‘பிரித்தானிய அரச குடும்பத்தினரின் ‘Megxit’

(Rajes Bala)
பிரித்தானிய அரசகுடும்பத்தினர் இன்று வெளியிட்ட அறிக்கை,பிரித்தானியா மகாராணியின் மூத்த மகனின் இரண்டாவது மகனான இளவரசர் ஹரியும் அவரின் மனைவியான மேகனும் இன்றிலிருந்து பிரித்தானிய அரசகுடும்பத்துக் கடமைகளிலிருந்து வெளியேறிச் சாதாரண பிரஜைகளாக வாழ்க்கையை நடத்துவதை மகாராணியார் அங்கிகரிப்பதாக வெளியிடப்பட்டிருக்கிறது.

அவுஸ்ரேலியக் காடுகள் ஏன் எரிகின்றன?

(ஜெயக்குமாரன் சந்திரசேகரம்)

1. ஏன் அவுஸ்திரேலியக் காடுகள் மாத்திரம் இப்படி எரிகிறது?

முக்கிய காரணம் இங்குள்ள காடுகளில் நிறைந்திருக்கும் யூகலிப்டஸ் மரங்கள். எங்கள் ஊர்ப்பாசையில் சொன்னால் விக்ஸ் அல்லது தைல மரங்கள். அம்மரங்களில் இலகுவில் தீப்பற்றக்கூடிய யூகலிப்டஸ் எண்ணெய் இருக்கிறது. அதனால் பல மரங்கள் வெப்பநிலை அதிகமாகும்போது சூடேறி வெடிக்கவும் செய்யும்.

முன்மாதிரி,கிராம பஞ்சாயத்து

உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ஓடந்துறை கிராமம்!

ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசுகள் உட்பட மொத்தம் 43 நாடுகளின் பிரதிநிதிகளை தன்னை நோக்கி ஈர்த்திருக்கிறது தமிழகத்தின் ஓடந்துறை கிராமம்.

வாழைப்பழத்திலும் விதைகள் உண்டு!

பேராதனைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தத்துவவியல் பேராசான் கலாநிதி காசிநாதன், பதினைந்து வருடங்களுக்கு மேலாக மெல்பனில் வாழ்கிறார். இருந்தாலும் பொது வெளியில் அவர் தன்னைப் பெரிதும் அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. இப்படிச் சிட்னியில் அமைதியாக வாழும் இன்னொரு பேராசிரியர், கலாநிதி இந்திரபாலா. இவருடன் எனக்குப் பெரிய தொடர்பில்லை. காணுமிடத்தில் வணக்கம் சொல்லி மரியாதை செலுத்துவதுடன் சரி. இந்த வரிசையில் இணைந்து கொள்ளும் இன்னுமொருவர் சிட்னியில் வாழ்ந்து சமீபத்தில் மறைந்த (2019) தமிழ்ப் பேராசிரியர் பொன் பூலோகசிங்கம். இவர்கள் எல்லோரும், எமது சமுதாயத்தின் பொக்கிஷங்கள். நமது சமூகம் இவர்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ? என்ற ஆதங்கம் எனக்கு எப்பொழுதும் உண்டு. புலம் பெயர் தேசத்தில் ‘எல்லோருக்கும் எல்லாம் தெரியும்’ என்ற நிலைப்பாடுதான் இதற்கான சுருக்கமான பதில்.

மனதை உறுத்தும் ஒரு சோகம்

இறைவன் மனிதர்களுக்குக் கொடுத்துள்ள பல்வேறு அருட்கொடைகளில் எதையும் நன்றியுணர்வோடு மனிதன் நினைவு கூர்வது குறைவு என்பதை விட இல்லையென்றே கூறலாம். ஆனால், இயற்கையின் சீற்றம் வந்ததும் மனிதன் அப்போது தான் இறை சிந்தனையோடும் அவனை நினைக்கின்றான்.

சாதிய வெறி

(Pushparani Sithampari)

இலங்கைத்தமிழர்களிடையே சாதிவெறி ஒழியவில்லை என்பதுபற்றி நானே நிறைய எழுதியிருக்கின்றேன். இன்னும் எழுதுவேன். ஆனால் தமிழ்நாட்டைவிட அதிகம் என்பதை மறுக்கின்றேன். தமிழ்நாட்டில் இன்னும் நடந்துகொண்டிருப்பதுபோல சாதிவெறியில் படுகொலைகள் செய்வது இப்போது நினைத்தே பார்க்க முடியாத காரியம்.

இராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வரலாறு வெறுமனே நிகழ்வுகளின் பதிவல்ல; அதில் பதியப்படுவனவும் விடுபடுவனவும் திரித்தோ, புனைந்தோ எழுதப்படுவனவும் எவையெவை என்பது, அதிகாரம் பற்றிய கேள்வியுடன் தொடர்புடையது. அண்மையில் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், இராஜராஜ சோழனின் காலம் பொற்காலமல்ல; இருண்டகாலம் என்றும் அவருடைய காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டு, பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன என்று தெரிவித்த கருத்து, மிகுந்த எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது.

தாது வருடப் பஞ்சம்

மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா?

தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம் –
1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது –

கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது –

மனிதம் இங்கும் வாழ்கின்றது

எப்படி சொல்வது தன் மகளிடம் ..?”
– தவித்தார் அந்த தந்தை .

அவர் பெயர் அஜய் முனாட் .
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த தொழிலதிபர் .

அவரது மகள் ஸ்ரேயாவுக்கு திருமணம் .
தேதி எல்லாம் நிச்சயிக்கப்பட்டு விட்டது .
கல்யாணத்துக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்ய திட்டமிட்டிருந்தார் அஜய் . இது குடும்பத்தில் உள்ள எல்லோருக்குமே தெரியும்.

அழியாத கோலங்கள் -2.’ பற்றிய விகடனின் பார்வையில் கூறப்படும் குறைகள் சிலவற்றை தாண்டியும்

“பள்ளிக் காதல், பதின்பருவத்துக் காதல், கல்யாணத்துக்குப் பின் காதல் என பார்த்துப்பழகிய கண்களுக்கு, நாற்பது ப்ளஸ் வயதினரின் காதலை, எவ்வித முகச்சுளிவும் ஏற்படாதவாறு இலக்கியமாய்ப் பளிங்குபோல் காட்டப்படுவதும், கௌரிசங்கரும், மோகனாவும் பேசிக்கொள்வதும், கதையின் பிற்பகுதியில் சீதாவும் மோகனாவும் பேசிக்கொள்வதும் தெளிந்த நீரோடையில் ஓர் இலை மெல்ல மிதப்பதைப் போல் அவ்வளவு அழகாய் இருக்கிறது, அற்புதமாக இருக்கிறது…”

விகடனின் பார்வை…..

தன் எழுத்துக்குக் காரணமான நாயகியை 24 ஆண்டுகளுக்குப் பிறகு காணச் செல்லும் எழுத்தாளருக்கு நேரும் சம்பவங்களின் குவியல்தான் இந்த ‘அழியாத கோலங்கள் -2.’

தான் எழுதிய நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் கௌரிசங்கர், சென்னையில் உள்ள தன் கல்லூரிக் காலத்துக் காதலி மோகனாவைப் பார்க்கச் செல்கிறார். இருவருக்குள்ளும் பேச ஆயிரம் கதைகளும், 24 மணி நேரமும் இருக்கின்றன. ஆனால், அன்றிரவு நடக்கும் ஓர் அசம்பாவிதத்தால் மோகனா இந்தச் சமூகத்தால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறாள். மோகனாவை அச்சூழலிலிருந்து யார் மீட்டெடுக்கிறார்கள் என்பதைக் கவித்துவமாக வரைகிறது இந்த அழியாத கோலங்கள்.

எழுத்தாளர் கௌரிசங்கராக பிரகாஷ்ராஜ். நெற்றி வியர்வை உணர்த்தும் சமிக்ஞையிலிருந்து, படுக்கையில் வீழ்வது வரை மனிதர் தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை உணர்த்துகிறார். கௌரிசங்கரின் மனைவி சீதாவாக ரேவதி, கணவருக்காகவே வாழும் கதாபாத்திரம். முதல் காட்சியிலிருந்து இறுதிவரை படத்தைத் தாங்கி நிற்கும் மோகனா கதாபாத்திரத்தில் அர்ச்சனா. எல்லாம் முடிந்து வாழ்வின் விளம்பில் எந்த சுவாரஸ்யமுமின்றிக் காத்திருக்கும் ஒருவருக்கு, தான் எல்லாமுமாய் நேசித்த ஒருவரின் வருகை எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும். அதை அப்படியே திரையில் கடத்துகிறார் அர்ச்சனா. சில இடங்களில் வெளிப்படுத்தும் அந்த மிகை நடிப்பை அர்ச்சனா குறைத்திருக்கலாம். போலீஸ் அதிகாரியாக நாசர். கச்சிதமாக நடித்திருக்கிறார்.

பள்ளிக் காதல், பதின்பருவத்துக் காதல், கல்யாணத்துக்குப் பின் காதல் என பார்த்துப்பழகிய கண்களுக்கு, நாற்பது ப்ளஸ் வயதினரின் காதலை, எவ்வித முகச்சுளிவும் ஏற்படாதவாறு இலக்கியமாய்ப் பளிங்குபோல் காட்டியதற்கு இயக்குநர் எம்.ஆர். பாரதிக்கு வாழ்த்துகள். கௌரிசங்கரும், மோகனாவும் பேசிக்கொள்வதும், கதையின் பிற்பகுதியில் சீதாவும் மோகனாவும் பேசிக்கொள்வதும் தெளிந்த நீரோடையில் ஓர் இலை மெல்ல மிதப்பதைப் போல் அவ்வளவு அழகாய் இருக்கிறது.

வங்க மொழியில் வெளியான சௌமிக் மித்ராவின் கதையை அழியாத கோலங்களாக எடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர், ஆனால், அதில் கடக்க முடியாத பக்கங்களாய் அத்தனை லாஜிக் மீறல்கள். எட்டு மாடிக்கு ஓடிச் சென்று வாட்ச் மேனை எழுப்புவது முதல் கேமரா இல்லாமலேயே சுற்றிக் கொண்டிருக்கும் செய்தியாளர்கள் வரை அத்தனை செயற்கைகள். ராஜேஷ் நாயரின் ஒளிப்பதிவோ, காசி விஸ்வநாதனின் படத்தொகுப்போ படத்துக்கு எந்தவிதத்திலும் துணைநிற்கவில்லை. படத்தின் பெரும்பகுதியைக் காப்பாற்றுவது அனுபவமிக்க நடிகர்கள்தாம். மற்றவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் ஏதோ மேடை நாடகம் போல் திரைமொழியற்று ஏமாற்றமளிக்கின்றன.

ஓர் ஆத்மார்த்தமான கதையை இன்னும் சிரத்தையோடு எடுத்திருந்தால், என்றென்றைக்கும் அழியாத கோலங்களாய் நிலைத்திருக்கும்.!