வாசகர் கருத்து

அன்புள்ள சூத்திரம்,
மனநோயாளி மனேகணேசனின் அறிக்கையைப் போடுமளவுக்கு என்னய்யா உங்களுக்கு நடந்தது? முன்பு சூத்திரம் வாசிக்கக்கூடியதாக இருந்தது. இப்ப ஏன் இந்தப் போக்கு? புரியவில்லை. திரும்பவும் வாருங்கள் பட்டிக்கு.
– சந்திரன்
இது ஒரு வகை பத்திரிகா தந்திரோபாயம் மனோ கணேசனை அவரனின் அறிகை மூலமே அம்பலப்படுத்துவது. இது அவரின் கருத்தை ஏற்றுக் கொளவதாக அமையாது. சற்று ஆழமாகப் பார்த்ததால் புரியும் -ஆர்

மகிந்த நாலடி பாய்ந்தால், அரசு எட்டடி பாயும்! இலங்கை அரசியல் நிலவரம்!

இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்கப்பட முடியாதவர் மகிந்த ராஜபக்ச என்றால் அது மிகையாகாது. ‘யுத்த வன்முறையை தனது ஆட்சிக் காலத்திலேயே முடிவுக்கு கொண்டு வருவேன். அதை அடுத்த தலைமுறைக்கும், அடுத்த தலைமைகளுக்கும் விட்டுவைக்க மாட்டேன்’ என்று மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். 2009ஆண்டு மே 18ஆம் திகதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக அவர் அறிவித்தபோது, இலங்கை இரண்டாவது முறையாக விடுதலை பெற்றுள்ளது என்று சிங்கள மக்கள் மகிந்தவைக் கொண்டாடினார்கள். அதன் பிறகு அபிவிருத்தியை முன்னெடுக்கப் போவதாகக் கூறினார். பெரும்பாலும் வீதிகளை அபிவிருத்தி செய்து நகரங்களையும், கிராமங்களையும் இலகுவாக இணைக்கும் முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றார்.

(“மகிந்த நாலடி பாய்ந்தால், அரசு எட்டடி பாயும்! இலங்கை அரசியல் நிலவரம்!” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனை உயிருடன் வைத்திருக்கும் இந்தியா!

“அவன் தணிந்த குரலில் கதைத்தான். வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டுவிட்டுக் கதைத்தான். அந்த இடைவெளிக்குள் அகப்பட்டு, அவஸ்தைப்பட்டு அவஸ்தைப்பட்டு வெளியே வந்தான். இரண்டு வார்த்தைகளுக்கிடையிலான மெளனத்தில் என் மனம் நசிந்தது. இது ஒரு வலி. பட்டால் மட்டும் புரியும் வலி.” – இது ஈழத்தமிழர் குணா கவியழகன் எழுதிய ‘நஞ்சுண்டகாடு’ நாவலில் வரும் வரிகள். அவருடனான உரையாடலும் இப்படியானதாகத்தான் இருந்தது. ‘குணா கவியழகனின் படைப்புலக ஆய்வரங்கு’ நிகழ்வுக்காக நெதர்லாந்திலிருந்து, சென்னை வந்தவரை தொடர்பு கொண்டேன். ‘இலக்கியம் பேசுவதாக இருந்தால் நாம் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆம், எனக்கு இலக்கியம் தவிர பேச வேறொன்றுமில்லை. சம்மதமா?’ என்றார். உடனே சம்மதித்தேன். குணா அவருடைய நாவல்களிலேயே அரசியல் பேசுபவர். ஆகவே, நிச்சயம் அது வெறும் இலக்கிய உரையாடலாக மட்டும் இருக்காது என்று நம்பியதால் சம்மதித்தேன்.

(“பிரபாகரனை உயிருடன் வைத்திருக்கும் இந்தியா!” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளும் வசதியான புலி உறுப்பினர்களும்

1987ல் இந்தியப் படைகள் வருவதற்கு முன்னர் புலிகள் இயக்கத்தில் வசதி படைத்தவர்களின் பிள்ளைகளும், மேட்டுக்குடிகளும் இணைந்திருந்தனர். புலிகளின் கரும்புலிகள் இல்லாத காலத்தில் புலிகளின் மேல் மட்டத்தில் சரி கீழ் மட்டதில் தளபதிகளாகவும் இருந்தவர்கள் வசதியான குடும்பங்களில் இருந்து வந்தவர்களே அதிகம். பிரபாகரன் இந்தியப் படையினருடன் யுத்தம் ஆரம்பித்ததும் இந்த மேட்டுக்குடிகளைச் சேர்ந்தவர்களும், வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தப்பியோடி இந்தியாவுக்கும், கொழும்புக்கும் சென்று வெளிநாடுகளுக்கும் சென்றுவிட்டனர். காரணம் அவர்கள் வெளிநாடு செல்லக்கூடிய வசதி படைத்தவர்களாக இருந்தனர்.

(“புலிகளும் வசதியான புலி உறுப்பினர்களும்” தொடர்ந்து வாசிக்க…)

ஹிட்லரை உருவாக்கியவர்களே தேசிய இனப்பிரச்சனையையும் உருவாக்கிய ஆதாரம்!

ஜேர்மனியில் ஹிட்லரும் இத்தாலியின் முசோலீனியும் இந்த உலகின் இரக்கமற்ற சர்வாதிகாரிகளாகக் கருதப்படுகிறார்கள். இந்த இரண்டு சர்வாதிகாரிகள் தோன்றியதன் அரசியல் பின்னணி மட்டும் ஆராயப்படுவதில்லை. பெரும்பாலான சாமானியர்களிடமிருந்து இவையெல்லாம் மறைக்கப்படுகின்றன. இலங்கையில் தேசிய இன ஒடுக்குமுறையும் அதற்கு எதிரான போராட்டங்களும் தோன்றிய வரலாற்றை ஓரளவு அறிந்து வைத்திருக்கிறோம் ஆனால் அது தோன்றியதற்கான ஆழமான அரசியல் பின்னணி இருளுக்குள் புதைக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கும் மக்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தகவல்களையும் அதன் பின்புலத்தையும் அறியும் உரிமை மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

(“ஹிட்லரை உருவாக்கியவர்களே தேசிய இனப்பிரச்சனையையும் உருவாக்கிய ஆதாரம்!” தொடர்ந்து வாசிக்க…)

சீகா வைரஸ்: விஞ்ஞான விபரீதம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

விபரீதங்கள் நிகழ்வதற்கும் நிகழ்த்தப்படுவதற்கும் இடையிலான வேறுபாடு பெரிது. விபரீதங்கள் பெரும்பாலும் எதிர்பாராமால் திடீரென நிகழ்பவை. ஆனால், நிகழ்த்தப்படுகின்ற விபரீதங்கள் அவ்வாறல்ல. அவை மனிதர்களால் தெரிந்து திட்டமிட்டு அரங்கேற்றப்படுபவை. ஆனால், அதற்கும் அறிந்தும் அறியாமல் நிகழ்ந்தது போன்றதொரு தோற்றமயக்கம் உருவாக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட விபரீதங்களும் நிகழ்ந்த விபரீதங்களாக அறிவிக்கப்படுகின்றன. இப்போது உலகின் கவனம் சீகா வைரஸை நோக்கியதாகத் திரும்பியிருக்கிறது. வடகிழக்கு பிரேசிலில் கடந்தாண்டு ஓகஸ்ட் முதல் குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறக்கத் தொடங்கியதன் பின்னணியிலேயே சீகா வைரஸ் அறியப்பட்டது. இக்காலப்பகுதியில் அப்பகுதியில் பிறந்த 4,180 குழந்தைகள் சிறிய தலைகளுடனும் பிற குறைபாடுகளுடன் பிறந்தன. பின்னர் இவ்வைரஸ் பிறக்கும் குழந்தைகளை மட்டுமன்றிப் அனைவரையும் தாக்கக் கூடியது என அறியப்பட்டது. இப்போது உலகளாவிய ரீதியில் 17 இலட்சம் மக்கள் இவ்வைரஸின் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

(“சீகா வைரஸ்: விஞ்ஞான விபரீதம்” தொடர்ந்து வாசிக்க…)

யார் யாரிடமெல்லாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம்!

புலம்பெயர்ந்து வாழும் நம்நாட்டுக் கவிஞர் ஒருவரின் பேட்டியை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு என்று வெளிநாடுகள் கொடுக்கும் உதவிகளை இலங்கை அரசு துஷ்பிரயோகம் செய்துவிடும் என்பதால், உதவிகள் எவையும் வழங்கப்படக் கூடாது என்று சொல்லியிருக்கிறார் அவர்.
அதிர்ச்சியாக இருக்கிறது. புலம்பெயர்ந்த தேசங்களில் வளமான பொருளாதார வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, இங்குள்ளவர்களுக்கு எந்த உதவிகளும் செய்ய வேண்டாம் என்று வெளிநாடுகளுக்குச் சொல்வதில் எந்தக் குற்றவுணர்ச்சியும் கவிஞருக்கு எழவில்லை. இங்குள்ள தமிழர்களுக்காகக் கவலைப்பட்டு, அரசியல்ரீதியாக ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவக் கருத்தைத் தான் சொல்வதாகவே அவர் கருதிக்கொள்கிறார். அவ்வாறு சொல்ல முடியும் என்றும் அவர் நினைக்கிறார்.

(“யார் யாரிடமெல்லாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம்!” தொடர்ந்து வாசிக்க…)

சர்வதேசத்திடம் அடிபணியும் அரசு! மகிந்த ஆதங்கம்!

வீண்வம்பை விலைக்கு வாங்கிவிட்டு புலம்புவதில் பயன் இல்லை. வெற்றிகள் மகிழ்ச்சியை, மனநிம்மதியை தரலாம். ஆனால் நான் என்ற இறுமாப்பில் எவருக்கும் அடிபணியேன் என்ற பிடிவாதம் எதிர்ப்பாளர்களை ஒன்றிணையச் செய்து அவர்களின் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டிவரும். முன்னாள் ஜனாதிபதியின் இன்றைய நிலையும் அதுதான். 2005ல் பதவி ஏற்றபோது, மகிந்த புலிகளுடன் சமரசம் பேசவே விரும்பினார். தன்வெற்றிக்காக புலிகளுடன் பணப்பரிமாற்றம் செய்ததால் தான் அந்த முடிவை அவர் எடுத்தார் என கூறப்படுவது மட்டும் காரணம் அல்ல. உண்மையில் அப்போது புலிகள் மிகவும் பலம் பொருந்தியவர்களாகவும், ராணுவம் சோர்வு நிலையிலும் இருந்ததுமே கள நிலவரமாகும். சகோதரர் கோத்தபாய பாதுகாப்பு செயலாளராக செயல்பட தொடங்கியதும், அவரே சரத் பொன்சேகாவை ராணுவ தளபதியாக நியமிக்கும்படி சிபாரிசு செய்ததும் மகிந்தவுக்கு சற்று தெம்பை கொடுத்தபோதும் அவர் யுத்தத்துக்கு தயாராகவில்லை.

(“சர்வதேசத்திடம் அடிபணியும் அரசு! மகிந்த ஆதங்கம்!” தொடர்ந்து வாசிக்க…)

தென்பகுதி அரசியலில் குழப்பத்தால் சம்பந்தன் ஜாயாவின் கனவு படுதோல்வியில் முடிந்து போகுமா?

2016ஆம் ஆண்டில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் நம்பியிருக்கும் வேளையில், தென்பகுதி அரசியலில் குழப்பங்களும் குத்துக்கரணங்களும் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஜனாதிபதித் தேர்தலின் முடிவு தனக்குத் தோல்வியாக அமைந்தபோது ஆட்சி அதிகாரத்தை கைவிட்டுப் போக மனம் இல்லாதிருந்த மகிந்த ராஜபக்­சவை வீட்டுக்கு அனுப்பி வைத்து ஆட்சிபீடத்தைத் கைப்பற்றுவதில் தற்போதைய அரசு மிகவும் கவனமாக நடந்து கொண்டது. ஆ… ஊ… என்று சத்தம் வைக்காமல் அப்பு! ராசா என்ற அணுகுமுறைக்கூடாக மகிந்தவை வீட்டுக்கு அனுப்பி வைத்து மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார்.

(“தென்பகுதி அரசியலில் குழப்பத்தால் சம்பந்தன் ஜாயாவின் கனவு படுதோல்வியில் முடிந்து போகுமா?” தொடர்ந்து வாசிக்க…)

தாயோடு கல்வி போயிற்று!

உங்களிடம் ஒரு கேள்வி ஒரு குடும்பத்தில் இன்னின்னார்க்கு இன்னின்ன பொறுப்பு என, வகுக்கத்தலைப்பட்ட நம் மூதாதையர்கள், தாய்க்கும், தந்தைக்கும். என்னென்ன பொறுப்புக்களை வகுத்திருக்கிறார்கள் என்று, உங்களுக்குத் தெரியுமா? ஏன் பிரச்சினை நானே சொல்லிவிடுகிறேன்! அவர்கள் வகுத்த முறையின்படி, பிள்ளைகளை உணவு முதலியவற்றால் காக்கும் பொறுப்பு தாய்க்குரியது. அறிவு தந்து காக்கும் பொறுப்பு தந்தைக்குரியது. இதனைத்தான், ‘தந்தையோடு கல்விபோம். தாயோடு அறுசுவை உண்டி போம்’ என்றும், ‘ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ என்றும், நம் தமிழ் இலக்கியங்கள் பேசின. இங்ஙனம் வகுத்தது ஏன் என்கிறீர்களா? சொல்கிறேன்.

(“தாயோடு கல்வி போயிற்று!” தொடர்ந்து வாசிக்க…)