மனிதம் இங்கும் வாழ்கின்றது



இப்போது அந்த திட்டத்தில் ஒரு சிறிய
…இல்லையில்லை …
மிகப் பெரிய மாற்றத்தை செய்யலாமா என மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்தார் அஜய் .
ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் இதற்கு சம்மதிக்க வேண்டுமே … முக்கியமாக மகள் ஸ்ரேயா ..?
அவள் சம்மதிக்க வேண்டுமே ..?
.
சரி …சிந்தித்துக் கொண்டே இருந்தால் செயல்படுத்துவது எப்படி ?

ஒருநாள் … குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றாக உட்கார வைத்தார் அஜய் .
மகள் ஸ்ரேயாவும் அங்கிருந்தாள் .

அஜய் தன் மனதில் இருந்த ஸ்ரேயாவின் கல்யாணம் பற்றிய திட்டத்தை, மெதுவாக சொல்ல ஆரம்பித்தார் .

சொல்லும்போதே மகள் ஸ்ரேயாவின் முகத்தை உற்றுக் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் .
அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை . ஒருவழியாக சொல்லி முடித்து விட்டார் .

அவர் சொன்னதைக் கேட்டு விட்டு , அந்தக் குடும்பமே அமைதியாக எந்த ஒரு சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தது.
.
அஜய் முனாட் மெதுவாக தன் மகள் ஸ்ரேயா அருகே சென்று கேட்டார் :
“ நான் ஏதாவது தப்பாக திட்டம் போட்டு விட்டேனா ? அப்படி இருந்தால் என்னை மன்னித்து விடு அம்மா ..”

அப்பா இப்படி சொல்லவும் , திடுக்கிட்டு அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் ஸ்ரேயா .
அப்பாவின் கண்களில் கண்ணீர் ..! அதைப் பார்த்த மகள் ஸ்ரேயாவின் கண்களிலும் கண்ணீர் .. “அப்பா … உண்மையை சொல்லட்டுமா ?”

அஜய் தன் மகள் என்ன சொல்லப் போகிறாள் என படபடப்போடு பார்த்திருந்தார் .

ஸ்ரேயா சொன்னாள் : “ உண்மையை சொல்லப் போனால் … எனக்கு இப்போது சந்தோஷத்தில் … வார்த்தைகள் எதுவும் வரவில்லை அப்பா … ஆனால் …என்னைப் போல் ஒரு புண்ணியம் செய்த மகள் , இந்த உலகத்தில் எவருமே இருக்க முடியாது . எப்படிப்பட்ட ஒரு உயர்ந்த மனிதரை அப்பாவாக நான் அடைந்து இருக்கிறேன் ..”
.
ஸ்ரேயா பேச பேச … அவளது தந்தை அஜய் அதை நம்ப முடியாமல் ஆச்சரியத்துடன் கேட்டார் : “நிஜமாகவா சொல்கிறாய் ஸ்ரேயா ?”
ஆனந்தக் கண்ணீருடன் “ஆம்” என தலையசைத்தாள் ஸ்ரேயா .
.
அப்பறம் என்ன..?
சமீபத்தில் அஜய் முனாட்டின் மகள் ஸ்ரேயா திருமணம் சந்தோஷமாக நடைபெற்றது .
.
அஜய் முனாட்டின் திட்டப்படி ஆடம்பர செலவுகள் எதுவும் இல்லாத திருமணம் .

கல்யாண செலவுகளுக்காக அஜய் முனாட் ஒதுக்கி வைத்திருந்த அந்த ஒரு கோடி ரூபாயில் …
90 வீடுகள் கட்டப்பட்டு இருக்கின்றன .
.
யாருக்காக அந்த வீடுகள்..?
தங்குவதற்கு இடம் இல்லாமல் பிளாட்பார்மில் குடியிருந்த 90 குடும்பங்களுக்கு ..!
.
ஆம் .. அஜய் முனாட் தன் வீட்டிலிருந்து அலுவலகம் போகும் வழியில் , தங்குவதற்கு வீடு இல்லாமல் பிளாட்பார்மில் பரிதவிப்போடு வாழ்ந்து கொண்டிருந்த பல குடும்பங்களை தினம்தோறும் பார்த்து வந்திருக்கிறார் . இது அவர் மனதை மிகவும் பாதித்திருந்தது .

அவர்களிலிருந்து 90 குடும்பங்களை தேர்ந்தெடுத்து , அவர்களுக்கு தன் மகள் ஸ்ரேயா கரங்களால் , கல்யாண மேடையிலேயே அந்த வீடுகளை பரிசாக வழங்கினார் அஜய் முனாட் .
.
அந்த 90 குடும்பங்களும் இன்று மிகவும் சந்தோஷமாக சொல்கிறார்கள் : “எல்லா கல்யாணங்களிலும் மாப்பிள்ளைக்கும் , பெண்ணுக்கும்தான் மற்றவர்கள் கல்யாணப் பரிசு கொடுப்பார்கள் . ஆனால் இந்தக் கல்யாணத்தில் இந்த மணப்பெண் எங்களுக்கு கல்யாணப்பரிசு கொடுத்திருக்கிறாள் . இதை எங்கள் உயிர் உள்ளவரை நாங்கள் மறக்க மாட்டோம் ..! அந்தப் பெண் ஸ்ரேயா தன் கணவனோடு பல்லாண்டு நலமாக வாழ ஒவ்வொரு நாளும் நாங்கள் வாழ்த்துவோம் ”
.
இந்த குடும்பங்களோடு சேர்ந்து , நாமும் , அஜய் முனாட்டின் மகள் ஸ்ரேயாவை வாழ்த்துவோம் !
.
“கால் பட்ட இடமெல்லாம் மலராக
கை பட்ட பொருளெல்லாம் பொன்னாகணும் –
உன் கண் பட்டு வழிகின்ற நீரெல்லாம்
ஆனந்தக்கண்ணீரே என்றாகணும்”
.
வாழ்க வளமுடன் ..!