இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 184 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 97 ஆண்களும் 87 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்ட 134 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 46 பேர் மரணித்துள்ளனர். 30க்கு கீழ்பட்டோரில் 4 பேரும் மரணித்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 10,504 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா இங்கிலாந்து மண்ணில் வெற்றி

இங்கிலாந்து மண்ணில் இந்தியா இங்கிலாந்தை வென்றுள்ளது டெஸ்ட் போட்டியில். ரோகித் சர்மாவின் வெளிநாட்டு மைதானத்தில் எடுத்த சதம் அடித்தளம் இட்டுக் கொடுக்கு இந்திய பந்து வீச்சாளர்களின் திறமையான செயற்பாடு இந்த வெற்றியை இந்தியா பெறக் காரணமாகியிருக்கின்றது. ஒரு எதிர்பாராத மகத்தான நாள்! கொண்டாட்டமான நாள்! பும்ரா, ஷர்துல், ஜடேஜா, உமேஷ் – முழுக்க பந்துவீச்சாளர்களின் உழைப்பால் சாத்தியமான வெற்றி. கோலியின் சோர்வற்ற அணுகுமுறை, தன்னம்பிக்கை, புத்திசாலித்தனமான கள அமைப்பையும் பாராட்ட வேண்டும்.

மரண அறிவித்தல்

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் வவுனியா மாவட்ட மூத்த தோழரும் ஆகிய நேசன் தோழரின் மனைவி இன்று 06.09.2021 திகதி காலை 2மனியளவில் காலமானார் தோழர்கள் அனைவருக்கும் அறிய தருகிறோம் – தோழர் ரூபோ

குடும்பத்தினர் முன்னிலையில் கர்ப்பிணி பொலிஸ் தலிபான்களால் படுகொலை

தலிபான் படையினர் வீட்டுக்கு வீடு சென்று நடத்தும் மரணதண்டனையின் ஒரு நிகழ்வாக கர்ப்பிணி பொலிஸ் அதிகாரி ஒருவர் அவர் வீட்டிலேயே வைத்து கணவன் மற்றும் பிள்ளைகள் முன்னிலையில் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சாட்சிகள் தெரிவித்தன.

யாழ்ப்பாண மாவட்டம்: தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது

யாழ். மாவட்டத்தில், கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்து உள்ளதாகத் தெரிவித்த யாழ். மாவட்டச் செயலாளர் க. மகேசன், இருப்பினும், யாழ்ப்பாண மாவட்டத்தில் தொற்று  நிலைமையானது அபாய நிலையிலேயே  காணப்படுகின்றது எனவும் கூறினார்.

ஆப்கானில் உள்நாட்டுப்போர் ஏற்படலாம் -அமெரிக்கா எச்சரிக்கை

தலிபான் போராளிகள் பன்ஞ்ஸிர் பள்ளத்தாக்கில் ஆழமாகக் கால்
பதித்திருப்பதால் ஆப்கானிஸ்தானில் மிகுதியாக இருக்கும் ஒரு மாகாணம்
மட்டும் தலிபான்களை எதிர்த்து நிற்கிறது.

சீனாவுடன் கை கோர்க்கும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், சீனா தங்களின் மிக முக்கிய பங்காளி எனத்  தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா Focus தமிழில் அ. வரதராஜப்பெருமாள்

அவுஸ்ரேலிய சிட்னி, மெல்பேர்ன் நேரம் இரவு 8.30 மணி.இலங்கை/இந்தியா நேரம் மாலை 4.00 மணிஐரோப்பிய/இங்கிலாந்து நேரம் மாலை 12.30/ 11.30 மணிரொரோன்ரோ/நீயூயோர்க் காலை 6.30 மணி

‘டக்ளஸ் மீது நம்பிக்கை இல்லை’

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோதச் தொழில் முறைகளால் ஏற்படுகின்ற பாதிப்புக்களில் இருந்து தங்களை பாதுகாப்பதற்கு, இலங்கை அரசாங்கம்  உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள வடக்கு கடற்றொழிலாளர்கள், தாங்கள் பொறுமையின் எல்லையில்  இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய காத்தான்குடி நபர்

நியூசிலாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய இலங்கையர் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் குறித்த நபர் காத்தான்குடி – 01, சேர்ந்த ஐ. எஸ். ஐ.எஸ் இனால் ஈர்க்கப்பட்டவர் எனவும், இவரே குறித்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.