ஊழல் பெருச்சாளி ஐங்கரநேசனுக்கு எதிராகப் பிரேரணை நிறைவேற்றம்! காப்பாற்றிய விக்னேஸ்வரன் சரணாகதி!

வாக்குப் பொறுக்கும் அரசியலுக்கும் ஊழலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நான்கு தசாப்த ஆயுதப் போராட்டத்தையும் அதன் இழப்புக்களையும் வட மகாணசபைக்குள்ளும், யாழ்ப்பாணத்தினுள்ளும் முடக்கி அழித்து வாக்குப் பொறுக்கும் அரசியல் கலாச்சாரத்தை மீள் கட்டமைத்த பெருமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், விக்னேஸ்வரனையுமே சாரும். வட மாகாண சபையின் ஊழல் பெருச்சாளிகளுள் அதிஉச்ச பங்காற்றியவர் போ.ஐங்கரநேசன் என்பது குறிப்பிடத்தக்கது. சுன்னாகம் நச்சு நீர் தொடர்பான பிரச்சனையில் ஐங்கரநேசனின் ஊழல் தொடர்பாக இனியொரு பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியிருந்தது. வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஐங்கரனேசன், சுன்னாகத்தில் அழிப்பை நடத்திய நிறுவனத்தைக் காப்பாற்ற போலி நிபுணர் குழு ஒன்றை அமைத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மாகாண சபையில் அதன் உறுப்பினரும் புளொட் அமைப்பைச் சார்ந்தவருமான கே.ரீ.லிங்கநாதன் பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.

(“ஊழல் பெருச்சாளி ஐங்கரநேசனுக்கு எதிராகப் பிரேரணை நிறைவேற்றம்! காப்பாற்றிய விக்னேஸ்வரன் சரணாகதி!” தொடர்ந்து வாசிக்க…)

அப்பன் குதிருக்குள் இல்லை!

இலங்கையில், கணிசமானோரின் அரசியல் இருப்பு ஆட்டம் கண்டிருக்கிறது. முன்னைய ஆட்சிக் காலத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் நிழலில் குட்டி ராசாக்கள் போல் வலம் வந்தவர்கள், இப்போது நடுத் தெருவில் நின்று கொண்டிருக்கின்றார்கள். இதனால், எதையாவது செய்து தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவை, இந்த முன்னாள் குட்டி ராசாக்களுக்கு எழுந்துள்ளது. இவர்கள் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, ஆர்வக் கோளாறில் செய்யும் பல விடயங்கள், இவர்களினதும் இவர்கள் சார்ந்தோரினதும் தலைகளில் இவர்களே மண்ணை வாரி இறைக்கும் நிலையினை ஏற்படுத்தி விடும் அபாயமுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இளவரசர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், இலங்கை வந்திருந்தார். இலங்கை மீது மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றிய ஜெனீவா பிரேரணையினை அமுலாக்குதல் பற்றியதாக ஹுஸைனின் விஜயம் அமைந்திருந்தது.

(“அப்பன் குதிருக்குள் இல்லை!” தொடர்ந்து வாசிக்க…)

பரிசம்’ போட்டுச் சென்றுள்ள சுஷ்மா!!!

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்;, கொழும்புக்கு வந்து முக்கியமான சில பேச்சுக்களில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பியிருக்கிறார். இலங்கையின் கடந்த நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக தோற்றம்பெற்றபோதும் அதன் அதன் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டபோதும்கூட, எந்த அசுமாத்தமும் காட்டாமல் இலங்கையின் நகர்வுகளை மதிப்பிட்டுக்கொண்டிருந்த இந்தியா, முதன் முதலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் நேரடியாக சந்தித்துப் பேசியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், கடந்த தடவை ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரை சந்திக்க கிடைத்த பரந்த வாய்ப்பு போல அல்லாமல், குறுகிய சந்திப்பாக இருந்தாலும்கூட கிடைக்கப்பெற்ற நேரத்தில் முக்கியமான விடயங்களை பேசியுள்ளார்கள் என்று அறியவருகிறது.

(“பரிசம்’ போட்டுச் சென்றுள்ள சுஷ்மா!!!” தொடர்ந்து வாசிக்க…)

சோவியத் யூனியனின் பௌத்த மதக் குடியரசு தன்னு துவா! எங்கே இருக்கிறது?

 

ஆசியாக் கண்டத்தில், ரஷ்யா, மொங்கோலியா நாடுகளுக்கு நடுவில் உள்ளது. 1920 முதல் 1944 வரையில் சுதந்திரமான தனி நாடாக இருந்தது. துவா மொழி பேசும் சைபீரிய பூர்வகுடிகளை பெரும்பான்மையாகக் கொண்டது. அவர்கள் திபெத்திய- பௌத்த மதத்தை பின்பற்றுகிறார்கள்.

தன்னு மலைப் பிராந்தியத்தின் பழங்குடிகளான துவா மக்கள், ஒரு நாடோடி இனமாக வாழ்ந்தவர்கள். நீண்ட காலமாக, சீனா, மஞ்சு, ரஷ்யா ஆகிய சாம்ராஜ்யங்களால் மாறி மாறி ஆளப்பட்டு வந்தது. 1917 ரஷ்யப் புரட்சியை அடுத்து நடந்த உள்நாட்டுப் போரில், போல்ஷெவிக் செம் படைகள், சார் மன்னனுக்கு விசுவாசமான படைகளிடம் இருந்து அந்த நாட்டைக் கைப்பற்றின. லெனினின் நேரடி பணிப்பின் பெயரில், தன்னு துவா ஒரு சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப் பட்டது. சோவியத்யூனியனும், மொங்கோலியாவும் ஒரு உடன்படிக்கையின் பிரகாரம் சுதந்திரத்தை அங்கீகரித்தன.

தன்னு துவா ஜனாதிபதி, பௌத்த மதத்திற்கு முக்கிய இடம் கொடுத்து, மொங்கோலியாவுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். பௌத்த- துவா தேசியத்தை வளர்த்து வந்தார். அதனால் அதிருப்தியுற்ற துவா கம்யூனிஸ்டுகளின் இரகசிய அமைப்பொன்று, அதிரடிப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து நாட்டின் பெயர் “தன்னு துவா மக்கள் குடியரசு” என்று மாற்றப் பட்டது. நாடோடி சமூக அமைப்பு முடிவுக்கு வந்தது. கம்யூனிச கூட்டுறவுப் பண்ணைகள் உருவாக்கப் பட்டன.

இரண்டாம் உலகப் போரில், தன்னு துவா அரசு சோவியத் யூனியனுக்கு தன்னாலியன்ற சிறியளவு பங்களிப்பை செய்துள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர், தன்னு துவா ரஷ்யாவின் ஒரு பகுதியாகியது. 1992 வரையில், அது ரஷ்யாவுக்குள் அடங்கிய சுயாட்சிப் பிரதேசமாக இருந்தது. இன்று அது ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே தொடர்ந்தும் இருக்கிறது.

(Tharmalingam Kalaiyarasan)

குடிகளிலாக் கோயில்களும் குருட்டுத்தனங்களும்.

ஊருக்குப்போனாய் ஒன்றுமே சொல்லவில்லையே என்று அங்கலாய்ப்பவர்களுக்கு “என்னத்தைச் சொல்வது ?” என்பதைத் தவிர வேறு எதைச் சொல்லமுடியும். வாய்திறந்தால் வம்பை விலைக்குவாங்குவது உனக்கு இடப்பட்சாபம் என்று சின்ன வயதில் யாரோ சொன்னதும் ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது.

(“குடிகளிலாக் கோயில்களும் குருட்டுத்தனங்களும்.” தொடர்ந்து வாசிக்க…)

மத்திய கிழக்கில் சீனா: புதிய அரங்காடியின் வருகை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அரங்காடிகளின் வருகை, அர்த்தம் பொதிந்தது. வருகையின் காலமும் களமும் அவர்களதும் அரங்கினதும் முக்கியத்தை உணர்த்த வல்லன. அரங்கில் நுழையும் எல்லோருமே அரங்காடிகள்தான் எனினும் சிலரின் வரவு பிறரினதை விட முக்கியமானது. மத்திய கிழக்கு நிலைமைகளை அமைதியாக அவதானித்திருந்த சீனா, இப்போது மத்திய கிழக்கு அலுவல்களிற் செல்வாக்குடைய சக்தியாகியிருப்பது தற்செயலல்ல. எனினும், ஏலவே சிக்கலடைந்த சிரிய நெருக்கடியிற் சீனாவின் ஆர்வம் வியப்பூட்டியுள்ளது. சீனாவைப் பொறுத்த வரை, ஒரு வணிகக் கூட்டாளியாகச் சிரியாவின் முக்கியத்துவம் குறைவு. கடந்தாண்டின் இறுதி நாட்களில் சிரிய வெளியுறவு அமைச்சரின் சீன விஜயம் மிகப் பேசப்பட்டது. அதையடுத்த சிரிய எதிர்க் கட்சிக் கூட்டணியினரின் சீன விஜயம், சிரியா பற்றிச் சீனாவின் வெளிப்படையான அக்கறையை எடுத்துக் காட்டியது. இவ்விரு விஜயங்களும் சிரிய நெருக்கடிக்குத் தீர்வு தேடும் சீன முனைப்பைக் குறிகாட்டின.

(“மத்திய கிழக்கில் சீனா: புதிய அரங்காடியின் வருகை” தொடர்ந்து வாசிக்க…)

முயல் – ஆமை ஓட்டம்! முடிவு?

நாம் அடையவேண்டிய இலக்கை நோக்கி நிதானமாக தொடர்ந்து சென்றால், முடிவு எமக்கு சாதகமாகும். அதேவேளை வேகமாக செயல்படுவதாய் இறுமாப்பாக புறப்பட்டு, நிலமை எமக்கு சாதகமாக இருப்பதாக தப்புக்கணக்கு போட்டால், காரியம் கைநழுவி போகும் நிலை ஏற்படலாம். இதனைத்தான் அண்மையில் யாழில் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள், ஒரு முக்கியமான சந்திப்பை தமிழ் அரசு கட்சி தலைமையகத்தில் திரு மாவை சேனாதிராசா உடன் நடத்தியது கோடிட்டுகாட்டுகிறது.

(“முயல் – ஆமை ஓட்டம்! முடிவு?” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலை விரும்பிகளில் சாவாரி செய்யும் ஒட்டு குழுக்கள்!

தமிழீழ விடுதலை போராட்டவாரலாற்றில்,விசேடமாக ஆயுதபோராட்ட காலத்தில் பாவனைக்கு வந்துள்ள பல சொற்பதங்களில் ஒன்று ‘ஒட்டுக்குழுக்கள்’. இதை ஆங்கிலத்தில் Paramilitary எனகூறுவார்கள். இதனது வரவிலக்கணம் அல்லது அதன் பொருளை ஆராயுமிடத்து சில சங்கடமான விடயங்கள் வெளியாகின்றன. அவற்றை வடக்கு கிழக்கு வாழ் தமிழீழ மக்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்பதில் எமக்கு ஐயமுமில்லை. ஆகையால் அதனது விளக்கத்தை மிகவும் சுருக்கமாக தருகிறேன். ஓட்டு குழுக்கள் – கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அடிப்படை தந்துவங்களுக்கு அப்பால் சுயகௌரவம் அற்று,சந்தர்ப்பவாத வாழ்க்கை நடந்துபவர்கள் என வரவிலக்கணம் சுட்டி காட்டுகிறது. இவர்கள் பணம், பதவி, ஆசை, காமம் ஆகியவற்றிற்கு அடிமையானர்வர்களென அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.

(“விடுதலை விரும்பிகளில் சாவாரி செய்யும் ஒட்டு குழுக்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

மாணவர்கள் மலசல கூடங்களை கழுவும் அவலம்!!!

 

யாழில் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி வலயத்தின் பல பாடசாலைகளில் மாணவர்களை கொண்டு கையால் எந்தவித பாதுகாப்பு கை உறைகளும் போடாமல் மலசலகூடங்களை கழுவுவிக்கும் அவலம் நடைபெறுகிறது. யாழில் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி வலயக்கல்விப் பணிப்பாளரின் பொறுப்பற்ற தலைமைத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. சிறுவர் பாதுகாப்பில் இலங்கை அரசு அதிக கவனம் செலுத்தி வருகின்ற இக்கால கட்டத்தில் படித்த மேதைகள் அதிகமாக உள்ள வடமராட்சி பகுதிகளில் மாணவர்களை கொண்டு பாடசாலை கழிவறைகளை துப்பரவு செய்வது கவலைப்பட வேண்டிய செயல்.

(“மாணவர்கள் மலசல கூடங்களை கழுவும் அவலம்!!!” தொடர்ந்து வாசிக்க…)

அறப்படிச்ச பல்லிகளையும் கூழ் பானைக்குள் விழவைக்கும் வடமாகாணம்! வரப் போகும் ஆளுநரின் நிலை என்ன?

வடக்கு மாகாணத்துக்குரிய புதிய ஆளுநராக, ஓரளவு தமிழ் மொழி பேசும் திறனுள்ள இடதுசாரி அரசியலில் பற்றுள்ள, மேல் மாகாணத்தின் முதலமைச்சராகவும் மத்தியில் சிறு விளைபொருள் ஏற்றுமதி மேம்படுத்தல் அமைச்சராகவும் விளங்கிய ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விரைவில் நியமிக்கப்படவுள்ளார். ரெஜினோல்ட் குரே ஒரு மூத்த அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் களுத்துறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினராகி. சிறு விளைபொருள் ஏற்றுமதி மேம்படுத்தல் அமைச்சராக இருந்தார்.

(“அறப்படிச்ச பல்லிகளையும் கூழ் பானைக்குள் விழவைக்கும் வடமாகாணம்! வரப் போகும் ஆளுநரின் நிலை என்ன?” தொடர்ந்து வாசிக்க…)