Category: Uncategorised
தமிழ்நாட்டில் தலித் அரங்கவியலை தோற்றுவித்த குரல் ஓய்ந்தது. முனைவர் கே. ஏ. குணசேகரனுக்கு அஞ்சலி
‘இந்து மதச்சிறையினிலே ஹரிஜனங்க நாங்க
இயற்கையின் படைப்பினிலே சரிசமங்க நாங்க.
சொந்த மண்ணில் சுதந்திரமா வாழ முடியலீங்க
ஏரைப்பிடிச்சுப்பாடுபட்டும் எதைத்தான் கண்டோமுங்க’
தலித் மக்களின் குரலாக வாழ்ந்த கலைஞர் முனைவர் தோழர் கே.ஏ.குணசேகரன் நேற்று 17 ஆம் திகதி பாண்டிச்சேரியில் காலமானார் என்ற செய்தியை தாங்கிவந்தது நிறப்பிரிகை ரவிக்குமார் – பா. ஜெயப்பிரகாசம் ஆகியோரின் தகவல்.
எமது அனைத்து உறவுகளுக்கும் உழவர் திருநாளாம் தை பொங்கல் வாழ்த்துக்கள்
தமிழக கரையோரம் வகை தொகையின்றி திமிங்கிலங்கள் இறந்து ஒதுங்கும் மர்மம்
திருச்செந்தூர் அருகே கல்லாமொழி முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை பகுதியில் 95 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. 45 இறந்து விட்டன. மற்றவற்றை கடலில் கொண்டு விடும் முயற்சி நடைபெறுகிறது. ஆனால் அவை உயிர் பிழைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தூத்துக்குடி மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி மனோஜ்குமார், மீன் வளக் கல்லூரி பேராசிரியர் சீனிவாசன், சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சி யாளர்கள் ஜி.மேத்யூ, கே.திரவியராஜ், மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின பூங்கா வனப்பாது காவலர் தீபக் எஸ்.பில்ஜி ஆகியோர் மணப்பாடு கடற்கரையில் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
(“தமிழக கரையோரம் வகை தொகையின்றி திமிங்கிலங்கள் இறந்து ஒதுங்கும் மர்மம்” தொடர்ந்து வாசிக்க…)
எமது இனிய உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
மாகாண அரசிற்கான அதிகாரங்களை தாருங்கள் இல்லாவிட்டால் நாங்கள் அதை எடுத்துக்கொள்வோம் – பத்மநாபா(1989 ல்)
அமரர் பத்மநாபா தொடர்பாக வருடத்தில் இருமுறை மட்டுமே அதிகம் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. ஒன்று நவம்பர் 19 அவரது பிறந்த நாள், இரண்டு ஜூன் 19 அவரது இறந்த நாள். 1985 திம்பு பேச்சுகளுக்கு பின்னரான காலப்பகுதியில் திரு பத்மநாபா அவர்கள் அவரது அமைப்பை சேர்ந்த ஒரு சில முக்கியமானவர்களை வருடத்திற்கு ஒரு தடவை அல்லது இரு தடவைகள் நட்சத்திர ஹோட்டல்களுக்கு உணவருந்த அழைத்துச் செல்வது வழக்கம்.
எமது இனிய உறவுகளுக்கு நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்
தமிழருக்கான சாத்தியமான வழிமுறைகள்
அடையவே முடியாத மகாதேவிக்காக வாளைத் தூக்கி வீசிக் கொண்டிருப்பதைவிடவும் அடைய முடிந்த ஸ்ரீதேவிக்காக கைகளை நீட்டலாம் என்பதைப் போல் சாத்தியமான வழிமுறைகளைக் குறித்துச் சிந்தியுங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் 2011களில் நாடு முழுவதும் பேசி வந்தார்.
தமிழகத்தில் (சென்னையில் ) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடத்தை கொடுத்து விட்டு சாலையில் தொழுகை நடத்தும் இஸ்லாமிய சகோதரர்கள்.
ஊவா மாகாண ஆசிரிய உதவியாளர்கள் நீதி கேட்க தயாராகின்றனர்
ஊவா மாகாண ஆசிரிய உதவியாளர்கள் எதிர்கொண்டுள்ள குறிப்பான பிரச்சினைகள் மற்றும் ஆசிரிய உதவியாளர்களின் பொதுவான பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்களை பதுளை மற்றும் அப்புத்தளை பிரதேச ஆசிரிய உதவியாளர்கள் முறையே இம்மாதம் 25 மற்றும் 29ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கலந்துரையாடல்களுக்கு மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கருத்துரை வழங்க வரவழைக்கப்பட்டிருந்தார். இதன் போது இரு பிரதேசங்களுக்குமான ஆசிரிய உதவியாளர்களும் செயற்குழுக்களை அமைத்துக் கொண்டுள்ளதுடன், ஊவா மாகண கல்வி அமைச்சு ஆசிரிய உதவியாளர் கொடுப்பனவில் குறைப்பை செய்வதற்கு எடுத்து வரும் நடவடிக்கையை மீளப் பெற்றுக் கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
(“ஊவா மாகாண ஆசிரிய உதவியாளர்கள் நீதி கேட்க தயாராகின்றனர்” தொடர்ந்து வாசிக்க…)