நயன்தாராவை அவமானப்படுத்துபவரும், அதைக் கைதட்டி ரசிப்பவர்களும் சினிமாவுக்கே அவமானச் சின்னங்கள்: குஷ்பு

நயன்தாராவை அவமானப்படுத்துபவரும், அதைக் கைதட்டி ரசிப்பவர்களும் சினிமாவுக்கே அவமானச் சின்னங்கள் என குஷ்பு தெரிவித்துள்ளார். ‘கொலையுதிர் காலம்’ பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.

என்னங்க இது பெரிய அநியாயமா இருக்கு !!??

நம்மூர்ல ஒரு பேப்பர்காரனும்
இந்த நியூஸைப் போட்டாமாதிரித் தெரில.

இங்க்லிஷ் பேப்பர்லகீப்பர்ல போட்ருக்காங்களான்னும் தெரில.
அப்டியே போட்ருந்தாலும் அறிவுஜீவிங்க
என்னமாதிரி கைநாட்டுங்களுக்கு
எடுத்துச்சொல்ல மாட்டேன்றாங்க.

டில்லியில் நேற்று

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் முடிந்த பிற்பாடு ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

” நாட்டில் உள்ள 20 சதவீதம் ஏழை குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க விரும்புகிறோம். ஐந்து கோடி குடும்பங்கள், 25 கோடி மக்கள்
நேரடியாக எங்கள் திட்டத்தின் கீழ்
பயன்பெறப் போகிறார்கள்…”

செய்தியாளர்கள் விளங்காமல் –
ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

நாங்கள் மாத்திரமல்ல புலிகளும் இலங்கை அரசிற்கு காட்டிக்- கொடுத்தவர்கள்தான். சிறிகாந்தா குற்ற ஒப்புதல் வாக்குமூலம்.

புலிகளின் தலைவர் பிரபாகரனால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ் மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா அவர்களின் நினைவாக அமையப்பெற்றுள்ள விளையாட்டரங்கின் பெயரினை மாற்றுவதற்கான பிரேரணை ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ யாழ் மா நாகர சபையில் கொண்டு வந்துள்ளது.

பாஜக உயர்மட்ட தலைவர்களுக்கு ரூ.1,800 கோடி வழங்கியதாக எடியூரப்பா மீது காங்கிரஸ் பரபரப்பு புகார்: மறுக்கும் கர்நாடக முன்னாள் முதல்வர்

பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களுக்கு கர்நாடக மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா ரூ.1800 கோடி வழங்கியதாக ஒரு பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் புதிய தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது; இலங்கையும் இணை அனுசரணை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், 40/1 என்ற புதிய தீர்மானம், இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையும், வாக்கெடுப்பின்றி, நேற்றைய தினம் (21) நிறைவேற்றப்பட்டது.

SLFP-SLPP ஆகியவற்றுக்கிடையில் தீர்மானமிக்க கலந்துரையாடல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையிலான, 2 ஆம் கட்ட கலந்துரையாடல் இன்று (21) இடம்பெறவுள்ளது. இக் கலந்துரையாடல் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. இருதரப்பும் இணைந்து அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள புதிய கூட்டமைப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. குறித்த இரு கட்சிகளுக்கிடையிலான முதற்கட்ட கலந்துரையாடல் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்றது. நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது. அத்துடன், இக் கலந்துரையாடல் தீர்மானமிக்க ஒன்றாக அமையுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

30வது நினைவுதினம்…..

19.03.1989 அன்று சம்பூரில் தோழர் மதன்லால் தலைமையில் பயணம் செய்து கொண்டிருந்த வாகனத்தின் மீது அரசபடைகளின் ஒத்துழைப்புடன் பதுமன் தலைமையிலான புலிகள் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலில் 6 தோழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

1- தோழர் மதன்லால் (வெங்கடசாமி நாயுடு-திருகோணமலை), 2-தோழர் கண்ணன் (வித்தியானந்தன்-கட்டைப்பறிச்சான்),
3- தோழர் ராகவன் (இமானுதின்-கிண்ணியா), 4-தோழர் அருச்சுணன் (ஜெயப்பிரகாஸ்-திருகோணமலை), 5.தோழர் மனோ (நாகேந்திரன்-மூதூர்),
6- தோழர் வினோத் (வினோத்-மணல்சேனை) ஆகியோர் படுகொலைசெய்யப்பட்டனர்.அனைவருக்கும் எமது புரட்சிகர அஞ்சலிகள்.

34வது நினைவுதினம்……

தோழர் குமார் என எம்மால் அழைக்கப்பட்ட யாழப்பாணம் குருநகரை சேர்ந்த போல்டன் உதயகுமார் எம்மை விட்டுப்பிரிந்து 34 வருடங்கள் கடந்திருக்கிறது. இன்று அவர் தமிழ் மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் தன் உயிரை அர்ப்பணித்த தினமாகும்.
ஈபிஆர்எல்எவ் இன் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான தோழர் குமார் ஈபிஆர்எல்எவ் இன் இராணுவப்பிரிவான மக்கள் விடுதலைப் படையில் முக்கியத்துவம் மிக்க ஒருவராய் காத்திரமான பங்களிப்பை வழங்கியதுடன் ஈபிஆர்எல்எவ் இன் பிரச்சாரம் மற்றும் அரசியல் வேலைத்திட்டங்களிலும் மக்கள் நலன் சார்ந்த இதர பணிகளிலும் அதிகம் பங்கெடுத்துக்கொண்ட ஒருவராக விளங்கினார்.சிங்கள மொழியை சரளமாக பேசவும் எழுதவும் கூடியவராக விளங்கினார்.
சமூக அடிப்படையில், வர்க்க ரீதியில், இன ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை போக்குவதற்காகவும், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்காகவும் அர்ப்பண உணர்வோடு உழைத்தவர். உள உரமும், வேகமாகச் செயற்படும் திறனும் கொண்ட தோழர் குமார் ஈபிஆர்எல்எவ் ஐ பலம் மிக்கதொரு ஸ்தாபனமாகக் கட்டியமைத்ததிலும், அதன் வளர்ச்சிக்கும் அளப்பரிய பங்காற்றியவர்.
1985 பங்குனி 18ம் திகதி யாழ் பிரதான வீதிக்கு சமீபமாக குருநகர் பிரதேசத்தில் இராணுவத்தினர் மறைந்திருந்து நடாத்திய தாக்குதலில் தோழர் குமார் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது மரியாதைக்குரிய அணித்தலைவரும், அன்புக்குரிய தோழனுமான தோழர் றொபேட் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.
தோழர் குமார் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் குறுகிய காலமே பங்கெடுத்துக்கொண்ட போதும் நிறைவாகவும், நேர்த்தியாகவும், உறுதியோடும், கட்டுக்கோப்புடனும் பணிபுரிந்தார். ஈபிஆர்எல்எவ் இன் அத்தனை அரசியல் இராணுவ நடவடிக்கைகளிலும் பங்கெடுத்துக்கொண்டார்.
அவரது பங்களிப்புக்களுக்காக தோழர்களாலும், நண்பர்களாலும், அவரை அறிந்த அனைவராலும் அவர் என்றென்றும் நினைவு கூரப்படுவார். எம் மனதில் சிம்மாசனமிட்டிருக்கும் அவருக்கு எம் புரட்சிகர அஞ்சலிகள்.