மத்திய கிழக்கில் சீனா: புதிய அரங்காடியின் வருகை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அரங்காடிகளின் வருகை, அர்த்தம் பொதிந்தது. வருகையின் காலமும் களமும் அவர்களதும் அரங்கினதும் முக்கியத்தை உணர்த்த வல்லன. அரங்கில் நுழையும் எல்லோருமே அரங்காடிகள்தான் எனினும் சிலரின் வரவு பிறரினதை விட முக்கியமானது. மத்திய கிழக்கு நிலைமைகளை அமைதியாக அவதானித்திருந்த சீனா, இப்போது மத்திய கிழக்கு அலுவல்களிற் செல்வாக்குடைய சக்தியாகியிருப்பது தற்செயலல்ல. எனினும், ஏலவே சிக்கலடைந்த சிரிய நெருக்கடியிற் சீனாவின் ஆர்வம் வியப்பூட்டியுள்ளது. சீனாவைப் பொறுத்த வரை, ஒரு வணிகக் கூட்டாளியாகச் சிரியாவின் முக்கியத்துவம் குறைவு. கடந்தாண்டின் இறுதி நாட்களில் சிரிய வெளியுறவு அமைச்சரின் சீன விஜயம் மிகப் பேசப்பட்டது. அதையடுத்த சிரிய எதிர்க் கட்சிக் கூட்டணியினரின் சீன விஜயம், சிரியா பற்றிச் சீனாவின் வெளிப்படையான அக்கறையை எடுத்துக் காட்டியது. இவ்விரு விஜயங்களும் சிரிய நெருக்கடிக்குத் தீர்வு தேடும் சீன முனைப்பைக் குறிகாட்டின.

(“மத்திய கிழக்கில் சீனா: புதிய அரங்காடியின் வருகை” தொடர்ந்து வாசிக்க…)

முயல் – ஆமை ஓட்டம்! முடிவு?

நாம் அடையவேண்டிய இலக்கை நோக்கி நிதானமாக தொடர்ந்து சென்றால், முடிவு எமக்கு சாதகமாகும். அதேவேளை வேகமாக செயல்படுவதாய் இறுமாப்பாக புறப்பட்டு, நிலமை எமக்கு சாதகமாக இருப்பதாக தப்புக்கணக்கு போட்டால், காரியம் கைநழுவி போகும் நிலை ஏற்படலாம். இதனைத்தான் அண்மையில் யாழில் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள், ஒரு முக்கியமான சந்திப்பை தமிழ் அரசு கட்சி தலைமையகத்தில் திரு மாவை சேனாதிராசா உடன் நடத்தியது கோடிட்டுகாட்டுகிறது.

(“முயல் – ஆமை ஓட்டம்! முடிவு?” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலை விரும்பிகளில் சாவாரி செய்யும் ஒட்டு குழுக்கள்!

தமிழீழ விடுதலை போராட்டவாரலாற்றில்,விசேடமாக ஆயுதபோராட்ட காலத்தில் பாவனைக்கு வந்துள்ள பல சொற்பதங்களில் ஒன்று ‘ஒட்டுக்குழுக்கள்’. இதை ஆங்கிலத்தில் Paramilitary எனகூறுவார்கள். இதனது வரவிலக்கணம் அல்லது அதன் பொருளை ஆராயுமிடத்து சில சங்கடமான விடயங்கள் வெளியாகின்றன. அவற்றை வடக்கு கிழக்கு வாழ் தமிழீழ மக்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்பதில் எமக்கு ஐயமுமில்லை. ஆகையால் அதனது விளக்கத்தை மிகவும் சுருக்கமாக தருகிறேன். ஓட்டு குழுக்கள் – கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அடிப்படை தந்துவங்களுக்கு அப்பால் சுயகௌரவம் அற்று,சந்தர்ப்பவாத வாழ்க்கை நடந்துபவர்கள் என வரவிலக்கணம் சுட்டி காட்டுகிறது. இவர்கள் பணம், பதவி, ஆசை, காமம் ஆகியவற்றிற்கு அடிமையானர்வர்களென அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.

(“விடுதலை விரும்பிகளில் சாவாரி செய்யும் ஒட்டு குழுக்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

மாணவர்கள் மலசல கூடங்களை கழுவும் அவலம்!!!

 

யாழில் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி வலயத்தின் பல பாடசாலைகளில் மாணவர்களை கொண்டு கையால் எந்தவித பாதுகாப்பு கை உறைகளும் போடாமல் மலசலகூடங்களை கழுவுவிக்கும் அவலம் நடைபெறுகிறது. யாழில் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி வலயக்கல்விப் பணிப்பாளரின் பொறுப்பற்ற தலைமைத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. சிறுவர் பாதுகாப்பில் இலங்கை அரசு அதிக கவனம் செலுத்தி வருகின்ற இக்கால கட்டத்தில் படித்த மேதைகள் அதிகமாக உள்ள வடமராட்சி பகுதிகளில் மாணவர்களை கொண்டு பாடசாலை கழிவறைகளை துப்பரவு செய்வது கவலைப்பட வேண்டிய செயல்.

(“மாணவர்கள் மலசல கூடங்களை கழுவும் அவலம்!!!” தொடர்ந்து வாசிக்க…)

அறப்படிச்ச பல்லிகளையும் கூழ் பானைக்குள் விழவைக்கும் வடமாகாணம்! வரப் போகும் ஆளுநரின் நிலை என்ன?

வடக்கு மாகாணத்துக்குரிய புதிய ஆளுநராக, ஓரளவு தமிழ் மொழி பேசும் திறனுள்ள இடதுசாரி அரசியலில் பற்றுள்ள, மேல் மாகாணத்தின் முதலமைச்சராகவும் மத்தியில் சிறு விளைபொருள் ஏற்றுமதி மேம்படுத்தல் அமைச்சராகவும் விளங்கிய ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விரைவில் நியமிக்கப்படவுள்ளார். ரெஜினோல்ட் குரே ஒரு மூத்த அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் களுத்துறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினராகி. சிறு விளைபொருள் ஏற்றுமதி மேம்படுத்தல் அமைச்சராக இருந்தார்.

(“அறப்படிச்ச பல்லிகளையும் கூழ் பானைக்குள் விழவைக்கும் வடமாகாணம்! வரப் போகும் ஆளுநரின் நிலை என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

ஜேஆர் அறிவிப்பு! பண்டா அமுலாக்கல்! பெரேரா எதிர்ப்பு! கொல்வின் விளக்கம்! பதவிக்காக கொள்கையை கைவிட்டவர்கள்!

காந்தியின் வெள்ளையனே வெளியேறு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்ட ஜே ஆர், தான் ஆற்றிய உரையில் இலங்கை பல மொழி பேசும் இந்தியாவின் மாநிலமாக இணைக்கப்படல் வேண்டும் என்ற தன் நிலைப்பட்டை தெரிவித்தார். பின்பு அநகாரிக தர்மபாலாவின் சிந்தனை வழியில் சிங்களம் தேசிய மொழியாக வேண்டும் என, சட்டசபையில் கூறி தன் அரசியல் நிலைபாட்டை மாற்றிக்கொண்டார். அதேபோல பிரித்தானியாவில் மேற்படிப்பு படித்து நாடு திரும்பிய பண்டாரநாயக்க, இலங்கை மூன்று சமஸ்டி ராச்சியங்களாக மாற்றம்பெற வேண்டும் என கூறினார். ஆனால் தான் ஆட்சிக்கு வந்ததும் தமிழரசு கட்சி கோரிய சமஸ்ட்சிக்கு ஒப்பமிட்டு பின்பு அதனை கிழித்து எறிந்தார்.

(“ஜேஆர் அறிவிப்பு! பண்டா அமுலாக்கல்! பெரேரா எதிர்ப்பு! கொல்வின் விளக்கம்! பதவிக்காக கொள்கையை கைவிட்டவர்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

சம்பந்தனின் கண்ணீரால் சங்கரி கடுப்பில்…

சம்பந்தனுக்கு கண்ணீர், மக்களிற்கு இரத்தம் வடிகிறது!!! எனும் தலைப்பில் வீ.ஆனந்தசங்கரியினால் ஊடக அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது, இதில் அரசியல் கைதிகள், முன்னால் போராளிகள், கணவனை இழந்த இளம் பெண்கள் பொன்றோரின் நிலையை அறிந்து, அவர்களிற்கு கிடைக்க வேண்டியதை பெற்று கொடுக்க அஎதிர் கட்சி தலைவராக ஏதாவது முயன்றுள்ளீர்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். திரு.சம்மந்தன் ஐயா அவர்கள் சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்டிருந்தபோது தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட வேளை கண்கள் கனிந்து கண்ணீர் முட்டியதாக வந்த செய்தி எம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. எமது பிள்ளைகள் சிறையில் விடுதலை பற்றிய கனவு கண்டு கொண்டு பல தடைவ ஏமாற்றமடைந்து விரக்தியுடன் இருக்கும் அரசியல்கைதிகளை நினைத்து வராத கண்ணீர், காணாமல் போன உறவுகளின் நிலையறியாது, நாளும் பொழுதும் கண்ணீருடன்வாழும் ஆயிரமாயிரம் தாய்மார்கள் கதறி அழும்போது வராத கண்ணீர், யுத்தத்தின் இறுதி நாட்களில் அம்மக்களை விடுவிக்க வந்த சந்தர்ப்பத்தை நளுவ விட்டுவிட்டடோம் என்ற குற்ற உணர்வில் வரவைக்காத போது இன்று மட்டும் தேசிய கீதம் தமிழில் பாடபட்டபோது எப்படி கண்கள் பனித்தன என்பது ஆச்சரியமானதே.

(“சம்பந்தனின் கண்ணீரால் சங்கரி கடுப்பில்…” தொடர்ந்து வாசிக்க…)

சுதந்திர தினத்தோடு மீண்டும் அழிப்பதற்கான திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதா?

இலங்கை என்ற சிறிய தீவை பிரித்தானிய காலனியாதிக்கம் விடுதலை செய்து தனது உள்ளூர் முகவர்களிடம் ஆள்வதற்காக ஒப்படைத்த நாளான பெப்ரவரி 4ம் திகதியை இலங்கையின் சுதந்திர நாளாகக் கொண்டாடுகிறார்கள். தமிழர்களுக்கு மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பகுதியில் வாழ்கின்றவர்களுக்கும் இந்த நாள் சுதந்திர நாள் அல்ல. இலங்கையை நேரடியாக ஆட்சிசெய்த பிரித்தானியா தமது முகவர்களூடாக அதனை ஆள்வதற்குரிய அரசை ஏற்படுத்திய சுதந்திர தினத்திலிருந்து இலங்கையில் ஒரு சுழற்சி போல இரத்தம் ஆறாகப் பாய ஆரம்பித்தது. தொடர்ச்சியாகப் பத்தாண்டுகள் இலங்கையில் ஆயுதப் போராட்டமற்ற சூழல் காணப்பட்டதில்லை. சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான வன்முறைகளை இனக்கலவரங்கள் என அழைத்துக்கொண்டனர். தெற்கிலிருந்து எழுந்த ஜே.வி.பி இன் ஆயுதப் போராட்டங்களையும், தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தையும் பயங்கரவாதம் என அழைத்தனர். இந்த இரண்டு போராட்டங்களையும் அழித்து ஆயிரமாயிரமாய் மக்களை கொன்று குவிப்பதற்கு பிரித்தானிய அரசு நேரடிப் பங்களிப்பைச் செலுத்தியது. தனது ஆலோசகர்களை இலங்கைக்கு அனுப்பியது. ஆட்கொல்லி ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கிற்று.

(“சுதந்திர தினத்தோடு மீண்டும் அழிப்பதற்கான திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதா?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர்கள் உதவவேண்டும் என்கிறார் சந்திரிக்கா!!!

வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளைக் களைவதாக தீர்வு! அதற்கு தமிழர்கள் உதவவேண்டும் என்கிறார் சந்திரிக்கா!!!

ஒற்றையாட்சியோ வேறெதும் ஆட்சியோ பெயர் முக்கியமல்ல மாறாக தமிழ் முஸ்லிம் சிங்களம் ஆகிய அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதான போதுமானதும் நடைமுறையில் செயற்படுத்தக்கூடியதுமான தீர்வைக்கொடுப்பதே முக்கியமானதாகும். மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளைக் களைவதாக . தமது தீர்வு அமைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவிக்கின்றார். கடும்போக்காளர்கள் இன்னமும் இந்த நாட்டில் மிகச் சிறிய சிறுபான்மைத் தரப்பினராகவே இருக்கின்றனர்.என்ன செய்யவேண்டும் என்பதை பெரும்பான்மையினர் தீர்மானிக்க முனைவார்களாக இருப்பின் கடும்போக்காளரரான சிறுபான்மையினர் குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். சுடர் ஒளிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார். அவரது முழுமையான நேர்காணல் பின்வருமாறு:

(“தமிழர்கள் உதவவேண்டும் என்கிறார் சந்திரிக்கா!!!” தொடர்ந்து வாசிக்க…)

கண்களில் உறுதியுடன் உணர்வுபூர்வமாக சம்பந்தன்

இலங்கை அரசியல் வரலாற்றில் 67 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக நேற்று சுதந்திர தின தேசிய நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மஹிந்த அணி மற்றும் பௌத்த அடிப்படைவாத அமைப்புக்களின் பலத்த எதிர்ப்புக்கும் மத்தியில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருப்பது சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் உறுதியான நடவடிக்ைகயால் தேசிய சுதந்திர தினத்தில் தமிழிலும் தேசியகீதம் இசைக்கப்பட்டிருக்கிறது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அவர்களின் இந்தத் தீர்மானத்துக்கு அடிப்படைவாதிகள் பலர் எதிர்ப்புத் தெரிவித்தபோதும் நேற்றைய சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(“கண்களில் உறுதியுடன் உணர்வுபூர்வமாக சம்பந்தன்” தொடர்ந்து வாசிக்க…)