யாழ் மாநகர சபை உறுப்பினர் சுபத்திரன் (தோழர் றொபேட்) அவர்களின் 14 ஆவது நினைவு தினம்

யாழ் மாநகர சபை உறுப்பினர் அமரர் த. சுபத்திரன் (தோழர் றொபேட்) அவர்களின் 14 ஆவது நினைவு தினம் (14.06.2003) இன்றாகும். தமிழ் மக்களது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டதில் தனது 24 ஆவது வயதில் இணைந்து கொண்ட சுபத்திரன் 46 வயதில் இறக்கும் வரை அதே குறிக்கோளுடன் உழைத்தவர்.
இன்றைக்கு, இளம் வயதில் தனது சமூகத்தைப்பற்றி தன்னை சூழவுள்ள மனிதர்களின் அவலங்கள் பற்றி பொது விவகாரங்கள் பற்றி ஆழ்ந்தாராய்ந்து சிந்திக்கின்ற இளம் சந்ததியை பெற்றிருக்கின்றோமா? எமது இளைஞர் யுவதிகளின் சமூக ஈடுபாடு குன்றிப்போனதற்கான, திசைவிலகலுக்கான காரணங்கள் என்ன? என்பன நாம் விடை தேடவேண்டிய வினாக்களாகும்.
(“யாழ் மாநகர சபை உறுப்பினர் சுபத்திரன் (தோழர் றொபேட்) அவர்களின் 14 ஆவது நினைவு தினம்” தொடர்ந்து வாசிக்க…)

நல்லாட்சியில் நிர்க்கதி, ஐ. தே. க – மு. கா கூட்டு சதி, சம்பந்தன் அமைதி, இது கிழக்கு பட்டதாரிகளின் விதி!

(விருட்சமுனி)

தேசிய இன பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் பின்னடைவு அடைகின்றபோது, சிறுபான்மை இனங்கள் அவர்களுடைய அபிலாஷைகள் பாதிக்கப்படுவதாக உணர்கின்றபோது, வேலை வாய்ப்பை பெறுவதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றபோது நாட்டில் அரசியல் ஸ்திர தன்மை பாதிப்படைகின்றது என்றும் இச்சூழ்நிலை கரு கொள்கின்றபோது கால ஓட்டத்தில் அரசியல் மாற்றத்துக்கான வாய்ப்புகள் உருவாகின்றன என்றும் அரசியல் அவதானிகள் எடுத்து சொல்கின்றார்கள். இவை போன்ற விடயங்களே மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தன. அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் ஆயுளையும் இவை போன்ற விடயங்களே தீர்மானிக்க கூடியவையாக உள்ளன. ஆனால் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் அதன் கண்களுக்கு முன்னால் நடமாடுகின்ற உதாரணமாக மஹிந்த ராஜபக்ஸவை கண்டு வருகின்றபோதிலும் இவை போன்ற விடயங்களை கவனத்தில் எடுத்து செயற்படுவதாக தெரியவில்லை.
(“நல்லாட்சியில் நிர்க்கதி, ஐ. தே. க – மு. கா கூட்டு சதி, சம்பந்தன் அமைதி, இது கிழக்கு பட்டதாரிகளின் விதி!” தொடர்ந்து வாசிக்க…)

காவி அணிந்த பிக்குகள் அரசியல் செய்வதும் வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் அபத்தம்!

 

(ரி. தர்மேந்திரன்)

பண்டைய யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சி செய்த சிங்கை ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தில் வந்த முடிக்கு உரிய அரசர் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா நாடு கடந்து நெதர்லாந்தில் வசித்து வருகின்றார். இவர் யாழ்ப்பாண ஆரிய சக்கரவர்த்திகளின் வாரிசு என்பதை உறுதிப்படுத்தித்தான் நெதர்லாந்து அரசாங்கம் இவருக்கு புகலிடம், பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கி உள்ளது. அத்துடன் நாடுகளின் தலைவர்கள், உலகில் உள்ள அரச பரம்பரையினர், சர்வதேச சமூக பிரதிநிதிகள் இவரை ஏற்று அங்கீகரித்து உள்ளனர். மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இருந்த முன்னைய அரசாங்கம் இவரை நாட்டுக்கு திருப்பி வரவழைப்பதற்கு பகீரத முயற்சிகள் மேற்கொண்டு இருந்தது. இப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் மிக நெருக்கமான நண்பரும், சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சருமான வைத்திய கலாநிதி ராஜித சேனாரட்ண அப்போதைய அரசாங்கத்தில் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சராக இருந்தபோது ராஜா ரெமிஜியஸ் கனகராஜாவை சந்தித்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(“காவி அணிந்த பிக்குகள் அரசியல் செய்வதும் வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் அபத்தம்!” தொடர்ந்து வாசிக்க…)

இந்தியாவில் முதன்முறையாக இலங்கை மலையகத் தமிழர் ஒருவர், I.A.S தேர்வில் சித்தி

இந்தியாவில் முதன்முறையாக இலங்கை மலையகத் தமிழர் ஒருவர், I.A.S தேர்வில் சித்திபெற்று தற்போது கோழிக்கோடு ( calicut) மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள படகரா கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பசேகர் காளிமுத்து. இவரின் முன்னோர், கடந்த 1823 ம் ஆண்டு இலங்கைக்குக் குடி பெயர்ந்தனர். ஆங்கிலேயர்கள், இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் வேலைக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோரை அழைத்துச் சென்றனர். அதில் இன்பசேகர் காளிமுத்துவின் முன்னோர்களும் அடங்கியிருந்தனர்.

(“இந்தியாவில் முதன்முறையாக இலங்கை மலையகத் தமிழர் ஒருவர், I.A.S தேர்வில் சித்தி” தொடர்ந்து வாசிக்க…)

27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது

தோழர் கதிர், சுந்தர், சிவா, கொட்வின் என்று பல தோழர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு ஒரு பலமான விடுதலை அமைப்பாக கிளநெச்சிப் பிராந்தியத்தில் போராட முற்பட்டதே பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ். பல்கலைக் கழக மாணவன் விஜிதரன் காணாமல் ஆக்கப்பட்ட செயற்பாட்டிற்கு நீதி கேட்டுப் போராடிய யாழ்பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம் வெகுஜனப் போராட்டமாக யாழ் குடாநாட்டிற்குள் உருவெடுத்து குடாநாடு தாண்டி கிளிநொச்சிக்கு விஷ்தரிக்கப்படும் அளவிற்கு கிளிநொச்சி மக்கள் மதியில் அரசியல் வேலைகளை முன்னெடுத்ததில் கிளிநொச்சித் தோழர்களின் பங்களிப்பு அளப்பரியது. மக்களின் வெகுஜன எழுச்சியை புகைப்படம் எடுத்து மிரட்ட முற்பட்ட மாற்று இயக்க உளவுப்படையை மக்கள் நையப் புடைத்து  புகைப்படக் கருவியை பறிமுதல் செய்த வரலாற்றை எற்படுத்தும் மக்கள் எழுச்சியை எற்படுத்தியவர்கள் பலர் எம்மிடையே உருவான பாசிசவாதிகளால் கொல்லப்பட்டுவிட்டனர் . மக்கள் விடுதலைப் படையின் பரந்தன் இராணுவ முகாம் தாக்குதலை வெற்’றிகரமாக நடைமுறைப்படுத்த முனைந்ததில் கிளநொச்சி பிராந்திய தோழர்கள் பல அர்பணிப்புக்களை செய்தே இருந்தனர்இ புலிகள் குடாநாட்டிற்குள் குண்டுச்சட்டிக்குதிரையை ஓட்டியபோது குடாநாட்டிற்கு வெளியே விடுதலை அமைப்பின் செற்பாடுகளை விஸ்தரிப்பதில் இந்த தோழர்கள் பல தியாகங்களை செய்தனர்

27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சுந்தர் என்ற அமலன் சுகந்தன் என்ற யூலியற் இருவரும் EPRLF இயக்கத்தின் போராளிகள். சுந்தர் என்பவர் தனது இயக்கத்தின் முன்னனிப்போராளியாகவும் பல அசாத்தியமான செயல்களையும் செய்தவர். புலிகளினால் முல்லைத்தீவில் வைத்து கால்கள் அடித்து முறிக்கப்பட்டு கொல்லப்பட்டவர். நேசித்தது மக்களின் நலன்களையும் விடுதலையையும் மட்டுமே. தான் பிறந்த ஊருக்கு நிறைய நற்செயல்கள் நடக்க காரணமானவர். ஒட்டுமொத்த தமிழர்களின் சுதந்திரத்தையும் உரிமையையும் குத்தககைக்கு எடுத்தவர்களால் கொலை செய்யப்பட்டார். புலிகள் தங்களுடன் இணைத்து வேலை செய்ய பேரமும் பேசினார்கள். அவர்களுக்கு உடன்படுவது போல் போக்கு காட்டி தப்பி ஓடியவர். இருந்தும் மீண்டும் புலிகளினால் கொலை செய்யப்பட்டார்.

(“27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது” தொடர்ந்து வாசிக்க…)

உரும்பிராய் தியாகி சிவகுமாரன்

(ஒரு நண்பரின் பதிவு ஒன்று உரும்பிராய் தியாகி சிவகுமாரன் அவர்கள் பற்றிய 2013 இல் நான் இட்ட பதிவு ஒன்றை மீண்டும் பதிவிடுகிறேன்)

தியாகி சிவகுமாரன் , வீரன் சிவகுமாரன், உரும்பிராய் சிவகுமாரன் பொன் சிவகுமாரன் என பலராலும் விழிக்கப்பட்ட சிவகுமாரன் அவர்கள் ஒரு தற்கொலை போராளியல்ல. ஒரு மகத்தான உன்னதமான போராளி. வெறுமனே தமிழ் உணர்ச்சியிலும் தமிழ் தேசிய உணர்வலையிலும் போராட கிளம்பிய ஆரம்பகால போராளிகள் மத்தியில் சமூக உணர்வும் தமிழ் சமூகத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் என்ற தெளிவிலும் போராட கிளம்பியவர் சிவகுமாரன் அவர்கள். அவரோடு சேர்த்து அவரது சகாக்கள் நால்வர். இவர்கள் அடங்கியதுதான் இவரது இயக்கம். இவர்கள் எல்லோருக்குள்ளும் தான் ஒருவரே சயனைட் குப்பியை கொண்டுதிரிந்தார். அப்பொழுது அவர் பொலிஸ் அத்தியேட்சகர் சந்திரசேகராவுக்கும் அப்போதைய தொலை தொடர்பு அமைச்சர் தியாகராஜா என நினைக்கிறேன் இருவருக்கும் குண்டுவைத்து கொலைசெய்ய முயற்சித்தார் என்ற காரணத்தால் இலங்கை பொலிசாரினால் தேடப்பட்டு வந்தார். இதன் காரணமாக தன்னை போலீசார் பிடித்தால் சித்திரவதை செய்து கொல்வார்கள் என்ற நோக்கத்தால் சயனைட்குப்பியை தான் மட்டும் தனது சகாக்களுக்கு கொடுக்காமல் கொண்டு திரிந்தார். சகாக்கள் பிடிபட்டால் எல்லாவற்றுக்கும் காரணம் சிவகுமாரன் தான் என சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவைத்திருந்தார். ஆனால் போராடக்கிளம்பிய ஆரம்பங்களிலேயே அவர் கோப்பாய் வங்கி கொள்ளை முயற்சியில் பொலிசாரால் பிடிபடும்போது சயனைட் உட்கொண்டு வைத்தியசாலையில் மரணித்தார்.

(“உரும்பிராய் தியாகி சிவகுமாரன்” தொடர்ந்து வாசிக்க…)

27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது

ஈழவிடுதலைப் போராட்டத்தின் மூலவர்கள் என்றால் அதில் நிச்சயமாக தோழர் ஐயாவிற்கும் தனி இடம் உண்டு. வாழ்நிலை கம்யூனிஸ்ட் என்று எம்மால் உணரப்படும் அளவிற்கு அடிமட்ட மக்களின் வேலைத்திட்டங்களில் தன்னை எப்போதும் இணைத்தவர் வன்னியின் காடு மேடு எல்லாம் இவருக்கு அத்துப்படி வாழ்வை இவர் அளவிற்கு ரசிப்பவர் வேறுயாராகவும் இருக்க முடியாது என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் அதனால்தான் மக்களின் விடுதலைக்காக ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலேயே கல்யாணத்தின் பின்பும் முழுநேர போராளியாக தன்னை இணைத்துக் கொண்டவர். இவரால் உருவாக்கப்பட்ட போராளிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைவராக மக்களால் இனம்காணும் வகையில் அவர்களை முன்னிலைப்படுத்தி பின்நின்று வழிநடத்தியவர் மத்திய குழு உறுப்பினர் நடேசலிங்கம் அரசியல் செயற்பாடாளர் கனகலிங்கத்தின் மரணத்தின் பின்பு வன்னியை தனித்து தாங்கப் புறப்பட்டு றேகன் என்ற சர்வதேச பாசறை போராளியை இனம்காட்டியவர். மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னியல் குடியேறிய மலையக மக்கள் மத்தியிலிருந்து வந்து தோழர்கள் விடுதலைக்காக செய்த அர்பணிப்கபுக்ள் அளப்பரியவை கூடவே முஸ்லீம்மக்கள் மத்தியிலும் அதிகளவு போராளிகளை உள்வாங்கிய செயற்பாடுகள் வவுனியா மாவட்டத்திலும் அதிகம் நடைபெற்றது. 1986 களில் சிறீலங்கா இராணுவத்துடனான சமரில் முதல்களப் பலி கண்ட வன்னி மகள் பானு. கருவிகளை உருவாக்கும் பட்டறையில் கருவிகளைச் செதுக்கிய சிற்பி தாஸ் இப்படி பலரையும் குறிப்பிடலாம் வன்னியிற்கான பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கும் அளவிற்கு மக்கள் செல்வாக்கை பெற வவுனியாதோழர்களின் அர்பணிப்புகள் காரணமாக இருந்தன. இணைந்த மாகாண சபை ஆடசிக்காலத்தில் வவுனியாவில் முகுந்தன் ஐயா வெற்றி என பல ஆளுமைகள் ஒருகிணைந்து இங்கு செயற்பட்டார்கள் இவர்களுடன் தோழர் பிரதாப் ஆட்சி அதிகாரத்தை நிறுவுவதற்காக அரச நிர்வாகத்தில் திறம்பட செயற்பட்டார்.

தனிமனித பலவீனங்களில் இருந்து விடுபட முடியாத உமக்கு தலைவர் பதவி எதற்கு?

தனிமனித பலவீனங்களில் இருந்து விடுபட முடியாவிட்டால் தலைவர் பதவியில் இருந்து விலகுங்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுத்து உள்ளார் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினராகவும், முஸ்லிம் சமாதான செயலகத்தின் மட்டக்களப்பு பிராந்திய பணிப்பாளராகவும், இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் உயர் மட்ட குழு அங்கத்தவராகவும் பதவிகள் வகித்த எஸ். எம். இஸ்ஸடீன்.

(“தனிமனித பலவீனங்களில் இருந்து விடுபட முடியாத உமக்கு தலைவர் பதவி எதற்கு?” தொடர்ந்து வாசிக்க…)