டயறிக் குறிப்பு: யாழ்ப்பாணத்தில் யூதர்கள்.

(AS Kantharajah)

நாவற்குழியின் பழைய பெயர், சாவாங்கோட்டை!
நாவற்குழிச் சந்தியிலுள்ள எனது மனைவியின் சீதணக் காணி உறுதியிலும் ‘தென்மராட்சிப் பகுதி நாவற்குழி கோவில்ப்பற்று, சாவாங்கோட்டை மணற்காடு’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நாவற்குழிக்கு ‘சாவாங்கோட்டை’ என்ற பெயர் எப்படி வந்தது? என நாற்குழியில் பிறந்த கவிஞர் அம்பியிடம் கேட்டேன்.

சிறுதானியங்களின் 30 விதமான பயன்கள்

(ஆசிரியர்: Medlife வலைப்பதிவாளர்)

நம் முன்னோர்களால் உண்ணப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தினைப் பிடிப்பது சிறுதானியங்கள் தான். சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவு முறையின் அரசியாகக் கருதப்படுகிறது. இன்று நாம் உண்ணும் அரிசியின் வழிமரபு தான் இந்தச் சிறுதானியங்கள். இவை நெற்பயிரைப் போன்றே வளர்க்கப்படும் தானிய வகையாகும். அரிசியின் அளவைவிட சிறிய அளவினைப் பெற்ற சிறுதானியங்கள் குறுகிய காலப் பயிராகும். அரிசி போன்றவற்றிற்கு நல்ல மழை தேவைப்படும். ஆனால் இந்தச் சத்து மிக்க சிறுதானியங்கள் மிதமான தட்ப வெப்ப நிலையிலும் சாதாரண மண் வளத்திலும் செழித்து வளரும். ஆதிகாலத்தில் தொடங்கி இன்று நாம் வாழும் நவீன காலம் வரை மனித இனம் பயன்படுத்தும் உணவு வகைகளில் சிறுதானியங்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளது. எனவே இதனை முதல் தானிய வகை உணவு என்று கூடச் சொல்லலாம்.

அன்பு_நண்பர்களே…!!!

நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்…

4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த என் நண்பனின் அத்தை ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட,

கோவையில் உள்ள பிரபலக்கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் யார் இவர்கள்—-??!!…

(புலோலியூரான் சதாவதானி)

உலகின் அதிகம் துன்புறுத்தப்படும், தொடர்ச்சியாக அழிக்கப்படும் சிறுபான்மைப் பிரிவினரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் முதன்மையானவர்கள். யார் இவர்கள்?

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்

(Subamangala Saththiyamoorthy)

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. கட்சிக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் தவறானதும், பயனற்றதும் என்பதை வாக்காளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தவறானது என்று சொல்வதற்குக் காரணம், அந்த இயக்கம் இலங்கை மக்கள் அனுபவித்து வரும் ஜனநாயக அரசியல் அமைப்புமுறையை (முதலாளித்துவ ஜனநாயகமாக இருப்பினும் கூட) அழித்தொழிப்பதற்கு இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சி செய்த பயங்கரவாத இயக்கமாகும்.

ஓர் அஸ்தமனத்தின் உதயம்?

(இலட்சுமணன்)

போருக்குப் பின்னரான, இன்றைய தமிழ்த் தேசிய அரசியலின் அண்மைக்கால செல்நெறியானது, என்றுமில்லாத அளவு ஓர் இக்கட்டான சூழலுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. காரணம், ஐந்து கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளும் அதன் பின்னரான அரசியல் சூழலும் ஆகும்.

சீனா 70: வரலாறும் வழித்தடமும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உண்மைகள் கறுப்பு, வெள்ளையாக என்றும் இருந்ததில்லை. எமக்குச் சொல்லப்படுவதன் அடிப்படையிலேயே, நாம் முடிவுகளை வந்தடைகிறோம்; அதில் தவறில்லை. ஆனால், நமக்கு சொல்லப்படுபவை பற்றியும் அதன் உண்மைத் தன்மை பற்றியும் ஆராய்வது முக்கியமானது. அதனடிப்படையில், நாம் புதிய தகவல்களைப் பெறும்போது, எம்மைத் நாம் திருத்திக் கொள்வதற்காகத் திறந்த மனத்துடன் இருக்க வேண்டும்.

காந்தி 150 ஆண்டுகள் பதிவு 145

திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் இருந்த சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை ஈழவர், புலையர் போன்ற தாழ்த்தப்பட்ட சாதியினர் பயன்படுத்தக் கூடாது, நடக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது.

சிந்திக்கணும் சீமான்

(த.ராஜன்)

சீமானிடம் வழக்கமாக வெளிப்படும் தெனாவட்டான பேச்சின் அடுத்தகட்ட நீட்சியாகியிருக்கிறது ராஜீவ் காந்தி கொலை குறித்து விக்கிரவாண்டி தொகுதியில் அவர் பேசியது. ராஜீவ் காந்தி தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது இன்னும் ஆறாத காயமாகவும், நம் தமிழக அரசியல் வரலாற்றில் நீங்காத கறையாகவும் தொடர்கிறது.

விடிந்தால் கனடியத் தேர்தல்

(சாகரன்)

ஒரு கண்டம் அளவிற்கு விரிந்திருக்கும் வட அமெரிக்க நாடு கனடாவின் பொதுத் தேர்தல் விடிந்தால். பல இலட்சம் உழைக்கும் மக்களின் விடியலைத் தீர்மானிக்கும் தேர்தலாகவும் உலகளாவிய காலநிலை மாற்றம் பற்றிய சுற்றுச் சூழல் போன்ற விடங்களின் போக்கை தீர்மானிக்கும் தேர்தலாகவும் இது முன்னிலை பெறுகின்றது. அமெரிக்கா, இதனைத் தொடர்ந்து பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட அதி தீவிர வலதுசாரிக் கொள்கையாளர்களை நாட்டின் தலைவராக மாற்றி தேர்தலைப் போன்று கனடாவையும் மாற்றியமைக்கும் பொது செயற்பாட்டிற்குள் கனடாவையும் வீழ்த்தும் பிரச்சாரங்களே உள்ள நாட்டிலும் வெளி நாட்டிலும் ஊடகச் செல்வாக்குள் செயற்பட்டு வரும் நிலையில் தேர்தலை கனடா சந்திக்கின்றது.