே அது இனப்பிரச்சனையாகச் சித்தரிக்கப் படுகின்றது.

(“இலங்கை: ஆட்சியாளர்களினால் தீர்க்க முடியாத வர்க்கப் பிரச்சனைகள், இனவாத்தினால் மழுங்கடிக்கப் படுகின்றது.” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கில் இருந்து முழுமையாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம் மக்கள்

வடக்கில் இருந்து முழுமையாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம் மக்கள் இரண்டு தசாப்தங்களாக அனுபவித்து வரும் நீட்சியான துயரங்கள் , புலிகள் ஒழிக்கப்பட்ட பின்னரும், சமாதானம் வந்த பின்னரும் , இன சவ்ஜன்யத்தை கட்டி எழுப்ப ஆட்சி மாற்றம் வென்டும் என்று அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய பின்னரும் , வடக்கில் நிகழ்ந்த “வரலாற்று மாற்றம்” என்னவெனில் வட மாகாண சபையில் தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்டதாக சொல்லப்படும் “இனப்படுகொலை” குறித்து தீர்மானம் கொண்டு வந்ததுதான். அதுவும் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பு பற்றி அல்லது இனச்சுத்திகரிப்பு பண்ணிய குற்றவாளிகளை பற்றி எவ்வித சிலிர்ப்பும் சிலாகிப்பும் இன்றி தீர்மானம் கொண்டு வந்ததுதான் வரலாற்றுத் தவறாகும்.

(“வடக்கில் இருந்து முழுமையாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம் மக்கள்” தொடர்ந்து வாசிக்க…)