ஜெயலலிதா & கலைஞர்

ஜெயலலிதா செய்திருக்கும் ஊழலைப் பார்த்தால் தோண்டி எடுத்து தண்டனை கொடுத்தாலும் தகும் போல! 3 லட்சம் கோடி என்பது தமிழகத்தின் தற்போதைய கடன் சுமையில் முக்கால்வாசி. இது வருமான இழப்பு எல்லாம் அல்ல. பச்சைத் திருட்டு. பச்சை ஊழல். இந்திய வைர வியாபரத்தையே ஆட்டிப்பார்த்திருக்கும் ஊழல். ஆனால் கவலைப்படாதீர்கள். கண்டெய்னர் விவகாரம் போல இதுவும் இரண்டொரு தினங்களில் காணாமல் போகும். அல்லது, “தள்ளாத வயதில் ஜெயலலிதா ஓடி ஆடி சிறுகச் சிறுகச் சேர்த்த 3 லட்சம் கோடியை திருடிய மன்னார்குடி மாஃபியா,” என செய்தி போடுவார்கள். அதைப் பார்த்தால் ஜெயலலிதா எனும் வெள்ளை நிற, உயர்ஜாதிப் பெண்மணியின் மேல் உங்களுக்குப் பரிதாபம்தான் வரும். ஆனால் உண்மையில் யார் தெரியுமா பரிதாபத்துக்கு உரியவர்கள்?நீங்கள்தான்!!

யார் இந்த ஜெகன்? பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது?


பிரபாகரனின் நிலக்கீழ் மாளிகைக் கட்டுமானப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட தொழிலாளர்களான சிறைக்கைதிகளுக்கும், போராளிகளுக்கும் என்ன நடந்தது? அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள்? உடலங்கள் எவ்வாறு அழிக்கப்பட்டன என்பவை யாவும் தெரிந்த ஒரே ஒரு நபர்ரும் இவை அனைத்துக்கும் உடந்தையாகவிருந்த குற்றவாளியுமே ஜெகன் எனப்படுகின்ற அருணாச்சலம் ஜெகதீஸ்வரன்.

தளபதி பதுமனின் மேல்வீடு சிதைந்தது.

திருமலை மாவட்ட இராணுவத் தளபதியாக இருந்தவர் கேணல் பதுமன். சிவசுப்ரமணியம் வரதநாதன் என்ற இயற்பெயர் கொண்ட பதுமன் இறுதி யுத்தத்தின்போது படையினரிடம் சரணடைந்து பின்னர் அவரின் முன்னாள் சகாவான கருணா எனப்படுகன்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் தலையீட்டில் விடுதலையாகியிருந்தார்.

மனித உரிமைகள் பேரவையில் புலிகளுக்கும் கால அவகாசம் வழங்கப்படுகின்றதா?

(பீமன்)
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 40 வது அமர்வு ஜெனிவாவில் கடந்த மாதம் 25ம் திகதி ஆரம்பமாகி 22 ம் திகதி முடிவுக்கு வருகின்றது. நாளை 20ம் திகதி இலங்கை விவகாரம் தொடர்பாக பேசப்படும் என்றும் பொறுப்புக் கூறலுக்காக இலங்கைக்கு மேலும் இரு வருட கால அவகாசம் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கின் அரசியல் தலைமைத்துவம்: விக்னேஸ்வரன் வீசிய வலை

(இலட்சுமணன்)

இலங்கை விவகாரத்தை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜரொன்றில் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகள் கையொப்பமிட்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) சமர்ப்பித்திருக்கின்றன.

கூட்டுப் பாலியல் வன்புணர்வில் யார் குற்றவாளி..?

ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்னும் கற்பிதத்தை, ஒரு குழந்தை பிறந்ததுமுதலே அதன் மனதில் விதைத்து பாலினச் சமத்துவத்தை அறவே ஒழித்து குழந்தையை வளர்த்தெடுக்கின்ற ஆணாதிக்கத்திலும் பெண்ணடிமைத்தனத்திலும் ஊறிக் கிடக்கும் பெற்றோர்கள் அவர்தம் குடும்பங்கள். இந்தக் கற்பிதத்தைச் சிறிதும் மாற்றமின்றி அல்லது இன்னும் கூடுதலாகப் பின்பற்றுகின்ற குடும்பங்களின் தெரு, ஊர், சுற்றுப்புறம்.

நிர்வாணம் அவமானம் அல்ல!

நம் சமூகத்தில் நிகழும் பாலியல் வன்முறைகள் எல்லாவற்றுக்கும் நாம் எல்லோரும் கூட்டுப் பொறுப்பாளிகள்தாம். நம் வீடுகளையே எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு பாலியல் வன்முறைச் செய்திகளின் பின்னரும் நம் அறிவுரைகளும் வகுப்பெடுப்பும் பெண் பிள்ளைகளை நோக்கியதாகத்தான் இருக்கும்.

தேசிய அரசியலை மீண்டும் தமிழ்நாடு தீர்மானிக்கும்

(எம். காசிநாதன்)
கோடை வெப்பம், கொழுந்து விட்டுத் தாக்கத் தொடங்கி இருக்கின்ற நிலையில், பரபரப்பான பேச்சுவார்த்தைகள், விறுவிறுப்பான பேட்டிகள் என்று, கடந்த சில வாரங்களாகச் சூடாகிக் கொண்டிருந்தது தமிழகத் தேர்தல் களம். இப்போது, தொகுதிப் பங்கீடுகள் முடிந்து, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது அந்தக் களம். திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் மட்டுமே, கூட்டணி அமைக்கும் பலமுள்ள கட்சிகள் என்பது, மீண்டுமொருமுறை ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாத சூழ்நிலையிலும் பறை சாற்றப்பட்டுள்ளது.

சிலாவத்துறை: காணி மீட்பு போராட்டம்

(மொஹமட் பாதுஷா)
மனித இனத்தின் வரலாறு நெடுகிலும், காணிமீட்புப் போராட்டங்களும் நிலத்தைக் கைப்பற்றும் யுத்தங்களும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. ஒரு மனிதனின் வாழ்வியல் இருப்புக்கான அடிப்படை மூலாதாரமாக, நிலம் இருக்கின்ற நிலையில், உலக சனத்தொகையில் கணிசமான மக்கள், தமக்குச் சொந்தமான காணியொன்றைக் கொண்டிராதவர்களாக இருக்கின்றனர்.

முட்டிக் கொள்ளும் தமிழ்க் கட்சிகள்

(கே. சஞ்சயன்)
இலங்கையைப் பொறுத்தவரையில், இந்த வாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், தீர்க்கமான ஒரு வாரமாக இருக்கப் போகிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை, புதன்கிழமை (20) பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், இலங்கை தொடர்பான புதிய தீர்மானமும் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். ஏற்கெனவே இந்தத் தீர்மான வரைவு, பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.