மனதை உறுத்தும் ஒரு சோகம்

இறைவன் மனிதர்களுக்குக் கொடுத்துள்ள பல்வேறு அருட்கொடைகளில் எதையும் நன்றியுணர்வோடு மனிதன் நினைவு கூர்வது குறைவு என்பதை விட இல்லையென்றே கூறலாம். ஆனால், இயற்கையின் சீற்றம் வந்ததும் மனிதன் அப்போது தான் இறை சிந்தனையோடும் அவனை நினைக்கின்றான்.

சாதிய வெறி

(Pushparani Sithampari)

இலங்கைத்தமிழர்களிடையே சாதிவெறி ஒழியவில்லை என்பதுபற்றி நானே நிறைய எழுதியிருக்கின்றேன். இன்னும் எழுதுவேன். ஆனால் தமிழ்நாட்டைவிட அதிகம் என்பதை மறுக்கின்றேன். தமிழ்நாட்டில் இன்னும் நடந்துகொண்டிருப்பதுபோல சாதிவெறியில் படுகொலைகள் செய்வது இப்போது நினைத்தே பார்க்க முடியாத காரியம்.

இராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வரலாறு வெறுமனே நிகழ்வுகளின் பதிவல்ல; அதில் பதியப்படுவனவும் விடுபடுவனவும் திரித்தோ, புனைந்தோ எழுதப்படுவனவும் எவையெவை என்பது, அதிகாரம் பற்றிய கேள்வியுடன் தொடர்புடையது. அண்மையில் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், இராஜராஜ சோழனின் காலம் பொற்காலமல்ல; இருண்டகாலம் என்றும் அவருடைய காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டு, பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன என்று தெரிவித்த கருத்து, மிகுந்த எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது.

தாது வருடப் பஞ்சம்

மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா?

தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம் –
1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது –

கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது –

மனிதம் இங்கும் வாழ்கின்றது

எப்படி சொல்வது தன் மகளிடம் ..?”
– தவித்தார் அந்த தந்தை .

அவர் பெயர் அஜய் முனாட் .
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த தொழிலதிபர் .

அவரது மகள் ஸ்ரேயாவுக்கு திருமணம் .
தேதி எல்லாம் நிச்சயிக்கப்பட்டு விட்டது .
கல்யாணத்துக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்ய திட்டமிட்டிருந்தார் அஜய் . இது குடும்பத்தில் உள்ள எல்லோருக்குமே தெரியும்.

அழியாத கோலங்கள் -2.’ பற்றிய விகடனின் பார்வையில் கூறப்படும் குறைகள் சிலவற்றை தாண்டியும்

“பள்ளிக் காதல், பதின்பருவத்துக் காதல், கல்யாணத்துக்குப் பின் காதல் என பார்த்துப்பழகிய கண்களுக்கு, நாற்பது ப்ளஸ் வயதினரின் காதலை, எவ்வித முகச்சுளிவும் ஏற்படாதவாறு இலக்கியமாய்ப் பளிங்குபோல் காட்டப்படுவதும், கௌரிசங்கரும், மோகனாவும் பேசிக்கொள்வதும், கதையின் பிற்பகுதியில் சீதாவும் மோகனாவும் பேசிக்கொள்வதும் தெளிந்த நீரோடையில் ஓர் இலை மெல்ல மிதப்பதைப் போல் அவ்வளவு அழகாய் இருக்கிறது, அற்புதமாக இருக்கிறது…”

விகடனின் பார்வை…..

தன் எழுத்துக்குக் காரணமான நாயகியை 24 ஆண்டுகளுக்குப் பிறகு காணச் செல்லும் எழுத்தாளருக்கு நேரும் சம்பவங்களின் குவியல்தான் இந்த ‘அழியாத கோலங்கள் -2.’

தான் எழுதிய நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் கௌரிசங்கர், சென்னையில் உள்ள தன் கல்லூரிக் காலத்துக் காதலி மோகனாவைப் பார்க்கச் செல்கிறார். இருவருக்குள்ளும் பேச ஆயிரம் கதைகளும், 24 மணி நேரமும் இருக்கின்றன. ஆனால், அன்றிரவு நடக்கும் ஓர் அசம்பாவிதத்தால் மோகனா இந்தச் சமூகத்தால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறாள். மோகனாவை அச்சூழலிலிருந்து யார் மீட்டெடுக்கிறார்கள் என்பதைக் கவித்துவமாக வரைகிறது இந்த அழியாத கோலங்கள்.

எழுத்தாளர் கௌரிசங்கராக பிரகாஷ்ராஜ். நெற்றி வியர்வை உணர்த்தும் சமிக்ஞையிலிருந்து, படுக்கையில் வீழ்வது வரை மனிதர் தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை உணர்த்துகிறார். கௌரிசங்கரின் மனைவி சீதாவாக ரேவதி, கணவருக்காகவே வாழும் கதாபாத்திரம். முதல் காட்சியிலிருந்து இறுதிவரை படத்தைத் தாங்கி நிற்கும் மோகனா கதாபாத்திரத்தில் அர்ச்சனா. எல்லாம் முடிந்து வாழ்வின் விளம்பில் எந்த சுவாரஸ்யமுமின்றிக் காத்திருக்கும் ஒருவருக்கு, தான் எல்லாமுமாய் நேசித்த ஒருவரின் வருகை எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும். அதை அப்படியே திரையில் கடத்துகிறார் அர்ச்சனா. சில இடங்களில் வெளிப்படுத்தும் அந்த மிகை நடிப்பை அர்ச்சனா குறைத்திருக்கலாம். போலீஸ் அதிகாரியாக நாசர். கச்சிதமாக நடித்திருக்கிறார்.

பள்ளிக் காதல், பதின்பருவத்துக் காதல், கல்யாணத்துக்குப் பின் காதல் என பார்த்துப்பழகிய கண்களுக்கு, நாற்பது ப்ளஸ் வயதினரின் காதலை, எவ்வித முகச்சுளிவும் ஏற்படாதவாறு இலக்கியமாய்ப் பளிங்குபோல் காட்டியதற்கு இயக்குநர் எம்.ஆர். பாரதிக்கு வாழ்த்துகள். கௌரிசங்கரும், மோகனாவும் பேசிக்கொள்வதும், கதையின் பிற்பகுதியில் சீதாவும் மோகனாவும் பேசிக்கொள்வதும் தெளிந்த நீரோடையில் ஓர் இலை மெல்ல மிதப்பதைப் போல் அவ்வளவு அழகாய் இருக்கிறது.

வங்க மொழியில் வெளியான சௌமிக் மித்ராவின் கதையை அழியாத கோலங்களாக எடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர், ஆனால், அதில் கடக்க முடியாத பக்கங்களாய் அத்தனை லாஜிக் மீறல்கள். எட்டு மாடிக்கு ஓடிச் சென்று வாட்ச் மேனை எழுப்புவது முதல் கேமரா இல்லாமலேயே சுற்றிக் கொண்டிருக்கும் செய்தியாளர்கள் வரை அத்தனை செயற்கைகள். ராஜேஷ் நாயரின் ஒளிப்பதிவோ, காசி விஸ்வநாதனின் படத்தொகுப்போ படத்துக்கு எந்தவிதத்திலும் துணைநிற்கவில்லை. படத்தின் பெரும்பகுதியைக் காப்பாற்றுவது அனுபவமிக்க நடிகர்கள்தாம். மற்றவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் ஏதோ மேடை நாடகம் போல் திரைமொழியற்று ஏமாற்றமளிக்கின்றன.

ஓர் ஆத்மார்த்தமான கதையை இன்னும் சிரத்தையோடு எடுத்திருந்தால், என்றென்றைக்கும் அழியாத கோலங்களாய் நிலைத்திருக்கும்.!

என் கவுண்டர் என்ற ‘மின்கம்ப” தண்டனை

(சாகரன்)

என் கவுண்டரில் முடிந்திருக்கின்றது அண்மைய ஹைதராபாத் வல்லுறவும் அதனைத் தொடர்ந்த கொலையும். பெண்களைத் தெய்வம் என்று மதிப்பதாக கூறும் இந்தியாவின் தென் மாநிலமான தெலுங்கானாவில் நடைபெற்றிருக்கின்றது. தனியாக வேலை முடிந்து வீடுதிரும்பும் வழியில் தான் பயணித்த இரு சக்கர வண்டியின் சக்கரம் காற்றுப் போனதற்கு உதவி கேட்ட ஒரு வைத்தியப் பெண்ணுக்கு நடைபெற்ற வன் கொடுமை இது. கைதொலைப் பேசி என்று எப்போதும் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடிய யுகத்தில் உறவுகளை அழைத்து ‘…….பயமாக இருக்கின்றது அவர்களின் பார்வை சரியல்லை…..” என்றதும் பதறியடித்து இடத்திற்கு விரைந்தது மட்டும் அல்லாது காவல் துறைக்கும் அறித்து விட்டு பின்பு ஸ்தலத்திற்கு விரைந்த போதும் காப்பாற்ற முடியாத காவல் துறையும், சமூக அமைப்பும் இந்தியாவின் அவலங்களை எடுத்துக் கூறும் நிகழ்வுகள்.

இதே காவல் துறைதான் இன்று என்கவுண்டர் மூலம் நீதியை நிலை நாட்டி இருக்கின்றதாம்….? வேகமாக செயற்பட்டு பிரியங்காவை காப்பாற்ற முடியாது கொலை செய்யவுக் கொடுத்து பின்பு கொலை செய்து நீதியையும் நிலைநாட்டுமாம்

இது இலங்கையிலும் கதிர்காமத்தில் பிரேமாவதி மன்னப்பிரிவிற்கும், கைதடியில் கிரிசாந்தியிற்கும், 2009 இறுதி யுத்தத்தில் இசைப்பிரியாவிற்கும், புங்குடுதீவு வித்தியாவிற்கும் நடைபெற்ற வன் கொடுமைகளின் தொடர்ச்சிதான். நிருபையாவும் அண்மைய (தற்)கொலையிற்கு உள்ளான பாத்திமாவிற்கும் இது பொருந்தியே இருக்கின்றது. பொள்ளாச்சியில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்ற போது அரசியல் செல்வாக்கு தேர்தலையும் மீறி நீர்த்துப் போனதே வரலாறு. ஏற்றத் தாழ்வுகளை மறுத்து நடைபெற்ற காதல்களும்…. திருமணங்களும்…. இதனைத் தொடர்ந்த ஆதிக சாதியினரது ‘சாதி’க் கொலை வெறியாட்டங்களையும் இதிலிருந்து வேறுபடுத்தி பார்க்க முடியாது. 8 வயது முஸ்லீம் ஆசீபா குழந்தையை வன்கொடுமையிற்கு உள்ளாக்கி கொலை செய்தவற்றையும் இங்கு இழுத்து வரவேண்டித்தான் இருக்கின்றது.

இங்கெல்லாம் நாட்டின் சட்டமும், ஒழுங்கும், நீதித்துறையும், காவல் துறையும் தமது நியாயமான கடமைகளை செய்யவில்லை என்பதினால் சமான்ய மக்களிடம் ஏற்பட்ட ஏமாற்றங்களின் தொடர்ச்சியே அண்மைய ஹைதராபாத் என்கவுண்டரை மக்கள் கொண்டாடும் மனநிலைக்கு வந்ததற்கான காரணங்களாகும்.

மேற்குறிப்பிட்ட மனிதத் தன்மையற்ற வக்கிரச் செயற்பாடுகளை செய்தவர்களை மன்னிக்க முடியாது. அதேவேளை ஒரு அரசியல் அமைப்பையும் நீதித்துறையையும் தனக்குள் கொண்டிருக்கும் நாட்டில் விசாரணக்காக கொண்டு போன இடத்தில் தப்பியோட முற்பட்டார்கள் என்று தாம் நினைத்தவாறு தண்டனை வழங்குவதை ‘ஆதரிப்பது” ஒரு கட்டுபாடற்ற சமூகச் செயற்பாட்டு வீக்கத்தையே ஏற்படுத்தும்.

இலங்கையில் ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் ஈழவிடுதலை அமைப்புகளினால் தாம் நினைத்த வகையில் மின்கம்பத்தில் கட்டி சமூக விரோதி என்று ஆரம்பித்து துரோகி என்று வளர்ந்த போது நாம் யாரும் கேள்வி கேட்கவில்லை. மாறாக நம்ம பொடியள் சரியாகத்தான் செய்வார்கள் என்று பொதுப் போக்கில் இருந்ததன் விளைவு அது எமது படலையை தட்டி எம்மையே சுட வந்த போது நாம் ஒன்றும் செய்ய முடியாமல் தரோகிகளாகவும் விரோதிகளாகவும் சாவை பலர் தழுவிக் கொண்டனர். இதனையொத்ததே அண்மை என்கவுண்டர்கள்.

வருமுன் காப்போனாக செயற்பட முடியாத காவல் துறை கட்டமைப்புகளும்இ காவல் நிலைய வன்புணர்வுகளும்இ மாடி வீடுகளில் ஏழையின் அழகுகளை காசு பணத்தால் ஏலம் போட்டு கபீளிகரம் செய்வதுவும் சின்னவீடுகள் இல்லையென்றால் அரசியல் தலைவருக்கு? பெருமையே இல்லை என்று வளர்க்கப்பட்ட நாட்டில் இதனைத் தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும்.

பெண்களை ஆண்கள் அனுபவிக்க பிறந்த பண்டங்களாகவும் உணர்வு அற்ற ஜீவன்களாகவும் திரையிலும் புதினப் பத்திரிகை சஞ்சிகைளிலும் கலாச்சாரம் பண்பாடுகள் என்று பிற்போக்குத் தனங்களை ஊட்டி பொது வெளியில் பொதுப் போக்காக சித்தரிக்கும் போக்கே இந்த குற்றச் செயல்கள் அதிகரிப் பதற்கான ஊற்றுவாயில் அதிக இடத்தை பிடித்திருக்கின்றது.

அடங்கி இரு. பெரியவள் ஆனதும் யாருக்காவது இரையிடுவது அது குழந்தையாக இருந்தாலும்… இதில் முறை மாப்பிள்ளை, மாமன் என்று புரியாத வயதில் ‘புணர்வுகளுக்கு’ சடங்குகள் செய்வது என்ற அபத்தங்கள் சிந்தனை ரீதியாக மாற்றப்பட வேண்டும்.

இருட்டில் செல்லக் கூடாது… தனியாக செல்லக் கூடாது…. அடக்க ஒடுக்கமாக உடையணிந்து செல்ல வேண்டும்…. அதிகம் பேசக் கூடாது…. என்று பெண்ணை வளர்பதுவும் இந்த கொடுமைகளில் இருந்து தப்ப அறிவுரை கூறுவதை விடுத்து விட்டுசிறுவயதில் இருந்தே தன்னம்பிகையுடன் தைரியத்துடன் இந்த மாதிரியான வன் கொடுமைகளை எவ்வாறு தனியாக சமூகமாக கையாளுதல் என்று கற்றுக் கொடுக்க வேண்டும்.

நாம் வெறும் அழகும் பண்டங்கள் அல்ல நாமும் உணர்வுள்ள ஆசாபாசங்கள் உள்ள மனிதர்கள் பொது வெளியில் எம்மையும் கண்ணியமாக கண்ணை நோக்கி பழகும் நாகரீக பழக்க வழக்கங்களை எதிர்பாலினர் கொண்டிருபபதே சரியானது. யாரும் தவறான ‘தொடுதலை” கண்டு அஞ்சாமல் அவ்விடத்திலேயே அதற்கான மறுப்புகளைஇ எதிர்வினைகள் ஆற்றுவதையும் கற்றுக்கொள்ளுதல் குழந்தை பராயத்திலேயே உருவாகப்பட வேண்டும். கல்யாணங்களில் நான் விற்கப்பட்டவள் அல்ல வாழ இணைக்கப்பட்டவள் என்ற உணர்வுடன் பெண் வளர்க்கப்படவேண்டும்.

இவை எல்லாவற்றையும் மீறி பிறப்பில் மனிதராகவும் செயற்பாட்டில் கட்டுப்பாடற்ற மிருகங்களாகவும் செயற்படுபவர்கள் கைது… விசாரணை.. நீதி மன்றத்தில் நிறுத்துதல்…. சட்டங்களின் அடிப்படையில் பாகுபாடின்றி தீர்ப்புகளை வழங்கி தண்டனையை நிறைவேற்றுதல்… என்று வரையறுக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றுதல் எனபதை நடைமுறைப்படுத்தினால் நீதிதித்துறை, அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

அன்றேல் என்கவுண்டர் என்ற மின்கம்ப தண்டனைகளை மக்கள் கொண்டாடித்தான் தீர்ப்பார்கள் அந்த மின் கம்பத் தண்டனை தங்கள் வீட்டுக்கதவுகளையும் தான் வைத்ததுதான் சட்டம் என்று நிறைவேற்றும் தனிமனிதஇ குழும மேலாதிக்க ஆதிக்கவாதிகளின் கைகளால் தம்மை நோக்கி வரும்வரை.

அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை

(புளும்பேர்க்)

(தமிழில்- ரஜீபன்)

இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கு கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் விரும்புகின்றது. தேசிய நலன்களை கருத்தில்கொண்டே புதிய அரசாங்கம் உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கு ஆர்வமாகவுள்ளது.

துணைக்கண்டத்தின் சினிமா: 4- அணை வெள்ளத்தில் மூழ்கும் கிராமங்கள்; மூழ்காத விழுமியங்கள்

த்வீபா திரைப்படக் காட்சிகள்.
வாழ்க்கையை விட சினிமா பெரியது இல்லை. அப்படிப் பெரியதாக இருக்க வேண்டுமெனில் சினிமாக்களிலேயே சிறந்த சினிமாவாக அது இருக்க வேண்டும். சமூகத்தின், வாழ்வின், மனிதர்களின் நிதர்சனத்தை எடுத்துக்காட்ட வேண்டும். மிகைப்பூச்சு ஏதுமின்றி நம்மை நாமே கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும் ஒரு பிரதிபிம்பமாக அது இருக்க வேண்டும். பெண்ணுக்கான, விளிம்புநிலை மனிதர்களுக்கான நீதியை சினிமாவுக்கான கலை மொழியில் பேசினால் உண்மையில் அது பெரிய சினிமாதான்.

இன்று(14) உலக நீரிழிவு நாள்

(Kandiah Arunthavabalan)


தொற்றா நோய்களில் இன்று முதன்மையாக இருப்பது ‘நீரிழிவு’
இது ஒருகாலத்தில் பணக்காரர் வருத்தம்
என்றுதான் சொல்லப்பட்டது.
ஆனால் இன்று குடும்பத்தில் 4:1 பேருக்கு
உள்ளது என்று தரவுகள் கூறுகின்றன.