உலகவங்கியும் நாமும்….( The World Bank )

இந்த உலக வாங்கி இதுவரையும் உலகில் கிட்ட தடட 5 மில்லியன் மக்களை வீடில்லாதவர்கள் ஆக்கி நடுத்தெருவில் விடட ஒரு அமைப்பு. பல சிறிய நாடுகளை கடன்காரர் முக்கிய பெருமை இவர்களுக்கு உண்டு. இவர்களுடைய உண்மையான வேலை வட்டிக்கு கொடுப்பது. முக்கியம் அமெரிக்காவின் நலன்களை பாதுகாப்பதே…
இது ஒரு தனிப்படட வாங்கி….

(“உலகவங்கியும் நாமும்….( The World Bank )” தொடர்ந்து வாசிக்க…)

மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை? [நீட்சி 3]

மன்னார் மற்றும் முல்லைத்தீவில் டெலோ தேர்தல் விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியதால், அவர்கள் உள்வாங்கப்படாமல் வடக்கின் உறுப்பினர்களை ஏனைய இரண்டு இயக்கங்களும் பகிர்ந்தன. இருந்தும் நாபா டெலோ உள்வாங்கப்பட வேண்டும் என்ற விருப்பில், ஈ பி ஆர் எல் எப் க்கு கிடைத்த ஆசனங்களை அவர்களுடன் பகிரவிரும்பினார். தாஜ் சமுத்திரா ஹோட்டலில் டெலோ சட்டத்தரணி சிறிகாந்தா தலைமையில் கலந்துரையாடிய போது, அவரின் குறி பேரவை தலைவர் பதவியாகவே இருந்தது. ஐந்து உறுப்பினர்கள் மட்டும் தர முடியும் என்ற முடிவை ஏற்காமல் அவர்கள் வெளியேறினர். ஆக வடக்கு கிழக்கு மாகாண பேரவைதலைவர் பதவி டெலோ பேச்சாளர், ஆலோசகர் சட்டத்தரணி சிரிகாந்தாவால் விரும்பபட்டு ஆனால் மறுக்கப்பட்டு, இளங்கோ என்கின்ற ரவீந்திரனுக்கு வழங்கப்பட்டு பின் அவரால் ஏற்க தயக்கம் காட்டப்பட்டதால் என் வசம் வந்தது. அது எனக்கு விரும்பி வழங்கப்பட்டதல்ல.

(“மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை? [நீட்சி 3]” தொடர்ந்து வாசிக்க…)

விச ஊசி விவகாரமும் விக்கியாரும்

வைத்தியரால் மட்டுமல்ல நீதிபதியாலும் அரசியல்வாதியாலும் கூட ஊசி ஏற்ற முடியும் என்பதை நிரூபித்த பெருமை முதல்வர் விக்னேஸ்வரனையே சாரும். நான் முன்பு கூறிய படி இந்த ஊசிக்கதை முன்னாள் புலிகளிடமும் அவர்களின் உறவினர்களிடம் அதிகளவு உளவியல் பிரச்சினைகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

(“விச ஊசி விவகாரமும் விக்கியாரும்” தொடர்ந்து வாசிக்க…)

வாதங்களும் விதண்டாவாதங்களும்

1978 ஆம் ஆண்டு பாடசாலை நாட்களில் ஒரு நாள் மத்தியானம் வீடு சென்று அவசரமாக பாடசாலை திரும்பினேன்.அப்போது வழியில் நடந்து வந்த ஒருவர் என்னை மறித்து என் சைக்கிளில் ஏற்றி செல்லமுடியுமா எனக் கேட்டார்.நான் அப்படி யார் கேட்டாலும் மறுக்காமல் ஏற்றிச் செல்வது வழக்கம்.எனவே மறுப்பின்றி ஏற்றினேன்.

(“வாதங்களும் விதண்டாவாதங்களும்” தொடர்ந்து வாசிக்க…)

பிடல் காஸ்ற்ரோ: புரட்சியின் வரலாறு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலக வரலாறு எத்தனையோ தலைவர்களைச் சந்தித்திருக்கிறது. நல்லவர்கள், வல்லவர்கள், நான்கும் தெரிந்தவர்கள் எனப் பல வகைப்பட்டோர் இதில் அடங்குவர். வரலாற்றைத் திருடியவர்கள், அதை அழித்தவர்கள், எழுதியவர்கள், திரித்தவர்கள் என வரலாறு பலரது கதைகளை தன்னுள் உட்பொதித்து வைத்திருக்கிறது. காலங்கடக்கையில் பலர் மறைந்து போகிறார்கள்; அனேகர் மறக்கப்படுகிறார்கள்; வெகு சிலரே காலங்கடந்தும் நிலைக்கிறார்கள். அவ்வாறு நிலைப்பவர்களை வரலாறு விடுதலை செய்து விடுகிறது.

(“பிடல் காஸ்ற்ரோ: புரட்சியின் வரலாறு” தொடர்ந்து வாசிக்க…)

மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை? [நீட்சி-2]

1988ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி, திருமலை நகரசபை மண்டபத்தில், ஆளுநர் முன் இடம்பெற்ற சத்திய பிரமாண வைபவம் என் கண்முன் விரிகின்றது. மேடையில் ஆளுநர், அன்றைய அரச அதிபர் மற்றும் மேலதிக அரச அதிபர் அமர்ந்திருக்க, உறுப்பினர்களான நாம் அனைவரும் கீழே வரிசையாக தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் போல் அமர வைக்கப்பட்டோம். மேலதிக அரச அதிபர் மேடையில் ஒலி வாங்கி முன் நின்று சத்திய பிரமாண வாசகங்களை வாசிக்க நாமும் கோரசாக அதனை தொடர்ந்தோம். பின்பு பேரவை தலைவர், மற்றும் பிரதி பேரவை தலைவர் பெயர்கள் முன்மொழிந்து, வழிமொழியப்பட போட்டி இன்றிய தெரிவாக அது நிறைவேறியது. அப்போது அம்பாறையில் இருந்து தெரிவான 1 யு என் பி உறுப்பினரும், திருமலை, மட்டக்களப்பு, அம்பாறையில் இருந்து தெரிவான 17 முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் சமூகமளிக்கவில்லை.

(“மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை? [நீட்சி-2]” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் தகவல்களை ரோவிற்கு வழங்கிய புளொட் தலைவர் சித்தார்த்தன்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலைசெய்யுமாறு வழங்கப்பட்ட உத்தரவை இடைமறித்துக்கேட்ட புளொட் அமைப்பின் உறுப்பினர் ஓருவர் அதனை தனது தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் கவனத்திற்கு கொண்டுவந்தார்- அவர் அதனை உடனடியாக இந்தியாவின் புலனாய்வு பிரிவினரிற்கு தெரிவித்தார்.

(“புலிகளின் தகவல்களை ரோவிற்கு வழங்கிய புளொட் தலைவர் சித்தார்த்தன்” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(7)

(பிள்ளை பிடிக்கு உதவிய பிரித்தானிய தந்திரம்)

போர் முனைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட இழப்புகளால் பெருமளவில் ஏற்பட்ட ஆள் அணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய புலிகள் அத்தனை வழிகளையும் கையாளத் தொடங்கி இருந்தனர். பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரத்தை போலவே அவர்களும் இங்கு பிரித்தாளும் தந்திரத்தை பிரயோகித்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(7)” தொடர்ந்து வாசிக்க…)

‘சலோ ஊனா’ நெடும்பயணம் வலியுருத்தும் அரசியல் பாடம் . . .!

தலித் மக்களின் சுயமரியாதைக்கான மாபெரும் எழுச்சி போராட்ட பயணம் (சுயமரியாதை பயணம்) குஜராத்தில், அகமதாபாத்தில் ஆகஸ்ட் 5ம் நாள் தொடங்கி பல கிராமங்களை கடந்து கிட்டத்தட்ட 81கி.மீ தொலைவு பயணித்து இன்றைய நாளில் (ஆகஸ்டு 15, 2016) ஊனாவை அடைகிறது. இது மதசார்பற்ற இந்திய நாடு, இந்து நாடு அல்ல என்று உணர்த்தும் வண்ணம் இந்திய கொடியை ஏற்றுகின்றனர். இதுகாறும் வன்கொடுமைகளுக்கும், இழிவாழ்விற்கும் ஆளான மக்கள் தன் விதியை தானே தீர்மானிக்க விடுதலை பாதையை நோக்கி வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதுவும் இந்த நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைப்பதாய் சொன்ன 56அங்குலம் மார்பை கொண்டிருக்கும் மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில்.

(“‘சலோ ஊனா’ நெடும்பயணம் வலியுருத்தும் அரசியல் பாடம் . . .!” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C ( பகுதி 59 )

1977 இல் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டது.பற்குணம் தேர்தல் கடமையின் காரணமாக தற்காலிமாக தேர்தல் முடியும்வரை நுவரெலியாவிக்கு அனுப்பப் பட்டார்.தேர்தல் முடிந்தது .ஜே.ஆர்.தலைமையிலான கட்சி ஆட்சியைப் பிடித்தது.இந்தத் தேர்தலில் வரலாற்றில் முதல் தடவையாக ஆறில் அய்ந்து பெரும்பான்மையுடன் அய்.தே.கட்சி ஆட்சியைப் பிடித்தது.

(“பற்குணம் A.F.C ( பகுதி 59 )” தொடர்ந்து வாசிக்க…)