என்னமோ சொல்லுறாங்க பொட்டம்மான்….. விநாயகம்….. கோதபாயா…. என்று

காணாமற்போயிருந்ததாக கூறப்பட்ட விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் விநாயகத்தின் குடும்பம் எப்படி யாழ்ப்பாணத்திற்கு வந்தது விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையில் முக்கிய பங்காற்றி வந்தவர் விநாயகம். புலிகள் பலமுற்றிருந்த காலத்தில் தலைமையின் பணிப்பில் கிளிநொச்சியில் இருந்து இயங்கிய இந்த விநாயகம், அப்போது கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு முக்கிய பொறுப்பு வகித்திருந்தார். விடுதலைப்புலிகளால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நகர்வுகளுக்கான ஆளனிகளுக்கு பயிற்சிகளை வழங்கும் பொறுப்புக்கள் இவருக்கு தலைமையினால் வழங்கப்பட்டிருந்தது.

(“என்னமோ சொல்லுறாங்க பொட்டம்மான்….. விநாயகம்….. கோதபாயா…. என்று” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளுக்கு பிள்ளையான் வைக்கும் ஆப்பு….?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிள்ளையானின் உதவியை நாடியதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

(“புலிகளுக்கு பிள்ளையான் வைக்கும் ஆப்பு….?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர்களின் பூப்புனித நீராட்டு விழாவில் கைவைக்கும் கண்சவேட்டிவ் அரசு? குழப்பத்தில் கனடாத் தமிழ் பெற்றோர்கள்!!

கனடாவில் அண்மையில் அரசினால் ஒரு தொலைபேசி கொட்லைன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி உங்களின் பகுதியிலோ, அயல்வீட்டிலோ இடம்பெறும் காட்டுமிராண்டித்தனமான மத நடைமுறைகள் பற்றிய தகவல்களை பொலிசிற்கு அறியத்தரலாம். இளவயதுத் திருமணம், சுண்ணத்துக் கல்யாணம் என்கிற சடங்குகளை இலக்குவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தொலைபேசி கொட்லைன் தொடர்பான அறிவித்தலை விடுத்த குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாந்தர் அவர்கள் “கனேடியர்கள் தங்களின் கலாச்சார வலுக்களிற்காக துணிந்து செயற்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

(“தமிழர்களின் பூப்புனித நீராட்டு விழாவில் கைவைக்கும் கண்சவேட்டிவ் அரசு? குழப்பத்தில் கனடாத் தமிழ் பெற்றோர்கள்!!” தொடர்ந்து வாசிக்க…)

கனடிய பாராளுமன்றத் தேர்தல். யாருக்கு வாக்களிப்பது

நாளைக்கு கனடிய பாராளுமன்றத் தேர்தல். யாருக்கு வாக்களிப்பது என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது. மிகவும் மோசமான பொருளாதார வீழ்ச்சியை கனடா எதிர்நோக்குகின்றது. என்.டி.பி கட்சி மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. சிறுபான்மை மக்களின் நலனிலும் அதிக அக்கறை செலுத்துகின்றது. சட்டங்கள் சி 24, சி 51ஐ முற்றாக நிராகரிக்கின்றது. இவர்களது வரவு செலவு திட்ட சமநிலை சாத்தியப்படுமா என்ற ஐயமே உள்ளது. என்.டி.பி கட்சி முதன்மை குடிகளின் நலனிற்கும் உரிமைக்கும் முக்கியத்துவமளிக்கின்றது. லிபரல் கட்சியும் அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கும் எனக் கூறுகின்றது. சி24ஐ முற்றாக நிராகரித்தாலும் சி51 ஐ திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறியமை ஏமாற்றமளிக்கின்றது.

(“கனடிய பாராளுமன்றத் தேர்தல். யாருக்கு வாக்களிப்பது” தொடர்ந்து வாசிக்க…)

நாம் மரணத்தைக் கொண்டாடுபவர்கள் அல்ல ஆனால் ….?

இந்திய இராணுவத்தின் வருகைக்கு முன்னரே புலிகளின் பாசிச வெறிக்கு ஏனைய இயக்க உறுப்பினர்கள் பலியாகினர். கபூர் 83 இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு வடக்கில் வந்து வாழ்ந்தவர், கபூர் ஒரு உன்னதமான போராளி. முற்போக்கு சிந்தனை கொண்டவர். கபூரின் குடும்பமே அப்படித்தான். கபூரின் இயற்பெயர் பாலசுப்பிரமணியம். ஈ பி ஆர் எல் எஃப் தடை செய்யப்பட்ட வேளையில் தோழர் கபூர் புலிகள் இயக்கத்தால் கடத்திச் செல்லப்பட்டார்.

(“நாம் மரணத்தைக் கொண்டாடுபவர்கள் அல்ல ஆனால் ….?” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு கிழக்கு இணைப்பை இந்தியா தான் செய்யவேண்டும்!?

(மாதவன் சஞ்சயன்)

அண்மையில் இணையத்தளம் ஒன்றிற்கு வட மாகாண சபை முதல்வர் கொடுத்த பேட்டியில், வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர், தற்சமயம் அது சாத்தியம் இல்லை. இந்தியா தலையிட்டு ஸ்ரீலங்கா வை சம்மதிக்க வைத்தால் அது சாத்தியம் என கூறினார். 1987ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்த பிரதேசங்கள், என்ற விடயம் பந்தி 1-4 ல் உள்ளது. அதனை உள்ளடக்க ஜே ஆர் சம்மதம் பெற இந்தியா செய்த விட்டுக் கொடுப்பே, பந்தி 2.3ல் உள்ள 31-12-19988 க்கு முன் வடக்குடன் தொடர்ந்தும் இணைந்து இருக்க வேண்டுமா என, கிழக்கில் மட்டும் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தும் விடயம். அதுவரை அவை இரண்டும் ஜே ஆர் ஆல் தற்காலிகமாக இணைக்கப்பட்டன.

(“வடக்கு கிழக்கு இணைப்பை இந்தியா தான் செய்யவேண்டும்!?” தொடர்ந்து வாசிக்க…)

எத்தனை நல்ல மனிதர்களை,எழுத்தாளர்களை, கல்விமான்களை . மனித நேயம் கொண்டவர்களை இழந்துவிட்டோம்.

 

எத்தனை நல்ல மனிதர்களை,எழுத்தாளர்களை, கல்விமான்களை . மனித நேயம் கொண்டவர்களை இழந்துவிட்டோம். போராட்டம் என்ற பெயரில் எல்லோரையும் புலிப் பாசிசம் அழித்துவிட்டது. துரோகிகள் பட்டம் சூட்டி அவர்களை அழித்த புலிப்பாசிசம் தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்தது? யாராவது சொல்லுங்கள்? சின்னபாலாவை எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும். தோழர் நக்கீரன் வீட்டில் பலதடவை அவரைச் சந்தித்திருக்கிறேன். பால நடராஜ ஐயர். ஊருக்குள் பாலா ஐயா என்றுதான் அவரை அழைப்பார்கள். அவருக்கு சின்ன பாலா என்று பெயர் வரக் காரணம் அவர் ஈரோஸ் இயக்க உறுப்பினராக இருந்தவர். பாலகுமாரும் இருந்த காரணத்தால் இவரைச் சின்னபாலா என்று அழைத்தனர்.

(“எத்தனை நல்ல மனிதர்களை,எழுத்தாளர்களை, கல்விமான்களை . மனித நேயம் கொண்டவர்களை இழந்துவிட்டோம்.” தொடர்ந்து வாசிக்க…)

சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய சமூகப் போராளி தோழர் தங்கவடிவேல் மாஸ்ரர்

 

சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய சமூகப் போராளி தோழர் தங்கவடிவேல் மாஸ்ரர் அவர்களின் நினைவு தொடர்பாகச் சகதோழர்கள் கம்பர்மலை பொன் கந்தையா சனசமூகநிலையத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு வெளியிடவிருந்த நூலின் வெளியீடு சாதிவெறி பிடித்த விசமிகளால் கொலை மிரட்டல் விடப்பட்டுத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அறுபதுகளில் இருந்து சாதிய எதிர்ப்புப் போராட்டங்களில் முனைப்போடு ஈடுபட்ட தோழரின் பணிகள் குறித்த நூலே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டது. யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பீடாதிபதியான சாதித் தடிப்பு மிக்க பேராசிரியர் ஒருவரே இதற்குக் காரணம் என ஊர்த்தகவல்கள் கூறுகின்றன. தோழரின் குடும்பமும் இந்தத் தடிப்புப் பேராசிரியருக்கு விலைபோகியுள்ளன. தோழரின் லண்டன் வாசியான மருமகனாரும் பேராசிரியரும் ஒரே மேசைக் குடிகாரர் என்பதால் மருமகனார் வெளியீட்டுக்கு வழக்குத்தாக்கல் செய்வேன் என பேராசிரியரின் தடித்த ஆலோசனையுடன் ஊர்முழுக்கத் தொலைபேசியில் கூறியுள்ளார். வெளிநாட்டுப் பணமோகத்தில் திளைக்கும் தோழரின் குடும்பம் தோழர் ஊருக்கே சேவை செய்தார், எங்களுக்கு ஒன்றும் கிழிக்கவில்லை, அவருக்குப் புத்தகம் எதற்கு? என்று கொந்தளித்து எழுகின்றனர். தோழரின் மகன் புத்தகத்துக்கு வரைந்த ஓவியத்துக்கு காவாலியின் ஓவியத்தைப் போட்டதாக லண்டனில் இருக்கும் மருமகன் கடும் வெறியில் தூசணத்தால் தொலைபேசியில் கொட்டித் தீர்த்திருக்கிறார். கம்பர்மலையில் உள்ள சில சக்திகளும் இந்த வெளியீட்டைக் குழப்பிக் கலாட்டா பண்ண தடித்த பீடாதிபதிப் பேராசிரியரின் கபடத்தனத்துக்குத் துணைபோயுள்ளன. குடும்பத்தினரும் ஒரு கலாட்டாக் கும்பலை பணம் கொடுத்து வெளியீட்டைக் குழப்ப என்று இறக்கியுள்ளனர். நல்ல நோக்கத்திற்காக நூலை வெளியிட முயன்ற தோழர்களின் கை சாதிவெறி பேராசிரியராலும் அவருக்கு அடிவருடுவோராலும் கட்டிப்போடப்பட்டுள்ளன.(Arun Ambalavanar)

அயோக்கியர்களின் இறுதி ஆயுதம்…..

தமிழ் நாட்டு கலை வியாபாரக் கூத்தாடிகளின் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கூத்துக்கள் மக்களின் அன்றாட வாழ்வோடு தொடர்பற்ற கனவுலகத்தின் குத்துவெட்டுக்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கலையை வெறும் நுகர்வுப் பண்டமாக மாற்றியதில் கோப்ரட் சினிமாவிற்குப் பெரும் பங்குண்டு. அதிலும் மக்களின் அன்றாட வாழ்க்கையை சினிமாவோடு கட்டிப் போடும் அளவிற்கு இந்திய சினிமாக் கூத்தாடிகள் செல்வாக்குச் செலுத்துகின்றனர்.

(“அயோக்கியர்களின் இறுதி ஆயுதம்…..” தொடர்ந்து வாசிக்க…)

நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் அமோக வெற்றி

நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் மற்றும் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட கார்த்தி ஆகியோர் அமோக வெற்றி பெற்றுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. ஏராளமான நடிகர், நடிகைகள் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம் உள்பட முன்னணி நடிகர்களும், நாடக நடிகர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற தேர்தலில் 1,824 நேரடி வாக்குகளும், 783 தபால் மூல வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தல் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகமான அளவில் வாக்குப்பதிவு நடந்தது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.