3 பௌத்த பீடங்களின் முக்கிய அறிவித்தல்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மகா சங்கத்தினர் ஒன்றிணைந்து சங்க மாநாட்டை பிரகடனப்படுத்துவோம் என, மூன்று பௌத்த உயர் பீடங்களின் மகாநாயக்கர்கள் அரசாங்கத்துக்கு விசேட கடிதம் ஒன்று அனுப்பியுள்ளனர்.

13 ஆளும் எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு, ஆளுங்கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் 13 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அறியமுடிகிறது.

“ஜனாதிபதி பதவி விலகத்தயார்”

பதவி விலகத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோரினால் தாம் பதவி விலகத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கட்சித் தலைமைக் கூட்டத்தில் தெரிவித்ததாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச   தெரிவித்துள்ளார் .

ரம்புக்கனையில் துப்பாக்கிச் சூடு மரணம் ஏன்

கொழும்பில் வாழும் சிங்கள மேட்டுக்குடிகளே கூடுதலாகக் காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதனாலேயே பொலிஸாரும் அந்தப் போராட்டத்தை நிதானமாகக் கையாளுகின்றனர்- சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டே சிங்கள மேட்டுக்குடிகள் போராட்டம் நடக்கிறது. சிங்கள மேற்தட்டு முற்போக்காளர்கள் பலரும் காலிமுகத் திடல் போராட்டத்தில் பங்கெடுக்கின்றனர். ஆனால் ரம்புக்கனையில் நடந்த போராட்டம் அப்படியல்ல- உண்மையாகப் பாதிக்கப்பட்ட சாதாரண சிங்கள மக்களின் போராட்டமே ரம்புக்கனை போராட்டம்.

(அமிர்தநாயகம் நிக்ஸன்)

Why…. Why….

(Samantha Weeramanthri)

I don’t understand reason for,

Jaffna Library was burnt

Yaledevi is stoped,

Black July happened,

Elam War started,

A-9 have closed

Northern provisional council was suspended (1990),

Delaying provisional council elections Under UNP government…..

Re-established of Jaffna library,

Yaldevi started again,

Elam war is ended,

Development of Northern provincial with required infrastructure,

A-9 opened Provisional council elections were resumed in all 9 provincial councils in 2013,

At least there was president who can speak few Tamil words,

Happened only during Mahinda’s previous Government However Mahinda is considered as racist today,

but owners of Reconciliation are UNPers

சீனாவின் அதிரடி அறிவிப்பு

இலங்கையின் தற்போதைய நெருக்கடியான நிலையை சமாளிக்க சீன அரசாங்கம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சீனா அவதானித்துள்ளதாகவும், இலங்கைக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் பேச்சாளர் சூ வெய் இன்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் மனித உரிமை மீறல் பற்றி பேசுவோம்: ஜெய்சங்கர் பதிலடி

இந்தியாவில் மனித உரிமை மீறல் குறித்து கவலை தெரிவித்த அமெரிக்காவிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் அது பற்றி கருத்து தெரிவிப்போம். நேற்று கூட இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதாக கூறியுள்ளார்.

இலங்கைக்கு மேலும் ரூ.15,200 கோடி நிதி வழங்க இந்தியா முடிவு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. அத்தியாவசிய பொருட்கள், மருந்து உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரித்து வருவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

ராகுல் காந்தி : இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் 5 லட்சம் பேர் அல்ல. 40 லட்சம் பேர்

நீங்களும் உண்மையை பேச மாட்டீங்க..” கொரோனா மரணங்களை மூடி மறைத்த மோடி அரசு.. அம்பலப்படுத்திய ராகுல்காந்தி! பிரதமர் மோடி உண்மையை சொல்லவும் மாட்டார். மற்றவர்கள் அதனை சொல்ல அனுமதிக்கவும் மாட்டார் என ராகுல் காந்தி சாடியுள்ளார்.

அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், தற்போது அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்படுகின்றது. இதில், 17 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவிப்பிரமானம் செய்துகொண்டுள்ளனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் நஷீர் அஹமட் சுற்றாடல் துறை அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.