சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய சமூகப் போராளி தோழர் தங்கவடிவேல் மாஸ்ரர்

 

சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய சமூகப் போராளி தோழர் தங்கவடிவேல் மாஸ்ரர் அவர்களின் நினைவு தொடர்பாகச் சகதோழர்கள் கம்பர்மலை பொன் கந்தையா சனசமூகநிலையத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு வெளியிடவிருந்த நூலின் வெளியீடு சாதிவெறி பிடித்த விசமிகளால் கொலை மிரட்டல் விடப்பட்டுத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அறுபதுகளில் இருந்து சாதிய எதிர்ப்புப் போராட்டங்களில் முனைப்போடு ஈடுபட்ட தோழரின் பணிகள் குறித்த நூலே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டது. யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பீடாதிபதியான சாதித் தடிப்பு மிக்க பேராசிரியர் ஒருவரே இதற்குக் காரணம் என ஊர்த்தகவல்கள் கூறுகின்றன. தோழரின் குடும்பமும் இந்தத் தடிப்புப் பேராசிரியருக்கு விலைபோகியுள்ளன. தோழரின் லண்டன் வாசியான மருமகனாரும் பேராசிரியரும் ஒரே மேசைக் குடிகாரர் என்பதால் மருமகனார் வெளியீட்டுக்கு வழக்குத்தாக்கல் செய்வேன் என பேராசிரியரின் தடித்த ஆலோசனையுடன் ஊர்முழுக்கத் தொலைபேசியில் கூறியுள்ளார். வெளிநாட்டுப் பணமோகத்தில் திளைக்கும் தோழரின் குடும்பம் தோழர் ஊருக்கே சேவை செய்தார், எங்களுக்கு ஒன்றும் கிழிக்கவில்லை, அவருக்குப் புத்தகம் எதற்கு? என்று கொந்தளித்து எழுகின்றனர். தோழரின் மகன் புத்தகத்துக்கு வரைந்த ஓவியத்துக்கு காவாலியின் ஓவியத்தைப் போட்டதாக லண்டனில் இருக்கும் மருமகன் கடும் வெறியில் தூசணத்தால் தொலைபேசியில் கொட்டித் தீர்த்திருக்கிறார். கம்பர்மலையில் உள்ள சில சக்திகளும் இந்த வெளியீட்டைக் குழப்பிக் கலாட்டா பண்ண தடித்த பீடாதிபதிப் பேராசிரியரின் கபடத்தனத்துக்குத் துணைபோயுள்ளன. குடும்பத்தினரும் ஒரு கலாட்டாக் கும்பலை பணம் கொடுத்து வெளியீட்டைக் குழப்ப என்று இறக்கியுள்ளனர். நல்ல நோக்கத்திற்காக நூலை வெளியிட முயன்ற தோழர்களின் கை சாதிவெறி பேராசிரியராலும் அவருக்கு அடிவருடுவோராலும் கட்டிப்போடப்பட்டுள்ளன.(Arun Ambalavanar)