தமிழர்கள் ஆப்பிரிக்க இனம்!

ஆதாரம்: தைப் பொங்கல்!

வருடந்தோறும் தமிழர்களால் கொண்டாடப் படும் தைப் பொங்கலும், மாட்டுப் பொங்கலும், அவர்கள் ஆப்பிரிக்க இனம் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களாக உள்ளன.

இன்றைய சூடான், எகிப்திய பகுதிகளில் வாழ்ந்த பண்டைய ஆப்பிரிக்கர்கள் எருது மாட்டையும், சூரியனையும் கடவுளாக வழிபட்டனர். எருது மாட்டின் கொம்புகளுக்கு இடையில் சூரிய வட்டம் பொறிக்கப் பட்ட தெய்வச் சிலைகள், இன்றைக்கும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப் படுகின்றன.

பிற்காலத்தில் தோன்றிய எகிப்திய நாகரிகத்தில், அது ஹாதொர் என்ற தெய்வமாக வழிபடப் பட்டது. எருது மாட்டை தெய்வமாக வழிபடும் மதம் மேற்கே கிரேக்கம் வரையில் பரவியிருந்தது. கிரீஸ் நாட்டின் பகுதியான கிரேட்டா தீவில் அதற்கான ஆதாரங்கள் உள்ளன.

அரேபிய தீபகற்பத்திலும் எருது மாட்டை வழிபடும் மதம் பரவி இருந்தது. இஸ்லாத்திற்கு முந்திய காலகட்டத்தில், இன்றைய பாஹ்ரைன் நகரில் பிரமாண்டமான கோயில் ஒன்று இருந்தது. ஆண்டுதோறும் அங்கு நடக்கும் திருவிழாவிற்கு இன்றைய ஈரான், ஈராக், மற்றும் அரேபியாவில் இருந்து பெருமளவு பக்தர்கள் யாத்திரை சென்றனர்.

பாஹ்ரைன் தீவின் பழைய பெயர் “அவ்வல்” ஆகும். அது அந்த எருது மாட்டுக் கடவுளின் பெயர் ஆகும். இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ள, அரபு மொழியில் அவ்வல் என்ற சொல்லுக்கு சிறப்பிடம் உண்டு. அந்தச் சொல்லுக்கு முதன்மையானது, முந்தியது, பண்டைய சிறப்பு வாய்ந்தது என்று பல பொருள்கள் உண்டு.

தமிழ் மொழியில் அவ்வை என்று குறிப்பிடும் சொல், ஔவையார் என்ற புலவரை மட்டும் குறிக்கவில்லை. பண்டைய சிறப்பு வாய்ந்தது என்ற அர்த்ததிலும் பயன்படுத்தப் பட்டது. மேலும், இந்து மதக் கோயில்களில் இன்றைக்கும் எருது மாட்டு தெய்வமான நந்திக்கு முதல் வணக்கம் செலுத்த வேண்டும். இது பண்டைய ஆப்பிரிக்க மதத்தின் எச்சமாக இருக்க வேண்டும்.

(Kalai Marx)

மீண்டும் புலிகள்… முட்டாளா நீங்கள்?

(சமஸ்)

நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிரி கிடையாது. அதேசமயம் நண்பன் என்றும் கூற மாட்டேன். ஒரு மகத்தான போராட்டம் சீரழிந்து ஓர் இனமே அகதியானதற்கு நானும் ஒரு மௌன சாட்சி. இப்போது யோசித்துப் பார்க்கும்போது என்னுடைய தவறும் தெரிகிறது. சாகசத்தை நம்புபவர்களால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது. நாம் அதீதமாக எதிர்பார்த்தோம்; அதீதமாக நம்பினோம்; அதீதமாக ஏமாந்தோம். முட்டாள்தனமாக.

(“மீண்டும் புலிகள்… முட்டாளா நீங்கள்?” தொடர்ந்து வாசிக்க…)

இர‌ண்டாம் உல‌க‌ப்போர் வ‌ர‌லாற்றில் இருட்ட‌டிப்பு செய்ய‌ப் ப‌ட்ட‌ உண்மை இது

– ஜேர்ம‌னி முற்றாக‌ தோற்க‌டிக்க‌ப் ப‌டுவ‌த‌ற்கு முன்ன‌ரே, 1943 ம் ஆண்டு சோவிய‌த் யூனிய‌னில் நாஸிக‌ளின் போர்க்குற்றங்களை‌ விசாரிக்கும் நீதிம‌ன்ற‌ங்க‌ள் ந‌ட‌ந்துள்ள‌ன‌.

– போர்க்குற்ற‌ நீதிம‌ன்ற‌ அம‌ர்வுக‌ள் ஏராள‌மான‌ பொது ம‌க்க‌ள் முன்னிலையில் ந‌ட‌ந்துள்ள‌ன‌. பாதிக்க‌ப் ப‌ட்ட‌ யூத‌ர்க‌ள் வ‌ழ‌ங்கிய‌ சாட்சிய‌ங்க‌ள் யாவும் ப‌திவு செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌. குற்றம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌, நூற்றுக்க‌ண‌க்கான‌ நாஸி கிரிமின‌ல்க‌ள் ப‌கிர‌ங்க‌மாக‌ தூக்கிலிட‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

(“இர‌ண்டாம் உல‌க‌ப்போர் வ‌ர‌லாற்றில் இருட்ட‌டிப்பு செய்ய‌ப் ப‌ட்ட‌ உண்மை இது” தொடர்ந்து வாசிக்க…)

சேனையூர், கட்டைபறிச்சான் பிரதேசங்களில் பட்டிப் பொங்கலும் மஞ்சு விரட்டும்

தமிழர்களின் தனித்துவ திருநாள் பொங்கல் அதிலும் தை இரண்டாம் நாள் நடை பெறும் மாட்டுப் பொங்கல் எங்கள் பிரதேசத்தில் பட்டிப் பொங்கல் எனவே அழைக்கப் படும். அன்றைய நாட்களில் ஒவொரு குடும்பத்துக்கும் குறிப்பிட்டளவுக்கு மாடுகள் இருந்தன மேய்ச்சல் நிலம் அதிகம் உள்ள எங்கள் ஊரில் வீட்டுக் காலையில் அடைக்கப் படும் மாடுகள் காலையில் திறந்து விட அவை மேய்ச்சல் நிலத்துக்கு போய் மாலையில் தானாகவே திரும்பி வரும்.

(“சேனையூர், கட்டைபறிச்சான் பிரதேசங்களில் பட்டிப் பொங்கலும் மஞ்சு விரட்டும்” தொடர்ந்து வாசிக்க…)

ஊரில் உழாத மாடு

யூதரான Henry Kissinger இஸ்ரேலுக்கு விஜயம் செய்த போது அவருக்கு கோட் சூட் தைக்க யூதர்கள் நல்லதொரு துணியொன்றை பரிசளித்தார்களாம். சந்தோசத்துடன் அதை வாங்கிய கிஸ்சின்ஜர் அமேரிக்கா திரும்பியதும் அதை தைக்க டெய்லரிடம் போனால் துணி பத்தாது என்றுவிட்டார். பிறகு கிஸ்சின்ஜர் தனது பிறந்த நாடான ஜெர்மனுக்கு அதை கொண்டு போனால் அங்கும் கோட்டுக்கும் சூட்டுக்கும் உது போதாது என்றுவிட்டார்கள்.

(“ஊரில் உழாத மாடு” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் (அத்தியாயம் 6)

(அக்கினி ஞானாஸ்ஞானம்)

எமதுவாகனதொடரணிபுலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வந்து சேர நன்றாக இருண்டுவிட்டது. வழமைபோல் உட்பிரவேசிக்கும் வரிசையில் பதிவுசெய்வதற்காகநானும் காத்துநின்றேன். எனக்குமுன்னால் நின்றகிறிஸ்தவபாதிரியார் தனதுமுறைவரபதிவுசெய்பவரிடம் அடையாள அட்டையைக் கொடுத்துவிட்டு அவனின் கேள்விகட்குபதிலளிக்க ஆரம்பித்தார். ‘உங்கள் பிரயாணத்தின் நோக்கம்”“தேவபணி” என்றார் அந்தப்பாதிரியார்.

(“முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் (அத்தியாயம் 6)” தொடர்ந்து வாசிக்க…)

சமூக ஊடக அரசியல்: உடையும் மோடியின் குட்டு

(மீனா)

பா.ஜ.கவின் டிஜிட்டல் பிரிவில் பணிபுரிந்த எழுத்தாளரும் பட இயக்குனருமான சாத்வி கோஸ்லா. ஊடகவியலாளர் சுவாதி சதுர்வேதியின் “I am a troll” புத்தகம் பி.ஜே.பியுடைய டிஜிட்டல் படையின் ரகசியங்களை அம்பலப்படுத்தி மோடியின் குட்டை உடைத்திருக்கிறது. இந்நூலில் முக்கிய சாட்சியமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பவர், பி.ஜே.பி.யில் தன்னை ஒரு தன்னார்வலராக இணைத்துக்கொண்டு அவர்களின் சமூக ஊடக மையமான NDOC (National Digital Operations Centre)இல் பணியாற்றிய சாத்வி கோஸ்லா. அவருடைய நேர்காணலொன்று கேரவன் இதழில் வெளிவந்திருக்கிறது. தான் அமைப்பில் இணைந்தது பற்றியும் அவர்களோடு முரண்பட்டு வெளியேற நேர்ந்ததைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்.

(“சமூக ஊடக அரசியல்: உடையும் மோடியின் குட்டு” தொடர்ந்து வாசிக்க…)

செல்லாக் காசாக்கல்: அமெரிக்கா தீர்மானித்த இந்தியா

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நாட்டுமக்கள் விரும்புவதை அரசாங்கங்கள் செய்வது மிகக்குறைவு. அதேபோல அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பெரும்பாலும் மக்கள் ஆதரவை வேண்டி நிற்பதில்லை. ஆனால் மக்கள் விரும்பாத, ஆதரவு தராத செயல்களை மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கள் செய்கின்றன. இது ஒருவகை முரண்நகை.

(“செல்லாக் காசாக்கல்: அமெரிக்கா தீர்மானித்த இந்தியா” தொடர்ந்து வாசிக்க…)

இனிக்கும் பொங்கல் இனி எமக்கு எப்போது?

தை மாதப் பிறப்பு என்பது மண்ணை நம்மி வாழும் விவசாய பெருமக்கள், தம் நன்றிக்கடனை சூரியனுக்கு பொங்கலிட்டும், மறுநாள் உழவுத் தொழிலுக்கு உதவிய எருதுகளுக்கும், பயிருக்கு உரமான எருவை தந்த தமது பட்டி மாடுகளுக்கும், அனைத்துக்கும் மேலாக பயிர்கள் விளைந்து பலன் தரும்வரை தம்மை தக்கவைக்க, பால் தந்த பசுவுக்கும் நன்றி செலுத்தும் நாள்.

(“இனிக்கும் பொங்கல் இனி எமக்கு எப்போது?” தொடர்ந்து வாசிக்க…)

நாட்டிற்கு ஏற்பட்ட,ஏற்படக்கூடிய இழப்புகள்

இவ்வளவுநாட்களாக மோடி அரசு பணமதிப்பு நீக்கம் ரிசர்வ் வங்கியின் முடிவு என்று சொல்லிவந்தது. இப்பொழுது ரிசர்வ் வங்கி இது அரசின் முடிவு என்கிறது. இது நான் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்று வெளியில் செல்வதற்கு கூட தைரியமற்ற பிரதமர் தான் 56″ நெஞ்சு பற்றி (தற்)பெருமை பேசுகிறார். கோடிக்கணக்கான மக்களை ,ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடிய முடிவை எவ்வித பொறுப்பும்,சிந்தனையும் இல்லாமல் மக்கள் அடையக்கூடிய இன்னல்கள்,தேசத்திற்கு ஏற்படக் கூடிய இழப்பைப் பற்றி எவ்வித அக்கறையும்,புரிதலும் இல்லாமல் சம்பந்தப்பட்ட அமைப்பை ,பொருளாதார நிபுணர்களை கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட ஒரு முடிவை இந்தியா மட்டுமல்ல இன்று உலகமே விமர்சிக்கிறது.

(“நாட்டிற்கு ஏற்பட்ட,ஏற்படக்கூடிய இழப்புகள்” தொடர்ந்து வாசிக்க…)