(சாகரன்)
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று நம்பப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் செயற்பாட்டிற்குள் தன்னை இறுக்கமாக பிணைத்துக் கொண்டுள்ளது.
The Formula
இந்நாட்டின் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பில் இதற்கு முன்னர் ஒருமுறை அனுபவம் இருக்கின்றபோதும் இம்முறை இது விசேடமாகக் காணப்படுகிறது. இதற்கு முன்னர் 1993ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச மறைந்ததைத் தொடர்ந்து அப்போதைய பதில் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க, பிரேமதாசவின் எஞ்சிய காலத்துக்காக வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். ஆனால் இம்முறை வேட்பாளர்கள் சிலர் போட்டியிட இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருப்பதால் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியிருக்கும். அப்படியாயின் அது எமது நாட்டின் வரலாற்றில் புதிய அனுபவமாக இருக்கும்.
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான மூவர், இடைக்கால ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் டளஸ் அழகபெருமவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரே இவ்வாறு தீர்மானித்துள்ளனர். இதுதொடர்பில், இன்று (19) நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.
இலங்கையில் வெற்றிடமாகியுள்ள அடுத்த ஜனாதிபதி பதவிக்கு மூவர் போட்டியிடுவதுடன், அவர்களில் பெயர்கள் உத்தியோகபூர்வமாக பாராளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாளை அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.
(என்.கே. அஷோக்பரன்)
அரசியலமைப்பின் 38(1)(ஆ) சரத்தின் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்ததன்படி, இலங்கையின் ஜனாதிபதி பதவி வெற்றிடமானது. இதனைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் 40(1)(இ) சரத்தின் படி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பின் படி, கோட்டாபய விட்டுச்சென்றுள்ள மிகுதிப் பதவிக்காலத்திற்காக அடுத்த ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை, பதில் ஜனாதிபதியாகியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள் இன்று(18) பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, போராட்டக்காரர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்
எரிபொருள் விலை குறைப்புடன் இரண்டாவது கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணம் 100 ரூபாயிலிருந்து 90 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முதல் கிலோமீட்டருக்கு தற்போதுள்ள 100 ரூபாய் கட்டணத்தை எந்த வகையிலும் மாற்ற முடியாது என அதன் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.