பிணவறைகள் நிரம்பின: டயர்களை போட்டு எரிக்க முடிவு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. பாணந்துறை வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் மரணிப்போரின் சடலங்களை அப்புறுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பிணவறைகள் நிரம்பிவழிகின்றன. “ஆகையால், சலங்களை ஓரிடத்தில் வைத்து டயர்களைப் போட்டு எரியூட்டுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என பாணந்துறை நகர சபையின் தவிசாளர் நந்தன குணத்திலக்க தெரிவித்தார்.