ஜனாதிபதி பதவிக்கு மூவர் போட்டி

இலங்கையில் வெற்றிடமாகியுள்ள அடுத்த ஜனாதிபதி பதவிக்கு மூவர் போட்டியிடுவதுடன், அவர்களில் பெயர்கள் உத்தியோகபூர்வமாக பாராளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாளை அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.