தோழர் றொபேட் புதிய அரசியல் பண்பாட்டின் முன் உதாரணம்

 

நோர்வே அரசின் மத்தியஸ்தத்துடன், இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்;படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் சமாதானப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் நோர்வே தலைமையிலான போர் நிறுத்த கண்காணிப்புக் குழு செயற்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில் தோழர் றொபேட் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஆயுதங்களை வைத்திருப்பதும், பாவிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும் என்ற நியதிகளுக்குப் புறம்பாக பாடசாலை வகுப்பறையில் மறைந்திருந்த புலிகளின் து;பபாக்கிதாரியால் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிவீதியில் இயங்கிவந்த ஈபிஆர்எல்எவ் அலுவலகத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோழர் றொபேட் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்யப்பட்டது.

(“தோழர் றொபேட் புதிய அரசியல் பண்பாட்டின் முன் உதாரணம்” தொடர்ந்து வாசிக்க…)

கோப்பா அமெரிக்கா: மீண்டுமொரு ‘கடவுளின் கோல்’; வெளியேறியது பிரேஸில்

தென்னமரிக்க நாடுகளுக்கிடையே, ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் 100ஆவது கோப்பா அமெரிக்கா தொடரின் குழு நிலைப் போட்டிகளுடனேயே, கால்பந்தாட்ட ஜாம்பவானான பிரேஸில் வெளியேறியுள்ளது. 1987ஆம் ஆண்டுக்குப் பின்னர், முதற்தடவையாக, இம்முறையே, குழுநிலைப் போட்டிகளுடன் பிரேஸில் வெளியேறியுள்ளது.

(“கோப்பா அமெரிக்கா: மீண்டுமொரு ‘கடவுளின் கோல்’; வெளியேறியது பிரேஸில்” தொடர்ந்து வாசிக்க…)

இந்தியாவில்: 26வது தியாகிகள் தினம்

 

தோழர் பத்மநாபா மற்றும் 12 தோழர்கள் சென்னையில் 19.6.1990 அன்று விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தினத்தினை பத்மநாபா மக்கள்  முன்னணியினர் தியாகிகள் தினமாக வருடா வருடம் அனுஸ்டித்து வருகின்றனர். தியாகிகள் தினம் என அனுஸ்டிக்கபட்டு வரும் இத் தினம் 19.6.2016 அன்று 26வருடங்களை எட்டி நிற்கிறது. இத்தினத்தை சென்னை புழல் முகாமில் உள்ள தோழர்களும் வருடா வருடம் கடைபிடித்து இறந்த தோழர் பத்மநாபா மற்றும் ஈழ போராட்டத்திற்காக உயிர்நீத்த அனைத்து தரப்பினரையும் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

(“இந்தியாவில்: 26வது தியாகிகள் தினம்” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லீம்களுக்கு புலிகள் செய்த கொலை வெறியாட்டம்

(Bazeer Seyed)

புலிகள் இருபது வருடத்திற்கு முன்பிருந்தே தமது மதவிரோத செயற்பாட்டின் தொடராக முஸ்லிம்களை மட்டுமல்ல சிங்கள மக்களையும் வட கிழக்கில் மட்டுமல்ல அதற்கு அப்பாலும் மே 14 ம் திகதி 1985ல் அனுராதபுர ஸ்ரீ மஹாபோதி விகாரை அனுராதாபுர பேரூந்து தரிப்பு நிலையம் ஆகியவற்றில் சிங்கள அப்பாவி மக்கள் வழிபாட்டில் ஈடுபடிருந்த புத்த பிக்குகள் பிக்குனிகள் உட்பட 146 பேரை கொன்றது தொடக்கம் தமது அந்திம காலத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் வரை மாத்தறை அகுரஸ்ஸை கொடபிட்டிய எனுமிடத்தில் போர்வை முஸ்லிம் ஜூம்ஆப் பள்ளிவாசல் தாக்குதல் வரை (10.03.2009) ஏன் அதற்கு சற்று முன்னரான, வாகரை கோவில் பூசாரி வரை எண்ணற்ற கொலைகளை மிலேச்சத்தனமாக செய்துள்ளனர். அது தவிர ஆயிரக்கனக்கான சிங்கள, தமிழ், முஸ்லிம் பொது மக்களை, அரசியல் வாதிகளை, கல்விமான்களை அரச அலுவலகர்களை என்று ஆயிரக்கணக்கனோரை ஈவிரக்கமின்றி கொன்று குவித்துள்ளனர். அப்போதெல்லாம் புலிகளின் கொடூரங்களை தமிழர் தலைமகன் கன்டு கொள்ளவேயில்லை.

(“முஸ்லீம்களுக்கு புலிகள் செய்த கொலை வெறியாட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

தொப்புள் கொடி உறவுகள்

நான் இலங்கைத் தமிழன். இந்தியாவுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவன். ஆனால் இலங்கையர்கள் அனைவருக்கும் இந்தியாதான் “மூதாதையர்கள் நாடு “. நாங்கள் பேசும் தமிழ் பல தமிழ் நாட்டவர்களுக்குப் புரிவதில்லை. சைமன் நாடாரே ஒரு முறை இலங்கைத் தமிழன் தமிழில் பேசியதை மொழி பெயர்க்கும்படி கேட்டான். அடுத்து விவாஹ முறைகள் கேரளத்துடனேயே ஒத்துப் போகின்றன. உணவுகளும் அப்படியே. ஆனால் இலங்கையில் தமிழும் சிங்களமும் கட்டாய பாட மொழிகள். இரண்டில் ஒன்றில்த்தான் படிக்க வேண்டும். தமிழ் நாட்டில் அப்படியல்ல. தமிழ் நாட்டுப் பத்திரிகைகள், சினிமா என்பனவற்றையே படிக்கிறோம் பார்க்கிறோம். ஆனால் யாரும் சொல்லாத ஒரு முக்கிய விஷயம் ஒன்று இருக்கிறது. கள்ளக் கடத்தல் வியாபாரம். இலங்கைக் கள்ளக் கடத்தல் கும்பல்களுக்கு தமிழ் நாட்டில் வைப்பாட்டிகள் உண்டு. பலதசாப்தமாக நடை பெறும் கள்ளக் கடத்தல் வியாபாரமே இலங்கை அரசுடன் மோதல்களை உண்டாக்கின.

(“தொப்புள் கொடி உறவுகள்” தொடர்ந்து வாசிக்க…)

பிரஞ்சுகாரன் கூறும்? இவ்வளவும் இருந்தும் ஏன் முள்ளிவாய்காலில் மண்டியிட்டார்கள்….?

வன்னியில் பிரபாகரன் என்ன செய்தார் – உறங்கும் உண்மைகள்

ஒன்று சொல்லட்டுமா? புலம்பெயர் மக்களின் மனங்களில் இருந்து எவரேனும் பிரபாகரனை அகற்ற நினைத்தால்,முதலில்,
ஐரோப்பாவைத்தான் அழிக்க வேண்டும்! விடுதலைப் புலிகள் செய்த நல்லவை + கெட்டவை பற்றி, ஆங்கிலம் பேசக்கூடிய ஒரு ஃபிரெஞ்சுக்கார நண்பனிடம் சில மாதங்களுக்கு முன்னர் விவாதித்துக்கொண்டிருந்தேன்! அரசியல் பேசக்கூடிய அளவுக்கு அப்போது ஃபிரெஞ்சு தெரிந்திருக்கவில்லை! “ பிரபாகரன் செய்த தவறுகள்” பற்றி அவர் என்னிடம் கேள்வி எழுப்பினார்! அந்த உரையாடலில் இடையிலே, நான் பின்வருமாறு அவருக்கு சொன்னேன்! “ நாங்கள் பிரபாகரனை மறந்துவிட்டு, அமைதியாக வாழ தயாராக இருக்கிறோம்! ஆனால் உங்கள் நாடு, எங்களுக்குப் பிரபாகரனை மறுபடியும் மறுபடியும் நினைவூட்டுகிறது” என்று!
இவர்கள் அந்நியர்கள் இல்லை! எம்மவர்கள்! இவர்கள் மீது தூசு பட்டாலும் துடிப்போம்!

(“பிரஞ்சுகாரன் கூறும்? இவ்வளவும் இருந்தும் ஏன் முள்ளிவாய்காலில் மண்டியிட்டார்கள்….?” தொடர்ந்து வாசிக்க…)

மாற்றங்களுக்கு வாய்ப்பு இல்லாததால் ஈ.பி.டி.பியிலிருந்து விலகினேன் – முன்னாள் எம்.பி சந்திரகுமார்-

கடந்த 05.06.2016 அன்று தினக்குரல் பத்திரிகையில் வெளியான நேர்காணல்
கேள்வி – ஈ.பி.டி.பி. ஐ ஆரம்பித்து அதனைப் பதிவு செய்தவர்களில் நீங்களும் ஒருவர். அப்படியிருந்தும் கட்சித் தலைமையுடன் உருவாகிய பிரச்சினைகளை உங்களால் ஏன் பேசித் தீர்க்க முடியவில்லை?
பதில் – எமது மக்களுடைய உரிமைகளுக்கான விடுதலைப்போராட்டத்தில் 1980 களின் ஆரம்பத்தில் இணைந்ததிலிருந்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த முப்பது ஆண்டுகளிலும் எமது போராட்டமும் இலங்கை மற்றும் சர்வதேச அரசியற் போக்குகளும் பாரிய மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் ஒரு காலகட்டத்தின் தேவையாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை உருவாக்க வேண்டியிருந்தது.

(“மாற்றங்களுக்கு வாய்ப்பு இல்லாததால் ஈ.பி.டி.பியிலிருந்து விலகினேன் – முன்னாள் எம்.பி சந்திரகுமார்-” தொடர்ந்து வாசிக்க…)

ஏறாவூர் மக்கள் மீதான புலிகளின் 1990 ஆகஸ்து படுகொலைகள்

ஏறாவூர் மக்கள் மீதான புலிகளின் 1990 ஆகஸ்து படுகொலைகள் .நடந்தபோது முன்னாள் ஒரு தமிழ் இயக்கத்தின் உறுப்பினராகவும் பின்னர் தமது தவறை உணர்ந்து அதிலிருந்து விலகி ஏறாவூர் கிராமத்தின் பாதுகாப்பு குறித்து அதீத அக்கறையுயுடன் செயற்பட்ட வாலிபனான ஜலால்தீன் 12 ம் திகதி அதிகாலையில் தனது இயக்க அணுபவத்தினால் நடப்பதை உணர்ந்துகொன்டு கால்நடையாக காட்டுவழியாக ஓடி களுவங்கேர்னி இரானுவ முகாமுக்கு சென்று அங்கிருந்து இரானுவத்தை அழைத்து வந்தவர். இவர் சில வருடங்களின் பின்னர் அரவம் தீண்டி அகால மரனமடைந்தார். ( எனக்கு நேரில் அறிமுகமான அந்த துடிப்பும் துனிவும் கொன்ட வாலிபன் மறைந்த ஜலால்தீனுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணமாகும்)
ஏறாவூர் சம்பவத்தில் கொல்லப்பட்ட பலரில் பேராதனை பல்கலைக்கழ்க சிரேஷ்ட விரிவுரையாளரான ஜனப் அமீர்தீன் என்பவரின் குடும்பத்தினரும் அடங்குவர். இதில் முரன் நகை என்னவென்றால் இவரது சகோதரரும் புலிகள் இயக்கத்தில் இருந்தவர் , ஆனால் இவரது சொந்த குடும்பமும் புலிகளால் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
(Bazeer Seyed)

திட்டமிட்டு சிங்கள மயமாக்கப்படும் கன்னியா வெந்நீரூற்று!

கன்னியா வெந்நீரூற்று திட்டமிட்ட ரீதியில் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இராவணன் தனது தாய்க்கு இறுதிக்கிரியைகள் செய்வதற்காக தனது உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாக வரலாறுச் சான்றுகள், ஐதீக, புராணக் கதைகள் மற்றும் செவி வழிக்கதைகளும் உள்ளன. கன்னியா வெந்நீரூற்றுக்கருகாமையில் ஒரு பிள்ளையார் கோவிலும் சிவன் கோவிலும் காணப்பட்டது. தற்போது பிள்ளையார் கோவில் உடைக்கப்பட்டும் சிவனாலயம் பராமரிப்பாரற்றும் காணப்படுகின்றன.

(“திட்டமிட்டு சிங்கள மயமாக்கப்படும் கன்னியா வெந்நீரூற்று!” தொடர்ந்து வாசிக்க…)

புத்தக விமர்சனம்

எல்லாளனின் “ஒரூ தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புக்கள்’
தனது குறுகிய கால (9 மாதங்கள்) இயக்க வாழ்க்கையையும் அக்கால அரசியல் சூழுலையும் நேர்மையான, பக்கசார்பற்ற சுயமீளாய்வுக்குட்படுத்திய ஆசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது. தான் சார்ந்த இயக்கத்தையும், ஏனையஇயக்கங்களையும் எவ்விதவேறுபாடுகளுமின்றி நடுநிலை தவறாது விமர்சிப்பது மெச்சத்கது. இப்படியான கண்ணோட்டங்களை இந்நாட்களில் வாசிக்கக்கிடைப்பது அரிது. சமகாலத்தில் வெளியாகும் போராட்டம் தொடர்பான நூல்கள்களில தவறுகளை நியாயப்படுத்தல் பலவவீன்னங்களை மிகைப்படுத்தல் ஒருசிலரை குறிவைத்து தாக்குதல் போன்னறவை அதிகமாகக்காணப்படும். இந்நூல் அதற்கு விதிவிலக்கு.

(“புத்தக விமர்சனம்” தொடர்ந்து வாசிக்க…)