ஈழத்தின் தலைநகர் – சதுர்வேத மங்கலம்- கந்தளாய் குளம்

ஈழத்தின் தலைநகர் என்று சொல்லப்படும் திருகோணமலையில் காணப்படும் மிக பெரிய குளம் கந்தளாய் குளம் .வரலாற்றுடன் பல தகவல்களை தன்னகத்தே கொண்டு தற்போது பெயர் திரிபுகள் பலவற்றை சந்தித்து வரும் பகுதி.கண்டிப்பாக ஈழத்தமிழர்கள் கந்தளாய் குளத்தை பற்றியும் அதன் பெருமையையும் தெரிந்து வைத்து இருப்பதுடன் அடுத்த சந்ததிக்கும் வாய்வழியாகவும் எழுத்து வடிவிலும் கொண்ட சேர்க்க வேண்டியது கடமையாகும்.

‘தை பிறக்கட்டும்’

கதிரவன் துயில்கொள்ள ஆரம்பிக்க, குருவிகளும் கூடுகள் சேர்க்கின்றன. மனை இருள் சூழ்கிறது. நாடியில் கையை ஊண்டி பிடித்தவளாக வீட்டின் முன்வாசலில் அமர்ந்திருக்கின்றாள் பார்வதி. பக்கத்துவீட்டில் பிள்ளைகளின் ஆராவரா ஒலிகளும், வீதிகளில் உடை, மரக்கறி வியாபாரிகளின் நடமாட்டமும், குருத்துவெட்டுவதும், கரும்பு தேடித்திரிவதுமாக சனங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இச்சத்தங்கள் எதுவுமே பார்வதியின் செவிகளுக்கு கேட்கவில்லை. அவளின் ஆறுவயது மகளும் மண்ணில் உருவங்கள் செய்து விளையாடிக்கொண்டிருக்கின்றாள். அம்மா! அம்மா! என்று பிள்ளை கூச்சலிடும் சத்தமும் அவளின் காதுகளுக்கு எட்டவில்லை.  

கேட்டிருப்பாய் காற்றே…

(தென்னவன் வெற்றிச்செல்வன்)

மரபான உணவுப் பயிரான நெல் உற்பத்தியிலிருந்து காலனியத்துக்குக் கொள்ளை லாபம் தரும் பணப்பயிர் உற்பத்திக்கு மாறியதால், உலகெங்கும் உழைப்பு சக்தி தேவை உருவாக்கப்பட்டது. ரப்பர் தோட்டம், தேயிலைத் தோட்டம், காபித் தோட்டம், கரும்புத் தோட்டம் போன்றவற்றுக்கு மட்டுமல்லாமல், சுரங்கத் தொழில், இருப்புப் பாதை அமைத்தல், காட்டை அழித்து வசிப்பிடமாக்குதல் என்று 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய காலனிய காலத்தில் தமிழர்கள் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுப் புலம்பெயர்ந்தனர்.

மாதவிடாய்

(தாரைப்பிதா)

சமீபத்தில் Star (ஸ்டார்) என்ற மலையாள திரைப்படம் பார்த்தேன். குறிப்பிட்ட வயதில் மாதவிடாய் (மெனோபாஸ்) முற்றுப்பெறும் ஒரு பெண்ணுக்கு அந்த கட்டத்தில் ஏற்படும் மனக்குழப்பங்கள் அவரது வீட்டாரால் எப்படி தவறாக பார்க்கப்படுகிறது என்பதே படத்தின் மையக்கரு.

பட்டை இறைப்பு…! பழமையே நமது முதுசம்…!!

(ஆசி கந்தராஜாவின் டயறிக் குறிப்பு)

யாழ்ப்பாணத்தில், 1960ம் ஆண்டுகள் வரை தோட்டத்தில் பட்டை இறைப்பு.

பல தோட்டங்களுக்கு நடுவில், ஒரு பொதுவான கிணறு இருக்கும். பட்டை இறைப்புக்கு நேரமெடுக்குமாதலால் இரவுபகலாக முறைவைத்து இறைப்பார்கள். விவசாயியான எனது பெரிஐயாவின் தண்ணி இறைப்புக்கு துலா மிரிப்பது கட்டையர். ஆழக் கிணறென்றால் இரண்டு பேர் துலா மிரிப்பதுமுண்டு. துலாமிரிப்பது இலேசுப்பட்டதில்லை. ஒரே சீராக மேலும் கீழும் ஏறி இறங்குமாறு, முன்னும் பின்னுமாகத் துலாவில் நடந்து வரவேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை. இரவு இறைப்பின்போது அலுப்பிலும், நித்திரையிலும் துலாவால் தவறி விழுந்து முடமானவர்களும் இறந்தவர்களும் பலர். ஆனால் கட்டையர் துலாமிரிப்பில் விண்ணன் என்று பெயரெடுத்தவர். அவர் நன்கு பாடுவார். சதிலீலாவதி படப் பாடல் தொடக்கம், காத்தவராயன் கூத்துப் பாடல்வரை ராகம் தாளம் தப்பாமல் பாடுவதில் அவரை யாரும் வெல்ல ஏலாது. இரவு நேர இறைப்பில் துலா மிதிக்கும்போது நித்திரையிலே கீழே விழுந்துவிடாமல் இருக்க, கட்டையர் காத்தவராயன் கூத்துப் பாடல்களை குரலெடுத்துப்பாடுவார். அவரின் பாட்டு, இறைக்கும் மூவரையும் விழிப்பாக வைத்துக் கொள்ளும்.

மகாவா மறைந்தது; சோகத்தில் கம்போடியா

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ‘மகாவா “ என அழைக்கப்படும் எலியானது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலின சமத்துவத்தைப் பேசுகிறதா கேரள மாணவர்களின் சீருடை திட்டம்?- கல்வியாளர்கள் சொல்வது என்ன?

மாணவ, மாணவியரிடம் பாலியல் சமத்துவத்தை உணர்த்தும் வகையில் மேல்நிலைப் பள்ளிகளில் ஒரே மாதிரியான பேண்ட், சர்ட் சீருடை அணியும் திட்டத்தைக் கேரள அரசு கொண்டுவந்துள்ளது.

அச்சம் என்பது மடமை என்று உணர்த்திய பறவை!

ஒவ்வொரு உயிரினமும் இவ்வுலகில் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள தகவமைப்பைக் கொண்டிருப்பது இயற்கைதான். அதன் மூலம் உணவு தேடிக்கொள்ளவும் பிறிதொன்றுக்கு இரையாகாமல் காப்பாற்றிக்கொள்ளவும் முயல்கிறது. தகவமைப்புகளே அவ்வுயிரினம் உலகில் நிலைபெற்றிருக்கக் காரணமாக இருக்கின்றன. பறவைகளை அவதானித்துக் கொண்டிருந்த ஒரு பொழுதில் அப்படிச் சிறப்பான தகவமைப்பைப் பெற்ற இரண்டு வலசைப் பறவைகளைச் சாதாரண உள்ளூர் காகம் லாகவமாக எதிர்கொண்ட ஒரு நிகழ்வு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.

ஓமைக்ரான்

வைரஸ்களின் பரிணாம சுழற்சியில் உருமாற்றங்கள் உருவாவது இயற்கையானது. எனவே புதிதாக உருவாகியுள்ள இந்த ஓமைக்ரான் உருமாற்றத்திற்கு பீதி தேவையில்லை. அதில் பல மனித இனத்திற்கு பாதகமின்றியும் சாதகமாகவும் சில நமக்கு பாதகமுண்டாகும் வகையில் இருக்கும். இதுவும் இயற்கையானது.

உணவு விழிப்புணர்வு: மைதாவும் நாமும்

(Dr.A.B.ஃபரூக் அப்துல்லா)

இந்த மைதா மாவின் ஆரம்பம் தான் என்ன??

இரண்டாம் உலகப் போர் காலத்தில், ஐரோப்பாவில் ஏற்பட்ட பஞ்சத்தை சமாளிக்கவும், ராணுவ வீரர்களுக்கு உணவளிக்கவும் கண்டுபிடிக்கப்பட்டது தான் மைதா மாவு.