ஹாட்ரி இஸ்மாயில் (Qadri Ismail) காலமானார்!

(Maniam Shanmugam)

இலங்கையின் பிரசித்தி பெற்ற ஆங்கில மொழி ஊடகவியலாளரும், அமெரிக்காவின் மின்னெஸோரா (Minnesota) பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஹாட்ரி இஸ்மாயில் திடீரென காலமான செய்தி வந்து கிடைத்துள்ளது.அவரைப் பற்றி நான் ‘தேனீ’ இணையத்தளத்தில் புலிகளின் வதை முகாமில் எனது அனுபவங்கள் பற்றி எழுதிவந்த கட்டுரைத் தொடரில் 23.09.2012இல் எழுதிய குறிப்பைக் கீழே தந்துள்ளேன். அவரது மறைவுக்கு எனது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் குறையும் கொரோனா

தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது.இதேவேளை, சென்னையில் 24 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 75,365 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 21,410 பேருக்கு கொரோனா உறுதியானதெனக் கூறப்பட்டு உள்ளது.

யாழ்ப்பாண நூலக எரிப்பின் நாற்பதாண்டுகள்: கற்றுக் கொள்ளாத பாடங்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு, 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் அதன் அவலத்தை, நாங்கள் ஒப்பாரியாக ஆண்டுதோறும் நினைவுகூர்ந்தபடி கடத்துகிறோம். திரும்பிப் பார்க்கையில் இந்த நூலகமும் அதன் எரிப்பும் அதைத் தொடர்ந்த சிதைவும், வலி நிறைந்த கசப்பான உண்மை ஒன்றைச் சொல்கின்றன.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் மேலும் 814 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கையிட்டுள்ளது. அந்தவகையில், இன்று 3,094 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோரின் எண்ணிக்கை 202,357ஆக அதிகரித்துள்ளது.  

நாக்கு சுட்டு சேர்க்கும் முட்டாள்தனம்

நாவுக்கு ருசியாக சாப்பிடுவதற்கு ஒன்றுமே கிடைப்பதில்லை, அசைவத்தை கண்டு பல நாள்களாகின்றன என புலம்பிக்கொண்டிருப்போர் இருக்கையில், இருப்பதை வைத்து சமாளித்து வாழ்க்கையை நகர்த்துவோரும் இருக்கத்தான் செய்கின்றனர். இன்னும் சிலர், நாக்கு செத்துவிட்டது என்பர்.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்று நிலையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ளது. இந்தக் கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 14 ஆம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. இந்த நிலையில், பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மதித்து பொதுமக்கள் வீடுகளில் இருந்தால் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னர் நாட்டினை திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா! (கடிதத் தொடர் – 8)


2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனை முதலமைச்சராக கொண்டு வடக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கியதை அடுத்து ஒரு சில மாதங்களுக்குள் எழுதப்பட்டதே இக்கடிதத் தொடர். இதில் 12 கடிதங்கள் உள்ளன. இவை முன்னர் ஈ.பி.ஆர.எல்.எவ்.நெற்.கொம், சூத்திரம்.கொம், தேனீ.கொம் ஆகிய இணையத் தளங்களில் வெளியிடப்பட்டவை. இக்கடிதங்கள் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் சமூக விடயங்களோடு தொடர்பு பட்டவர்களின் கவனிப்புக்கும் கருத்;துக்கும் பொருத்தமானவை என்று கருதுகிறேன் . எனவே இக்கடிதத் தொடரை இங்கு ஒவ்வொன்றாக மீள்பதிவு செய்கிறேன்.

இலங்கை: கொரனா செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 71 கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  கொரோனா ஒழிப்பு கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் நேற்று மாலை வரை ஒரே நாளில் 84 குடும்பங்களைச் சேர்ந்த 103 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிவப்பு பட்டியலில் இலங்கை இணைப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து காணப்படும் நாடுகள் தொடர்பான சிவப்பு பட்டியலில் இலங்கையின் பெயரையும், பிரித்தானியா உள்ளடக்கியுள்ளது. ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கொஸ்டாரிகா, எகிப்து, இலங்கை, சூடான் மற்றும் டிரினிடாட் – டொபாகோ ஆகிய 07 நாடுகளே இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 8ம் திகதி முதல் இலங்கையின் பெயர் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவொரு நாட்டுக்கும் பிரித்தானிய பிரஜைகள் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.