மாவீரர் நாளும் பொது நினைவு நாளும்

ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான குறு வெளியொன்று தாயகத்தில் இம்முறை திறந்தது. அதன் பின்னரான கடந்த ஒரு வார காலத்தில் தமிழ்ச் சமூக, அரசியல், ஊடகப் பரப்பு குறிப்பிட்டளவான உரையாடல்களை நிகழ்த்தியிருக்கின்றது. அதில், தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூருவதற்கான பொது நாளொன்றின் அவசியம் பற்றிய உரையாடல் கவனம் பெற்றது.

(“மாவீரர் நாளும் பொது நினைவு நாளும்” தொடர்ந்து வாசிக்க…)

அப்போலோவில் கரைந்த கடைசி நிமிடங்கள்…: ஜெ.ஜெயலலிதாவின் உயிர்த்தோழி ஆகிய சசிகலா..!

(இரா.சரவணன்)
ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த நாளில் அப்போலோவில் கரைந்த கடைசி நிமிடங்கள் பற்றி தெரியவந்திருக்கிறது. அந்த இறுக்கமான தருணத்தில் அப்போலோவில் இருந்த கட்சிப் பிரமுகர்கள், சசிகலா தரப்பினர், அதிகாரிகள், கார்டன் உதவியாளர்கள் எனப் பலரிடமும் பேசியதில் கிடைத்த தகவல்களின் தொகுப்பு இதோ:

(“அப்போலோவில் கரைந்த கடைசி நிமிடங்கள்…: ஜெ.ஜெயலலிதாவின் உயிர்த்தோழி ஆகிய சசிகலா..!” தொடர்ந்து வாசிக்க…)

இரண்டு துருவ நட்சத்திரங்கள் அடுத்தடுத்து மறைந்தன!

தமிழ் நாட்டின் இரண்டு ஆளுமை உள்ளவர்களின் அடுத்தடுத்த மறைவு பலரை, நடுக்கடலில் துருவ நட்சத்திரம் கொண்டு திசையறிபவர்கள், அது மறைந்தால் படும் இன்னல் போன்ற நிலைக்கு ஆளாக்கிவிட்டது. தமிழகத்தின் முதல்வர், அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைவி, அம்மா என அனைவராலும் அழைக்கப்பட்ட ஜெ. ஜெயலலிதா அம்மையார் மறைவும், துக்ளக் ஆசிரியர், பன்முக தன்மைகொண்ட அரசியல் விமர்சகர், பிரதமர் நரேந்திர மோடியால் ராஜகுரு என அழைக்கப்பட்ட சோ ராமசாமி அவர்களின் மறைவும் ஈடுசெய்ய முடியாதவை.

(“இரண்டு துருவ நட்சத்திரங்கள் அடுத்தடுத்து மறைந்தன!” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 83 )

கொழும்பில் இருந்து திரும்பிய அரச அதிபர் பஞ்சலிங்கம் பற்குணத்தை அழைத்தார்.பற்குணத்தை கண்ட அவர் இருப்பிலுள்ள சகல உணவுகளையும் மக்களுக்கு விநியோகிக்குமாறு பணித்தார்.அதற்கு பற்குணம் போதிய அளவு உணவுகள் இருப்பில் இல்லை என்றார்.அதற்கு ஏற்கனவே இருப்பில் உள்ள உணவுகளை விநியோகிக்க சொன்னார்.அதற்கு அவை பழுதடைந்த உணவுகள் என பதிலளித்தார்.சனத்துக்கு உணவுகள் இல்லை நீர் பழுதடைந்தவை என்கிறீர் .ஆனால் அதைப்பற்றி கவலையில்லை எல்லா உணவுகளையும் விநியோகிக்கும்படி உதஃதரவிட்டார்.

(“பற்குணம் A.F.C (பகுதி 83 )” தொடர்ந்து வாசிக்க…)

அம்முவிலிருந்து ஆயிரத்தில் ஒருவன்(ஒருத்தி) வரை

ரங்கசாமி ஐயங்காருக்குச் சொந்த ஊர் ஸ்ரீரங்கம். பிழைப்புக்காக ஆந்திராவில் உள்ள நெல்லூருக்குச் சென்றவர் , அங்கேயே தங்கிவிட்டார். அடுத்தடுத்து மூன்று பெண்களைப் பெற்றுவிட்டு , ஏகப்பட்ட மன உளைச்சலோடு இருந்தவருக்கு நாற்பது வயதில் ஒரு நல்ல செய்தி வந்தது. அது , பெங்களூர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் கிடைத்த குமாஸ்தா வேலை. இதுதான் அந்தக் குடும்பத்துக்கே ஒரு திருப்புமுனை. வேதா , அம்புஜா , பத்மா மூன்று பெண்களும் சரி , மூத்த பையன் ஸ்ரீநிவாசனும் சரி , அப்பா பேச்சைத் தட்டாத பிள்ளைகள். படித்து முடித்ததும் எச்.ஏ.எல். ஃபேக்டரியில் ஸ்ரீநிவாசன் வேலைக்குப் போக ஆரம்பித்த பின்னர் அந்தக் குடும்பத்துக்கு ஓரளவு வசதி வர ஆரம்பித்தது.

(“அம்முவிலிருந்து ஆயிரத்தில் ஒருவன்(ஒருத்தி) வரை” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 82 )

யாழ்ப்பாண அரச நிர்வாகம் ஓரளவு அரசால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தது.பிரதான பிரச்சினையான உணவுப் பிரச்சினை தொடர்பாக அரச அதிபர் பஞ்சலிங்கம் எந்த அக்கறையும் காட்டவில்லை. தன் பதவியை இயக்கங்கள் அரசாங்கம் இரண்டுக்கும் நடுவே காப்பாற்ற நாடகமாடிக் கொண்டிருந்தார்.
பற்குணம் கொழும்பு யாழ்ப்பாணம் என பயணம் உணவுகள் கொண்டுவந்து சமாளித்தார் .ஆனாலும் கொழும்பில் பாதுகாப்பு அமைச்சிலுள்ள இனவாதிகள் கொஞ்சம் நெருக்கடிகள் கொடுத்தனர்.இதனிடையே ஒரு முறை உணவுகளை ரயில் மூலமாக கொண்டுவர ்மிகவும்சிரம்ப்பட்டு ஏற்பாடு செய்தார்.இந்த தகவலை சிலரிடம் பகிர்ந்து கொண்டார்.உணவுத் திணைக்களத்திலுள்ள ஊழல் பேர்வழிகள் புளொட் அமைப்புக்கு தகவல்களை வழங்கிவிட்டனர்.

(“பற்குணம் A.F.C (பகுதி 82 )” தொடர்ந்து வாசிக்க…)

ஃபிடல் காஸ்ட்ரோ: வரலாற்றின் விடுதலை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

வரலாற்றின் வழித்தடத்தில் தவிர்க்கவியலாத தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் வெகுசிலரே. அதிலும் வரலாற்றின் திசைவழியை மாற்றியவர்கள் மதிக்கத்தக்கவர்கள் மட்டுமன்றி மாண்புடையோருமாவர். உலகில் ஒடுக்கப்படும் மக்களுக்கான அயராத குரல்கள் எப்போதும் மெச்சத்தக்கன. அவ்வாறான குரல்கள் உலகெங்கும் போராடுவோருக்கு முன்உதாரணமாக, உந்துசக்தியாக இருக்கும். உலகை நேசித்த அக்குரல்கள் காலம்கடந்தும் நிலைக்கும். வரலாறு அவ்வாறான குரல்களை விடுதலை செய்யும்.

(“ஃபிடல் காஸ்ட்ரோ: வரலாற்றின் விடுதலை” தொடர்ந்து வாசிக்க…)

தவறுகளை மறவுங்கள். மீண்டும் கிளறாதீர்கள்!

ஈழத்தமிழர் வரலாற்றில் தவறு செய்யாத தலைமைகள் என்று எவரும் இல்லை. அது மிதவாதம் தீவிரவாதம் பயங்கரவாதம் என எவ்வாறு அழைக்கப்பட்டாலும் அதன் தலைமைகள், “இடக்கன்னத்தில் அடித்தால் வலக்கன்னத்தையும் காட்டு” என்று சொன்ன யேசுபிரான்கள் அல்ல. எதோ வகையில் எதிர்ப்பை, வெறுப்பை விதைத்தவர்கள். அதனால் தான் தமிழ் காங்கிரஸ் பிளவுபட்டு தமிழ் அரசு கட்சி பின்பு அதுவும் பிளவுற்று சுயாட்சி கழகம் என தொடர்ந்தது.

(“தவறுகளை மறவுங்கள். மீண்டும் கிளறாதீர்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

பல ஆயிரம் மக்கள் வீதியெங்கும் குழுமியிருக்க பிடல் காஸ்ட்ரோ இன் இறுதி யாத்திரை

வெள்ளை றோஜா மலர்களினால் சோடிக்கப்பட்ட பச்சை நிற ரஷ்யத் தயாரிப்பான இராணுவ ஜீப் வாகனத்தில் நாலு நாட்கள் கியூபாவின் பட்டி தொட்டியெல்லாம் 800 கிலோ மீற்றர் பயணம் செய்த பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி இறுதி அமைவிடமான சன்டியாகோவை இன்று அடைந்தது. வீதி எங்கும் பல ஆயிரத்தற்கு மேற்பட்ட மக்கள் குழுமி நின்ற தமது தலைவனுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். புரட்சிக்கு பின்னர் 50 வருட காலமாக கியூபாவின் ஆட்சிப் பொறுப்பில் நாட்டை வெற்றிப்பாதையில் கொண்டு சென்ற தமது தலைவனுக்கு தமது கண்ணீரை காணிக்கையாக்கி வழியனுப்பி வைத்தனர்.

(“பல ஆயிரம் மக்கள் வீதியெங்கும் குழுமியிருக்க பிடல் காஸ்ட்ரோ இன் இறுதி யாத்திரை” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 81 )

பற்குணம் யாழ்ப்பாணத்தில் வேலை செய்வது என்பது உயிரைப் பணயம் வைத்து செயலாற்றுவது போன்று இருந்தது.இராணுவம் முகாம்களில் முடக்கப்பட்டிருந்த காலம்.உணவுக் களஞ்சியங்கள் துறைமுகம் என்பன இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தன.

(“பற்குணம் A.F.C (பகுதி 81 )” தொடர்ந்து வாசிக்க…)