கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 171 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 102 ஆண்களும் 69 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 134 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 35 பேர் மரணித்துள்ளனர். 30 வயதுக்குக் கீழ் 2 பேர் மரணித்துள்ளார்.
ஐ. அமெரிக்க வெளியேற்றம்: நியாயப்படுத்தும் பைடன்
தலிபான்களின் அதிரடி அறிவிப்பு
பெண்களை தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு தலிபான்கள் வலியுறுத்து
பிணவறைகள் நிரம்பின: டயர்களை போட்டு எரிக்க முடிவு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. பாணந்துறை வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் மரணிப்போரின் சடலங்களை அப்புறுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பிணவறைகள் நிரம்பிவழிகின்றன. “ஆகையால், சலங்களை ஓரிடத்தில் வைத்து டயர்களைப் போட்டு எரியூட்டுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என பாணந்துறை நகர சபையின் தவிசாளர் நந்தன குணத்திலக்க தெரிவித்தார்.
இலங்கை: கொரனா செய்திகள்
நாட்டில் மேலும் 2,428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 368,011 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,188 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 316,528 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 44,720 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதேவேளை, மேலும் 171 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 6,434 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய மாகாணத்தில் 45,000 கொரோனா தொற்றாளர்கள்
தலிபான் ஆட்சி எவ்வாறு அமையும்?
ஹட்டன் நகரையும் முடக்கத் தீர்மானம்
நியூசிலாந்தில் முழு முடக்கம்
ஒரு புதிய கொவிட் -19 இனங்காணப்பட்டதை அடுத்து, நாடு தழுவிய முழுமையான பூட்டுதலை நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்தார். இந்த புதிய தொற்றாளர்கள் ஒக்லாந்தில் இனங்காணப்பட்டார் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.