பாராளுமன்றம் உடன் கலைக்கப்பட வேண்டும்: சுமந்திரன்

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஜனாதிபதியை வைத்துக்கொண்டு நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. ஆகவே  அவரை பதவியில் இருந்து விலகச் செய்ய வேண்டும் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். 

’இந்தியாவைத் தவிர எவரும் உதவத் தயாரில்லை’

உணவு, மருந்து பொருட்கள், உரம் ஆகியவற்றை கொள்வனவு செய்ய வெளிநாடுகள் உதவி கிடைத்தாலும், எரிபொருள், நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்ய இந்தியாவை தவிர வேறு எந்த நாடும்  இலங்கைக்கு உதவத்  தயாராக இல்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த நிலைமையில் இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கு இந்தியாவிலும் ஒரு தரப்பினர் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவதாகவும் சபையில் தெரிவித்திருந்தார்.

’ஜனாதிபதிக்கு அரசியல் அறிவும் புரிதலும் இல்லை’

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தோல்வியுற்ற தலைவராக இருந்து விலக விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதிக்கு அரசியல் அறிவும் புரிதலும் இல்லை என்று தெரிவித்தார்.

’ஐ.எம்.எப் க்கு பின்னால் சென்றாலும் டொலர் கிடைக்காது’

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்திற்கு (ஐ.எம்.எப்)பின்னால் செல்வதால் எதுவுமே நடக்கப்போவதில்லை. எமக்கு டொலர் கிடைக்கப்போவதுமில்லை. எனவே எமது நட்பு நாடுகளின் உதவியை நாட வேண்டும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். 

பிரதமரின் ‘பாகற்காய் உரை’

தவறிக் கீழே விழுந்துவிட்டவர் மீண்டெழ வேண்டும். ஆகக் குறைந்தது எழும்புவதற்கு முயற்சி செய்தாகவேண்டும். அப்போதுதான் அருகில் இருப்பவர்கள் கையைப் பிடித்து தூக்கிவிடுவர். முயற்சி செய்யாவிடின் இலகுவான காரியங்கள் கூட, முடியாமல் போய்விடும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் ஊக்கப்படுத்தமாட்டார்கள். இறுதியில் முடியாமலே போய்விடும்.

இந்தியா மீது தற்கொலை தாக்குதல் நடத்துவோம்:அல்கொய்தா

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என அல்கொய்தா பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.  

யாழ்.குடா நாட்டில் விசேட சுற்றிவளைப்பு

யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் இன்றைய தினம் யாழ்.குடா நாட்டில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

பதவியை துறக்கிறார் பசில்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமுன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ, தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னரே, அவர் தனது தேசியப் பட்டியல் எம்.பி பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீர்குலைந்ததுள்ள சீனா பொருளாதாரம்

தற்போதும் உலகத்தையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் கொரோனவின் தாயகம், சீனாவாகுமென்பது உண்மையாகும். எனினும், அதனை சீனா முழுமையாகவே மறுத்து இருந்ததுடன், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகளையும் அங்கு செல்வதற்கு இடமளிக்கவில்லை. 

உலக உணவு நெருக்கடி: அடுப்பிலிருந்து நெருப்புக்குள் இலங்கை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை, இலங்கையர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். ஆனால், இது வெறும் தொடக்கம் மட்டுமே என்பது போலவே, நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.